http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[176 Issues]
[1745 Articles]
Home About US Temples Facebook
Issue No. 34

இதழ் 34
[ ஏப்ரல் 16 - மே 15, 2007 ]


இந்த இதழில்..
In this Issue..

அரும்பொருட்களும் காட்சியகங்களும்
நாவல் படிக்கும் கலை
திரும்பிப் பார்க்கிறோம் - 6
கோயிற்கலை ஆய்வு நெறிமுறைகள் - 2
கொடுமணல் தாழியில் பழந் தமிழ்ச்சொற்கள்
ஹாய் மதனுக்குக் கடிதம் - வாசகர் கருத்துகள்
சங்கச்சாரல் - 17
இதழ் எண். 34 > இதரவை
ஹாய் மதனுக்குக் கடிதம் - வாசகர் கருத்துகள்
ஆசிரியர் குழு
சென்ற இதழில் வெளியாகியிருந்த ஹாய் மதனுக்கான கடிதத்துக்கு வாசகர்கள் தெரிவித்திருந்த கருத்துக்களின் ஒரு பகுதியை இங்கே வெளியிடுகிறோம். கருத்துக்களைப் பகிர்ந்து கொண்ட நேயர்கள் அனைவருக்கும் வரலாறு.காம் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.




1 jegadheesh.m

3/19/2007 11:58:45 PM


Excellent, but did you send this letter by post to madhan. I love him by his knowledge but as soon as i read about his answer i really got angry these over knowledge peoples don't like our history. You are right many peoples belive including me madhan is a good dictionary. But he should not talk like that. i want to register my angry but before that i tell you i went to palani with my buyer from switzerland and he asked how old the temple? i did ask the same to the priest and the answer is before 5000 years. My buyer laughed out and i was ashamed i don't know how we are going to solve this problem. Really you are doing a great job. I love you peoples who work for this great job. My hearty thanks to you peoples. Thank you very much for this site.




2 kalpana

3/20/2007 1:15:08 AM


kamal.. wat to say .."appadi podu aruvaaLai!" i was in anger on madan's answers. now i got satisfied with ur reply..
thanks




3 K.Kaleeswaran

3/20/2007 1:18:43 PM


To Mr.Kamalakannan, Sir, I strongly agree with your reply to Mr.Madhan.I was shocked when I read Madhan's answer to Iraiyanbu I.A.S.But I believed his answer.Your reply was an eye-opener. Mr.Madhan believes the writings of Ceaser and Babur but writes off the writings of Tamil Poets.It is unfortunate.




4 Chitra

3/20/2007 3:57:34 PM


Good Work. Expected such an article from somebody. Eventhough I know Madhan's answer is wrong, I don't have such a database to prove. I just want to know one more thing, Have you sent this information to Vikatan office so that they can publish in their books. Then only all the readers know this.




5 jagan

3/20/2007 9:00:54 PM


great !!!! and wonderful....




6 Ramani

3/21/2007 1:46:28 AM


Great explanation ... We have to really shame with Hai Madhan who has given wrong statement in his Q&A. Again it is confirmed - Waste for reading Cinema related books and do not trust their words.




7 Satish

3/23/2007 4:07:12 AM


Good letter. Has this been posted to AV or Madan or only on this website? Do also publish the reply, if you get any. Regards, Satish




8 Karu.Thiruvarasu

3/24/2007 12:20:45 AM


திரு.கமலக்கண்ணன் ஐயா, வணக்கம். சரியான நேரத்தில், சரியான வகையில் தாங்கள் மதனுக்கு விடுத்திருக்கும் மடலுக்குப் பாராட்டு, வாழ்த்து. தமிழன் சரியான நேரத்தில் சரியான காரியத்தைச் செய்யாமல் எவ்வளவோ இழந்து நிற்கிறான். எழுந்து நிற்கிறான் எந்தமிழன்! என மகிழ்கிறேன். கரு. திருவரசு, மலேசியா "வெல்லத் தமிழினி வெல்லும்"




9 prem anand

3/24/2007 11:58:38 AM


I am verymuch thankful to you for bringing this into light. It should really reach Mr.Madan.




10 dseshadri

3/26/2007 10:15:17 AM


A writer such as madan with mass appeal should certainly have avoided such casual remarks on chola history. He could have confessed his inability citing ignorance or inadequate knowledge as reason. Confession is the beginning of wisdom,he would certainly concur. I am surprised as to why mr Irai Anbu, not a small writer himself should ask mathan to write about chola history. Certainly madan's reply cannot be dismissed as a joke. I presume his answer to mr Irai Anbu was not casual. Good that kamal has given a persuasive argument supplementing with a request for madan to try his hand in Chola history. Could he?I doubt. There must be better persons around.I write with great respect to madan for his jokes cartoons,knowledge etc.




11 Surya. V

3/27/2007 10:46:48 AM


It causes the extreme rage on him, while reading his comments abt karikala chozha. 200 varusam kalitthu varapogum madayargalukku enna theriya pogiradhu, enkira sitthandham ellam tamil padathil nagaichuvaikaga sollapattadhu. Adhai madhan avargal vedha vaakga konduvittaro enbadhu pol ulladhu avaradhu koottrugal. Its better to keep quiet while speaking abt such sensitive things w/o knowing abt it fully. Will he realize his mistakes in the place where he had rendered the above statements???




12 Uma

3/28/2007 7:11:03 AM


Good reply... have you sent this to Vikatan as well?




13 vdhivakar

3/30/2007 6:03:10 AM


Excellent Kamalakkannan, We Tamils are proud of you. Anbudan Dhivakar




14 D, Ramesh Muththariyar

4/3/2007 1:58:38 AM


Wonderful article. really appreciable.




15 Kumar

4/5/2007 7:52:28 AM


Simply Superb Have you sent this write-up to Madhan? (or) Did he read?




16 Swetha

4/7/2007 10:45:50 AM


Chola pass has nothing to do with the Cholas. Cho - Goddess in Tibetan La - Pass in Tibetan It only makes sense that these words are Tibetan rather than Tamil owing to the location of it in the North East. How much ever I love my good own Cholas I wouldn't like to get carried away...




17 chandrasekaran

4/9/2007 2:06:32 AM


good reply and kudos to Ram, Kamalakannan and others who had taken pain to edit and submit this beautifule reply. Madan should publish this, to really get back his name straight :(




18 V.Nehru

4/10/2007 1:59:20 AM


Very good answer to Mathan by Kamala Kannan. But we have to understand the intention of Mathan . Mathan had written Vantharkal,Ventrarkal on RSS basis. He wanted to throw something to Muslims. As he is a writer, he used a book . That's all. They never have good opinion about Tamil,Tamil leaders and Tamil culture.Nandai Suttu Nariyai Kaaval Vaikka Ventam, Tamil Varalarai Ivarkal Eluthaventam,Ventavae Ventam. Anbudan Vaa.Neerodai




வரலாறு.காம் இதழின் வலைப்பதிவு முகமான http://varalaaru-ezine.blogspot.com க்கு வந்த வாசகர் கடிதங்கள்.




19 செந்தழல் ரவி

March 20, 2007 6:50 PM


////வரலாறு இல்லாமல் வரலாற்றுக் கற்பனை நாவல் ஏது? கற்பனை செய்வதற்கும் ஏதாவது ஒரு Reference வேண்டுமே! கற்பனையில் உதித்த வேற்று கிரகவாசி என்றாலும், இரண்டு கை, இரண்டு கால்களுடனும்தானே கற்பனை செய்ய முடிகிறது?/////

மிகவும் அருமையானதொரு உதாரணம்...ஏலியன் மூவிக்களை நினைத்துக்கொண்டு முறுவலித்தேன்.

உண்மையை சொன்னால், ஹாய் மதனுக்கு பகிரங்க கடிதம் என்றவுடன் என்ன பெரியதாக இருக்கப்போகிறது என்றுதான் உள்நுழைந்தேன்...

அப்பா...சரவெடி போங்கள்...ஆதாரங்களுடன் புட்டுப்புட்டு வைத்துள்ளீர்கள்...வரலாறு குறித்தான உங்கள் ஆழ்ந்த அறிவு வெளிப்படுகிறது இந்த பதிவு மூலம்...

ஹாய் மதன் எந்த சார்பும் அற்றவர் என்று தான் இத்தனை நாள் ரசித்திருந்தேன். என்றாவது ஒரு நாள் பூனை வெளியே வந்துதானே தீரும்...!!!




20 சிவபாலன்

March 20, 2007 7:46 PM


நல்ல கட்டுரை (கடிதம்).

மிக ஆழமாக விளக்கியுள்ளீர்கள்.

வாழ்த்துக்கள்




21 குழலி

March 20, 2007 7:58 PM


மதனுக்கு இதை அனுப்பினீர்களா? இல்லையென்றால் தயவு செய்து அனுப்புங்கள்

நன்றி
குழலி




22 இராம.கி

March 20, 2007 8:12 PM


நண்பர்களே,

நீங்கள் செய்கின்ற ஆழமான ஆய்வெல்லாம் அவருக்குப் புரியும் என்றா எண்ணுகிறீர்கள்? தூக்கி வீசியெறிந்து போய்க் கொண்டு இருப்பார்.

தாளிகைக்காரரான அவருக்கு ஆரவாரமாய் ஏதேனும் செய்யவேண்டும்; செய்கிறார். திரு. மதன் வரலாற்றில் பெரிய பணி செய்து விட்டதாய்ப் பலரும் எண்ணிக் கொண்டு எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள்.

எனக்கு அப்படி எதிர்பார்க்கத் தோன்றவில்லை.

ஒரு மேம்போக்கு மேதாவியிடம் போய் கற்பூர வாசனை பற்றிச் சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள். என்னைக் கேட்டால், அவர் பேச்சை ஒதுக்கி உங்கள் பணியைத் தொடருங்கள் என்று சொல்லுவேன்.

கல்லில் நார் உரிக்க முடியாது.

அன்புடன்,
இராம.கி.




23 யோகன் பாரிஸ்(Johan-Paris)

March 20, 2007 8:25 PM


மிக ஆழமான; ஞாயமான பதில். சொல்லிய பாங்கும் சிறப்பாக உள்ளது.இதை அவருக்கோ அல்லது ஆ.விக்கோ தயவு செய்து அனுப்பவும்.

தொடரவும்.




24 செயபால்

March 20, 2007 8:26 PM


மதனுக்குத் தெரியாவிட்டால் மற்றவருக்குத் தெரியாதா என்ன?

தெரியவில்ல என்று உண்மையைச் சொல்லாமல், வரலாறே இல்லை என்பது எப்பேர்ப்பட்ட கொழுப்பு?

இந்தக் கட்டுரையை எல்லாப் பத்திரிகைகளுக்கும் அனுப்புங்கள், மக்களறியட்டும் மதனின் பீத்தல்.

உங்கள் விளக்கம் மிகத் தாராளம்.




25 SK

March 20, 2007 8:39 PM


மிகச் சிறந்த திறனாய்வுக் கட்டுரை.

ஆனால், திரு. மதன் சார்பில் எனக்குத் தோன்றியது இதுதான்.

மதன் ஒரு தமிழறிஞர் அல்லர்.

இருக்கின்ற, அவரால் படிக்க முடிந்த ஆதாரங்களைக் கொண்டே அவர் அந்த "வ.வெ." நூலை எழுதினார் என அறிகிறேன்.

கல்வெட்டுகளைத் தோண்டியோ, அல்லது அவற்றை வடிவமைத்தோ இதை எழுதவில்லை அவர்.

எனவே, இருக்கின்ற சரியான மேற்கூறிய ஆதாரங்களை, ஒரு தமிழறிஞர் குழு அனைத்தையும், சரியாக வடிவமைத்து, திருத்தி, நூல் வடிவாகக் கொண்டுவந்தால், மதன் போன்ற தமிழார்வலர்கள், பல திறமையான எழுத்தாளர்கள் இதனைத் திறம்பட கதை அல்லது வரலாறு வடிவில் அனைவர்க்கும் புரியும் வண்ணம் நூலாக்க முடியும் என நினைக்கிறேன்.

ஆதாரங்கள் இல்லாமல் இல்லை. அதனைத் தேடிச் சென்று, அவற்றைப் புரிந்து கொள்ளும் அறிவு தனக்கில்லை எனவே அவர் சொல்லியிருக்கிறார் எனக் கருதுகிறேன்.

உங்கள் குழுமம் போன்றவர்கள் உடனடியாக ஈடுபட வேண்டிய ஒரு முயற்சி இது.

வரலாறு இல்லாமல் போனவன் இல்லை தமிழன்.

ஆனால், சரியான முறையில் வகைப்படுத்தத் தவறிவிட்டான், என்பதே அவர் வாதம்.

நன்றி.
வளர்க உங்கள் தொண்டு!




26 வரலாறு.காம்

March 20, 2007 9:38 PM


பின்னூட்டத்திற்கு நன்றி திரு.எஸ்.கே.

ஆனால் பதிலளித்துள்ள தொனி தாங்கள் கூறியதைப் பிரதிபலிக்கவில்லையே!

உரைநடைக்கு முன்பு கவிதை தோன்றியதால் கற்பனை கலந்த நாவல் எழுதுமளவுக்குத்தான் தகவல்கள் உள்ளன என்று சுயசரிதைக்கும் இலக்கியத்துக்கும் வேறுபாடு தெரியாமல் கூறியிருக்கிறார்.

நன்றி
கமல்




27 Anonymous

March 20, 2007 8:45 PM


அருமையான பதிவு. மதன், மற்றும் விகடன் பத்திரிக்கையின் கவனத்திற்கு இந்தப் பதிவு எடுத்துச் செல்லப் பட வேண்டும்.




28 Anonymous said...

March 20, 2007 9:42 PM


////தமிழக வரலாற்றைப் பற்றிப் பாடல்களும் கல்வெட்டுகளும் மட்டுமே மிஞ்சியிருப்பதாக குறைப்பட்டிருக்கிறீர்கள். ஏன்? இந்த இரண்டும் போதாதா? இவற்றில் விடுபட்டவற்றை நிரப்பத்தான் செப்பேடுகளும் சாசனங்களும் இருக்கின்றனவே! அதற்கும் மேலாக, கட்டடக்கலையும் சிற்பக்கலையும் பழங்கால ஓவியங்களும் கண்ணிருப்பவர்களுக்குத் தருமே ஆயிரம் செய்திகளை!////

மிகத்தெளிவான திறனாய்வுக் கட்டுரை. பயனுள்ள செய்திகள். நன்றி.




29 ஆதிபகவன்

March 20, 2007 9:42 PM


சரியான புள்ளி விபரங்களுடன் அருமையான ஒரு கடிதம் (கட்டுரை)

வாழ்த்துக்கள், தொடருங்கள் உங்கள் பணியை.




30 தென்றல்

March 20, 2007 9:43 PM


திரு. வெ.இறையன்பு அவர்கள் கேட்டிருந்த கேள்விக்கு மதன் அளித்த பதில் எனக்கு ஆச்சரியத்தை அளித்தது.

உங்களின் மிகத் தெளிவான விளக்கத்திற்கு மிக்க நன்றி! உங்களின் பணி சிறப்புற வாழ்த்துக்கள்!!

பிகு: மதன் இதற்கு என்ன பதில் அளித்தார் என்பதையும் தெரிவிக்கவும். நன்றி!




31 தருமி

March 20, 2007 9:59 PM


hi kamal

hats off to you and to varalaru.com

long time no see ...




32 Kasi Arumugam

March 20, 2007 10:27 PM


மதனின் பதிலை ஆனந்த விகடனில் வாசித்தபோது ஏமாற்றத்துடன் எரிச்சலாயிருந்தது. உங்கள் கடிதம் நல்லமுறையில் எழுதப்பட்டிருக்கிறது. ஆனால் இதனாலெல்லாம் இந்த நிலை மாறிவிடும் என்று நம்பவில்லை. உங்கள் முயற்சிகளுக்கு வாழ்த்துக்கள்.




33 prakash

March 20, 2007 10:53 PM


Very well done varalaaru.com team.

I don't any point in sending this to madan or ananda vikatan. Send it to irai anbu instead.




34 ஓகை

March 20, 2007 11:27 PM


மிக மிக அருமையான ஒரு பதிவு. பாராட்டுகள் கமல். மதனின் பதிலைப் படித்தவுடன் அதர்ச்சி அடைந்தேன். வ.வெ. எழுதியதற்கு கிடைத்த அளவிற்கு இப்பொருளில் எழுத ஆதாரங்கள் இல்லை என்ற அளவில் மதன் நிறுத்தியிருந்தால் அதை ஏற்றுக் கொள்ள முடியும். ஆனால் அவர் சொல்லிய மற்ற கருத்துகள் தீவிர மறுப்புக்கு உட்படவேண்டியவை.




35 மயிலாடுதுறை சிவா

March 21, 2007 12:15 AM


மிக அருமையான எடுத்துகாட்டுகளுடன்

சொன்ன பதில் அருமை. இது விகடனில் வந்தால் மிக நலம்.

வரலாறு தளம் மேலும் மேலும் வளர என் வாழ்த்துகள்.

மயிலாடுதுறை சிவா...




36 மயூரேசன் Mayooresan

March 21, 2007 12:20 AM


அட்ரா... அட்ரா.. அட்ரா...

தமிழன் வரலாற்றை தமிழனே கேள்விக் குறியாக்குவதா??? சிறப்பான பதில் அன்பரே!




37 Murali

March 21, 2007 2:45 AM


Just wanted to add my experience. Some years back I was in a Tamizh poetry egroups where they send a Tamizh poem everyday.

One day there was an article by one renouned author. Infact, he writes about "Kashmir" and "Middle east" in popular Tamizh magazines. His words while describing Chola kings were "Rajaraja chola was ruling Tanjore. In today's equivalence he would have ruled Tajnore district. He has no power more than Tanjore collector."

The sad thing here is that person can read in detail about some other part of world's history in detail and when comes to Tamizh history this is his stand. Even after writing to the moderator nobody is ready to write regrets. Citin this I quit that group.

Not just him, most renouned people behave the same. This is unfortunate fate of us. And one more thing. Whenever I get Great India email where the first line usually is "India hasnot invaded any country in 2000 years" I used to reply them like don't they approve cholas as indian kings or they are unaware of it.

Murali.




38 G.Ragavan

March 21, 2007 12:26 PM


மதனுக்குத் தெரிஞ்சதத்தான எழுத முடியும்? திடீர்னு இலக்கியம்..கல்வெட்டுன்னா எங்க போவாரு? நல்ல நடையோட வ.வெ எழுதுனாரு. ஒத்துக்க வேண்டியதுதான். ஆனால் தமிழர் வரலாறு பற்றிய செய்திகள் இல்லைன்னு சொல்றது அவரது அறியாமை. வெளிநாட்டு வின்செண்ட் ஸ்மித் Early Histories of South Indiaனு எழுத முடியுது. இவருக்கு முடியலைன்னா...தெரியாதுன்னு சொல்லலாம். அதை விட்டுட்டு திரிச்சுச் சொல்றது ரொம்பத் தப்பு. சிலப்பதிகாரமெல்லாம் ரொம்பக் கரைச்சுக் குடிச்சிருக்காரு போல. ம்ம்ம்...




39 Pari.Arasu

March 21, 2007 12:44 PM


வணக்கம்,

ஒரு அருமையான, ஆதாரங்களுடன் கூடிய பதிவு... தொடரட்டும் உங்கள் பணி...

நன்றி




40 கார்த்திக் பிரபு

March 21, 2007 12:48 PM


நல்ல பதிவு ..நான் கூட நிறைய தடவை விகடனுக்கும் ,மதனுக்கும் படைப்புகள் ,கேள்விகள் அனுப்பியுள்ளேன் ..பதில் இல்லை




41 திரு/Thiru

March 21, 2007 2:35 PM


தமிழகத்தில் பண்டைய வரலாற்றிற்கா பஞ்சம்? பண்டைய வரலாறு சிதைக்கப்படாமலும், திருத்தப்படாமலும் பார்த்து உண்மையை இக்கால வழிமுறைகளில் பதிவு செய்வது அவசியம்.

வரலாறு பற்றிய உங்கள் பணிகள் தொடர வாழ்த்துக்கள்!




42 -L-L-D-a-s-u

March 21, 2007 6:50 PM


நல்ல பதிவு ... உங்கள் தொண்டு வளர்க.

மதனுக்குள்ள ஈகோ , தெரியாத விஷ்யத்தைக்கூட ஒத்துக்கொள்ள மறுக்கிறது .




43 இறை நேசன்

March 22, 2007 2:09 PM


தலை நிமிர வைக்கும் அருமையான பதில்.

பொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதம் போன்றவற்றை படித்தபின் தமிழக உண்மை வரலாற்றை அறிய மிகவும் ஆவல் கொண்டு புத்தகங்களை தேடி அலைந்திருக்கின்றேன்.

தங்களின் அரிய பணி தொடரட்டும்.

வாழ்த்துக்கள்.

அன்புடன்
இறை நேசன்




44 அமர பாரதி

March 22, 2007 7:20 PM


மதனுக்கு தமிழன் வரலாற்றில் இருக்கும் தெரிவை விட தமிழன் மேல் இருக்கும் வெறுப்பு அதிகமாக இருக்குமோ?




45 அரவிந்தன் நீலகண்டன்

March 23, 2007 8:37 AM


மிக அருமையான கட்டுரை சார். இதனை ஆனந்தவிகடனுக்கு அனுப்பினீர்களா? அவர்கள் வெளியிடுபவர்கள் அல்ல என்றாலும். மதன் போன்ற அரைகுறை அறிவுசீவிகள் இப்படிப்பட்ட மடத்தனங்களை பொதுஜன ஊடகங்களில் உதிர்க்கும் போது ஆத்திரம் ஏற்படுகிறது. தங்கள் பதில் அந்த ஆத்திரத்தை தணிப்பதுடன் உளறல்களை கூட ஒரு உத்வேகமாக எடுத்துக்கொண்டு இப்படி நல்ல விசயங்களை அளிக்க முடியும் என்பதை காட்டுகிறது. தாங்கள் அடுத்த முக்கிய விசயத்தையும் செய்ய வேண்டும். மதனைவிட சிறந்த முறையில் சோழர் வரலாற்றை சுவைபட அழகிய சித்திரங்கள் புகைப்படங்களுடன் சாதாரண மனிதன் முதல் வரலாற்றாசிரியர் முதல் மூக்கில் விரல் வைத்து வியக்கமளவில் கொண்டு வரவேண்டும். முதலில் தமிழில் பின்னர் ஹிந்தி, ஆங்கிலத்தில். உலகமே வியக்க வேண்டும். அப்படியே முடிந்தால் ஒரு ஆவணப்படத்தையும் உருவாக்குங்கள். ஹிஸ்டரி சானலை பாருங்கள் 400 ஆண்டு மேற்கத்திய வரலாற்றை அந்த மாதிரி காட்டுகிறார்கள். நமக்கு பல்லாயிரம் ஆண்டு பாரம்பரியம். அதனை நாம் காட்டுகிற முறையில் காட்டுகிறோமில்லை. மக்கள் தொலைக்காட்சி (அந்த கட்சியை நான் கடுமையாக எதிர்த்தாலும்) தமிழருக்கு கிடைத்த ஒரு வரப்பிரசாதம். நிச்சயமாக அதில் காட்டுவார்கள்.




46 Balaji

March 28, 2007 6:08 AM


ஒரு பத்திரிக்கையாளரை நீங்கள் ஏன் கல்வெட்டுகளை ஆராய்ந்து தமிழ் வரலாறு எழுதவில்லை என்று கேட்பது விதண்டாவாதமாகவே படுகிறது. நான் படித்திருக்கும் பெரும்பாலான வரலாற்று ஆசிரியர்கள் (தாபர், கீய், நைப்பால், கல்கி போன்றோர்) இந்திய வரலாறு எழுதும் போது ஆதரங்கள் கிடைப்பது அரிதாக இருப்பதை கட்டாயம் குறிப்பிட்டுள்ளனர். அதைத்தான் மதன் அவர்கள் தனக்கே உரிய பாணியில் வெடுக்கென குறிப்பிட்டுள்ளார்.

குறள், தொல்காப்பியம். அகனாநூறு பற்றியெல்லாம் நீங்கள் சொல்லி அவருக்குத் தெரியவேண்டியிருக்காது.

பல்லாயிரம் ஆண்டுகளாக தமிழனும் தமிழனும் அடித்துக்கொண்டு செத்ததை மதன் வரலாறாக எழுதாவிட்டால் ஒன்றும் குடிமுழுகிப்போய்விடாது.

பொன்னியின் செல்வனில் 'தமிழ் அரசர்கள் குண்டுச் சட்டியில் குதிரை ஓட்டியவர்கள். அவர்கள் மிகச்சிறிதான நாடுகளை வைத்துக்கொண்டு வாய்கிழியப் பேசியுள்ளனர்' என்ற ரீதியில் அருள்மொழி கூறுவதாக கல்கி எழுதியிருப்பார். அதற்கும் மதன் கூறியதற்கும் பெரிய வித்தியாசமில்லை.

மற்றபடி அவர் மேம்போக்காக வெளியிட்ட கருத்தை வைத்துக்கொண்டு அவரை சண்டைக்கு இழுப்பதால் உங்களுக்கு திருப்தி ஏற்பட்டால் எனக்கு ஒரு ஆட்சேபனையுமில்லை.




47 வரலாறு.காம்

April 07, 2007 5:28 PM


வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி பாலாஜி.

ஒரு பத்திரிக்கையாளர் பத்திரிக்கையாளராக மட்டும் இருந்திருந்தால் இக்கேள்வியை அவரிடம் கேட்டிருக்கவேண்டிய தேவையே இருந்திருக்காது. வ.வெ மூலம் சொல்லவந்ததை எளிதாகச் சொல்லக்கூடிய சரித்திர ஆசிரியர் என்ற பெயர் பெற்ற பிறகு தமிழனுக்கு ஏற்படும் சாதாரணக் கேள்விதான் அவரிடம் கேட்கப்பட்டது.

வரலாறு என்றால் போர் மட்டும்தானா?

தமிழனும் தமிழனும் அடித்துக்கொண்டு செத்ததுதான் தமிழக வரலாறு என்றால், ஒரு இந்தியனும் இந்தியனும் அடித்துக் கொண்டு செத்தது இந்திய வரலாறு என்றும், ஒரு ஐரோப்பியனும் ஐரோப்பியனும் அடித்துக் கொண்டு செத்ததுதான் ஐரோப்பிய வரலாறு என்றும்தானே சொல்லவேண்டும்?

'தமிழ் அரசர்கள் குண்டுச்சட்டிக்குள் குதிரை ஓட்டியவர்கள்' என்று கூறியது, வெளியுலக அறிவு அவ்வளவாக இல்லாத, வளர்ந்து வரும் அருள்மொழி கூறியது. அதையே கல்கியின் கருத்தாக எடுத்துக்கொள்ள முடியாது.

மதனுடன் விதண்டாவாதம் செய்து சண்டைக்கு இழுக்க வேண்டும் என்பது எங்கள் எண்ணமல்ல. அதைவிட வேறு முக்கியமான வேலைகள் உள்ளன. எதற்காக இக்கடிதம் எழுதப்பட்டது என்பதைக் கடிதத்திலேயே குறிப்பிட்டிருக்கிறோம்.

நன்றி
கமல்




48 ஜடாயு

March 28, 2007 5:20 PM


// எந்த விதத்திலும் குறைவில்லாமல் நீலகண்ட சாஸ்திரியாரும் சதாசிவ பண்டாரத்தாரும் இன்னும் பிற அறிஞர்களும் தொகுத்து வைத்திருக்கும் சோழர் வரலாறு தாங்கள் அறியாததா? அவர்களையெல்லாம் அவமானப் படுத்துவது போலல்லவா அமைந்திருக்கிறது தங்கள் பதில்!! //

மதனிடம் கேட்கப்பட்டது பொது தமிழக வரலாறு பற்றி அல்ல, குறிப்பாக சோழர் பற்றியது. அதற்கு அவர் அளித்தது அபத்தமான பதில். நீங்கள் கேட்டது சரியான கேள்வி. அதுவும் தஞ்சை மண்ணில் பிறந்தததாகக் கூறிக் கொள்ளும் ஒருவர் தன் மண்ணின் வரலாறு, கலாசாரம் மீது கொள்ளும் மதிப்பீடு இவ்வளவு தானா?

முகலாய வரலாற்றை விடத் தொன்மையானது, ஆராய்ச்சிக்கு கொஞ்சம் கடினமாது சோழர் வரலாறு. அந்த சவாலை ஏற்றுக் கொள்ளும் வலிமை, உழைப்புக்கான நேரம், முயற்சி இல்லாமையால் இப்படி மதன் சொல்லி விட்டார் என்று நினைக்கிறேன்.

உங்கள் பணி சிறக்கட்டும்.




49 Patricia George, Trichy.

23 Mar 2007 20:14:36


i never read tamil magazines (except kalachuvadu that also very rarely)

felt very offended by madan's ans

what a disgusting reply from the so called intellectual of tamil media,it exposes his ignorance of CHOLA HISTORY.

once again it justifies my hatred for tamil magazines.

MY ANGRY QUESTIONS

1. what historical information does Babar's account --- of indian summer,mangoes give us.

2. daily food routine of JEHANGIR exposes what a glutton he was .may i know what knowledgeable historical account it provides.

3.why do intellectuals like Mr.irai....look upon people like Mr.madan for history instead of historians.

4.reading about the king's food habits and extravaganza is like reading about an actors kisu kisu corner.This is not history.Mr.madan should read inscriptions to know more about the CHOLA KINGS.

5.Where in world history you find a royal monarch who practised "SHARED VISION "a management principle now being incorporated by mncs (except the CHOLA GREAT MR.RAJARAJAN).

please send your reply to mr.madan personally also.

i dont know how to vent my anger at such mindless stuff.

so enough of my blah blah.

expecting more on history from ur side.

thanking you,

urs sincerely,
patricia george.



this is txt file
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.