http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[176 Issues]
[1745 Articles]
Home About US Temples Facebook
Issue No. 97

இதழ் 97
[ ஜூலை 2013 ]


இந்த இதழில்..
In this Issue..

காவிரிக் கரையிலோர் காவியக் கற்றளி - 3
Thirumeyyam - 3
தேடலில் தெறித்தவை - 4
சேக்கிழாரும் அவர் காலமும் - 5
புத்தகத் தெருக்களில் - நான் மற்றும் சடச்சி மக்களும்
இதழ் எண். 97 > நூல்முகம்
புத்தகத் தெருக்களில் - நான் மற்றும் சடச்சி மக்களும்
ரிஷியா

வரலாற்று நாவல்கள் எழுதுவது என்பது ஒரு கலை. வரலாற்று நாவல் களத்தில் நாம் சந்திப்பவர்கள் எல்லோரும் மன்னாதி மன்னர்கள், பேரரசிகள், பட்டத்து இளவரசர்கள், படைத்தளபதிகள் மற்றும் அவர்களின் வீரம், தியாகம், காதல், போர்கள், வெற்றி தோல்விகள் இவையே. வரலாற்றில், கல்வெட்டுகள் வழியே பெயர் பெற்றவர்களைப் போற்றி எழுதுவதே வரலாற்று நாவல்களின் மரபாய் உள்ளது. சாமானியர்கள் வெறும் படை வீரர்களாய், ஒற்றர்களாய், மெய்க்காப்பாளர்களாய், நடன மாந்தராய், தோழிகளாய், தேரோட்டிகளாய் வந்துவிட்டுப் போய்விடுவார்கள். சமூகம் மற்றும் சமூகவியல் சார்ந்து வரலாறு பேசும் ஒரு அருமையான கதைப்படைப்பே "காவல் கோட்டம்" நாவல். சரித்திரம் மாமதுரையின் வீதிகளில், வைகைக் கரையில் நடைபயிலும் அழகை நாம் இந்நாவலில் காணலாம்.

ஆறு நூற்றாண்டுகள் மதுரையின் வரலாற்று (கி.பி. 1310-1910) பின்புலத்தில் மலர்கிறது இந்த நீண்ட நெடுங்கதை.

திரு. சு. வெங்கடேசன் நம்மை வியக்க வைக்கிறார், இப்படியொரு வரலாற்று நாவலா என்று.

இதுவரை யாரும் செய்திடாத பெரும் பகீரத முயற்சி. மாலிக் காபூரின் பெரும் தென்னாட்டுப் படையெடுப்போடு தொடங்குகிறது இந்நாவல்,. படையெடுப்பில் காவல்காரனான கருப்பணன் கொல்லப்படுகிறான். அவன் பிள்ளைகளைக் கருவில் சுமக்கும் சடச்சி அமணமலை செல்கிறாள். அந்தப் பாறைக் களத்திலிருந்து துவங்குகிறது. காவல்காரர்களின் மரபு அழிவிற்குப் பின் குமார கம்பணனின் மதுரைப் படையெடுப்பு - அவன் அரசி கங்காதேவி - அவளின் "ஆனை குந்தியின் பகை முடிப்பேன்" என்ற வீரச் சபதம் - பாண்டியர்களின் குலவாள் - "சந்திரஹாசம்".

கங்காதேவி எடுத்த சபதத்தை வெற்றியுடன் நிறைவேற்றும் வீரமங்கையாகத் திகழ்கிறாள். அவளின் எண்ணச் சிதறலின் சில துளிகள் இங்கே.

"அறிந்த சரித்திரமே விசித்திரமானது. அறியாத உண்மைகள் எவ்வளவு இருக்கும் என்று சொல்ல நினைத்தவள், நிதானித்து அரசுகள் எழுவதும் வீழ்வதும் எதனால்? என்று கேட்டாள்.

ஒரு மாணவனைப் போல் கம்பணன் கேட்டான், "அரசுகள் எப்படி உருவாகின்றன?".

"உறுதியும், களவும் கொண்ட ஒருவன் பின்னால் அவன் குலம் திரளும்போது" (அவள் சொன்னாள்).

(தொடரும்)
this is txt file
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.