http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[176 Issues]
[1745 Articles]
Home About US Temples Facebook
Issue No. 176

இதழ் 176
[ மார்ச் 2024 ]


இந்த இதழில்..
In this Issue..

சங்கப் பாடல்களில் பெண் தொழில்முனைவோர்
வலஞ்சுழி வாணர் கோயில் கல்வெட்டுகள் - 3
கீழ்வேளூர் மாடக்கோயில் - 2
ஜப்பானியப் பழங்குறுநூறு - 66 (எனக்கெனவே மலர்ந்தாயோ?)
ஜப்பானியப் பழங்குறுநூறு - 65 (அலரினும் கொடிது உண்டோ?)
ஜப்பானியப் பழங்குறுநூறு - 64 (பனிவிலகலில் அக்கரை வெண்மை)
ஜப்பானியப் பழங்குறுநூறு - 63 (காவலும் தாண்டுவது காதல்)
இதழ் எண். 176 > இலக்கியச் சுவை
ஜப்பானியப் பழங்குறுநூறு - 66 (எனக்கெனவே மலர்ந்தாயோ?)
ச. கமலக்கண்ணன்

மூலப்பாடம்:

கான்ஜி எழுத்துருக்களில்
もろともに
あはれと思へ
山桜
花よりほかに
知る人もなし

கனா எழுத்துருக்களில்
もろともに
あはれとおもへ
やまざくら
はなよりほかに
しるひともなし

ஆசிரியர் குறிப்பு:

பெயர்: மதகுரு க்யோசொன்

காலம்: கி.பி 1055-1135.

இவர் தனது 10 வயதில் தந்தையை இழந்து 12 வயதில் துறவியானவர். மிக்யோ எனும் புத்தமதப் பிரிவில் சேர்ந்த இவர், தற்போதைய ஷிகா மாகாணத்தின் ஓமினே மற்றும் குமானோ மலைத்தொடர்களில் ஷூகெந்தோ எனப்படும் கடுமையான பயிற்சிகளை மேற்கொண்டார். பல ஆண்டுகள் தொடர்ந்த பயிற்சிக்குப் பின்னர் தெந்தாய் என்ற புத்தமதப் பிரிவுக்குத் தலைவரானார். பேரரசார் டோபா அரியணை ஏறியபோது அரசவையின் தலைமை மதகுருவாக நியமிக்கப்பட்டார். அரசவையில் சிலருக்குத் தீர்க்கமுடியாத சில நோய்களைப் பிரார்த்தனைகளால் குணப்படுத்தியதால் மிகவும் புகழ்பெற்றார். அரசவையிலிருந்து ஓய்வு பெற்றபின்னர் கவிஞராக வாழ்க்கையைத் தொடர்ந்தார். தனது 81வது வயதில் இறந்தார். ஜப்பானிய இலக்கியத்துக்கு இவரது பங்களிப்பாக 48 பாடல்கள் இடம்பெற்றிருக்கின்றன.

பாடுபொருள்: தனிமைக்குத் துணையாதல்

பாடலின் பொருள்: ஏ! அழகிய சக்குரா மலரே! என் தனிமையைப் போக்கவே நீ வந்தாயோ? உனக்கு யாரும் துணையில்லாமல் தனிமையில் பூத்திருப்பதுபோல் எனக்கும் யாரும் துணையில்லை.

இயற்கையை வியக்கும் ஓர் எளிய பாடல். அந்நாளில் புத்தமதத் துறவிகள் பிரார்த்தனையின்மூலம் நோய்களைக் குணப்படுத்துவதற்காகக் கடுமையான பயிற்சிகளை மேற்கொள்வார்கள். அதன் ஒரு பகுதியாகப் பல ஆண்டுகள் தொடர்ந்து மனிதர்களையே காணக்கூடாது. இப்பயிற்சி பெண்களுக்கு அனுமதிக்கப்பட்டதில்லை. ஓமினே மலைத்தொடரில் தனிமையில் கடுமையான பயிற்சிக்கிடையில் ஓய்வு தேவைப்படும் நேரத்தில் திடீரென்று ஒரு காட்டுப்பூ கண் சிமிட்டினால் ஏற்படும் புத்துணர்ச்சியால் இயற்றப்பட்டது இப்பாடல் என்று கூறுகிறார்கள். யாரும் காணாத அழகு தன் கண்களுக்கு மட்டும் விருந்தாகிறதே என்ற உணர்வு நிச்சயம் புத்துணர்ச்சியைத்தான் தரும்.

வெண்பா:

தனிமையில் வாடிடும் உன்னிதழால் என்னை
இனிமையில் மூழ்கிட வைத்த - வனிதையும்
நீயே மலைக்காட்டில் புத்துணர்வு தந்தாயே
யாரும் ரசிக்கா மலர்

(மீண்டும் அடுத்த தான்காவில் சந்திப்போம்)

இக்கட்டுரை சொல்வனம் இதழில் வெளியானது.
       
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.