http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[176 Issues]
[1745 Articles]
Home About US Temples Facebook
Issue No. 97

இதழ் 97
[ ஜூலை 2013 ]


இந்த இதழில்..
In this Issue..

காவிரிக் கரையிலோர் காவியக் கற்றளி - 3
Thirumeyyam - 3
தேடலில் தெறித்தவை - 4
சேக்கிழாரும் அவர் காலமும் - 5
புத்தகத் தெருக்களில் - நான் மற்றும் சடச்சி மக்களும்
இதழ் எண். 97 > கலையும் ஆய்வும்
சேக்கிழாரும் அவர் காலமும் - 5
மா.இராசமாணிக்கனார்
(சென்ற இதழ்த் தொடர்ச்சி...)

கல்வெட்டுக்களில் கண்ட 'சேக்கிழார்' என்போர்

இனிப் பெரியபுராணம் பாடிய சேக்கிழார் கல்வெட்டுக்களில் இடம் பெற்றுள்ளனரா என்பதைக் காண்போம். இதுகாறும் கிடைத்துள்ள கல்வெட்டுக்களை ஆராயின் 'சேக்கிழார்' என்ற குடிப்பெயருடன் பலர் இருந்தமை வெளியாகும். அவர்களைப் பற்றிய விவரங்களைக் காலமுறைப்படி கீழே காண்க:












அரசன் பெயரும் ஆட்சிக் காலமும்கல்வெட்டுள்ள இடம்கல்வெட்டின் காலம்செயல்
1. கண்டராதித்தர் (கி.பி. 949-957)உடையார்குடிகி.பி. 954சேக்கிழான் அரையன் சங்கரநாராயணன் என்ற மணவிற்கோட்டத்து மேலப் பழுவூர்ச் சோழ முத்தரையன் நிலதானம் செய்தான்
2. பரகேசரி வர்மன்திருச்சோற்றுத்துறைமூன்றாம் ஆண்டுசேக்கிழான் சக்தி மலையன் என்ற மேலூர்க் கோட்டத்துக் காவனூர் சோழ முத்தரையன் விளக்குத் தானம் செய்தான் (183 of 1931)
3. குலோத்துங்கன் - 1 (கி.பி. 1070-1120)திருக்கழுக்குன்றம்கி.பி. 1092புரவுவரித் திணைக்களம் சேக்கிழார் ஆணைப்படி திருக்கழுக்குன்றத்திற்கு எல்லைகள் வகுக்கப்பட்டன (180 of 1894)
4. இராசராசன் - 2 (கி.பி. 1146-1173)திருமழபாடிகி.பி. 1162சயங்கொண்ட சோழமண்டலத்துக் குலோத்துங்கச் சோழவள நாடான புலியூர்க் கோட்டத்துக் குன்றத்தூர் நாட்டுக் குன்றத்தூர்ச் சேக்கிழான் மாதேவடிகள் ராமதேவனான உத்தம சோழப் பல்லவராயன் திருமழபாடி மகாதேவர்க்கு விளக்கு வைக்க 90 ஆடுகள் தந்தான் (95 of 1920)
5. குலோத்துங்கன் - 3திருஅரத்துறைகி.பி. 1164திருவரத்துறையிலிருந்து மாசி, வைகாசி காலங்களில் ஆளுடையபிள்ளையார் திருமேனியைத் திருமாறன்பாடிக்கு எடுத்துச் செல்கையில் பூசை முதலியவற்றுக்காகச் சேக்கிழான் பாலறாவாயன் களப்பாளராயன் வரியிலியாக நிலதானம் செய்தான் (221 of 1929)
6. குலோத்துங்கன் - 3கோட்டூர்கி.பி. 1179குன்றத்தூர்ச் சேக்கிழான் பாலறாவாயன் களப்பாளராயன் விளக்கு எரிக்கப் பணம் தந்தான் (445 of 1912)
7. குலோத்துங்கன் - 3திருக்கடையூர்கி.பி. 1181குன்றத்தூர்ச் சேக்கிழான் அம்மையப்பன் பராந்தகன் தேவனான கரிகால சோழப் பல்லவராயன் நிலதானம் செய்தான் (39 of 1906)
8. குலோத்துங்கன் - 3குன்றத்தூர்கி.பி. 1181சேக்கிழான் புவனப் பெருமான் என்ற துண்டக நாடு உடையான் மனைவி திருநாகேச்சரம் கோவில் சபையாரிடம் விளக்கெரிக்கப் பணம் தந்தாள் (230 of 1930)
9. இராசராசன் - 3 (கி.பி. 1216-1246)திருப்பாலைவனம்கி.பி. 1225குன்றத்தூர்ச் சேக்கிழான் பட்டிய தேவன் ஆட்கொண்டான் விளக்கு எரிக்க ஆடுகள் தானம் செய்தான் (314 of 1929)
10. இராசராசன் - 3திருப்பாசூர்கி.பி. 1226குன்றத்தூர்ச் சேக்கிழான் அரையன் ஆட்கொண்டதேவன் என்ற முனையதரையன் விளக்கு எரிக்கப் பசுக்கள் அளித்தான் (136 of 1930)
11. இராசராசன் - 3குன்றத்தூர்கி.பி. 1140குன்றத்தூர்ச் சேக்கிழான் வரந்தருபெருமாள் என்ற திருவூரகப் பெருமாள் திருநாகேச்சரம் கோவிலில் விளக்கு வைக்கப் பணம் தந்தான் (218 of 1930)
12. மாறவர்மன் குலசேகர பாண்டியன் (கி.பி. 1270-1305)குன்றத்தூர்கி.பி. 1300குன்றத்தூர்ச் சேக்கிழான் ஆடவல்லான் என்பவன் திருநாகேச்சரர்க்கு நிலதானம் செய்தான் (208 of 1930)


அந்தந்த அரசரையே சிறப்பாகக் குறிக்கும் தொடக்கத் தொடர்கள் மேற்காட்டிய கல்வெட்டுக்கள் பலவற்றில் இன்மை வருந்தற்குரியது. குலோத்துங்கர் திரிபுவன சக்கரவர்த்திகள் என்ற விருதுடன் மூவர் இருந்தனர். அங்ஙனம் அதே விருதுடன் இராசராசர் இருவர் இருந்தனர். இன்ன கல்வெட்டு இன்ன குலோத்துங்கரைத்தான் குறிக்கின்றது என்று சிறப்புத் தொடர்கள் இல்லாத கல்வெட்டுகள் கொண்டு திட்டமாகக் கூறற்கில்லை. ஆதலின், ஐயப்படத்தக்கவற்றுள், 1,2,3 இராவ்சாகிப் மு. இராகவையங்கார் கொண்ட முடிபை ஏற்றுக் குறிக்கப்பெற்றன - Vide his 'Sasana Tamil Kavi Charitam', pp. 71-77. மற்றவை பேராசிரியர் க. அ. நீலகண்ட சாத்திரியார் கொண்ட முடிபின்படி குறிக்கப்பெற்ற - Vide his 'Cholas', Vol II, Part II.

சேக்கிழார் மரபினர்

இக்கல்வெட்டுச் செய்திகளால் அறியப்படுவன :

1. சேக்கிழார் குடியினர் தொண்டை மண்டலத்து மணவிற் கோட்டம், மேலூர்க் கோட்டம், புலியூர்க் கோட்டங்களில் வாழ்ந்து வந்தனர்.
2. அக்குடியினர் 'சோழ முத்தரையன், உத்தம சோழப் பல்லவராயன், காளப்பாளராயன், கரிகால சோழப் பல்லவராயன், முனையதரையன்' என்ற பட்டங்கள் பெற்றுச் சோழர் அரசியலில் சிறந்த பங்கு கொண்டிருந்தனர்.
3. அங்ஙனம் அரசியலிற் பங்கு கொண்டவருள் குன்றத்தூர்ச் சேக்கிழார் மரபினரே பலர் ஆவர்.
4. இம்மரபினர், திருத்தொண்டர் புராண வரலாறுடையார் குறித்தபடி, சோழராட்சி முடியுமளவும் அதற்குப் பிறகும் அரசியற் பதவிகள் தாங்கியிருந்தனர்.
5. இம்மரபினர் சைவப்பற்றுடையவராய்ப் பல தளிகட்குத் தானம் செய்த பெருமக்களாவர்.

(தொடரும்)
this is txt file
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.