http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[176 Issues]
[1745 Articles]
Home About US Temples Facebook
Issue No. 51

இதழ் 51
[ செப்டம்பர் 16 - அக்டோபர் 17, 2008 ]


இந்த இதழில்..
In this Issue..

வரலாறு கொடுக்கும் பாடங்கள்
காவற்காட்டு இழுவை!
தொட்டான்! பட்டான்!
திரும்பிப் பார்க்கிறோம் - 23
சிதையும் சிங்காரக் கோயில்கள் - 5
Virtual Tour On Kundrandar Koil - 3
அவர் - ஐந்தாம் பாகம்
கடமை... முயற்சி... பெருமிதம்... நெகிழ்வு...
மான்விழியே!! அள்ளும் அழகே!!
சொற்கள்தான் எத்தனை பொய்யானவை!
இதழ் எண். 51 > சுடச்சுட
காவற்காட்டு இழுவை!
மு. நளினி
24. 8. 2008 ஞாயிறன்று சிராப்பள்ளி மேலூர்ச் சாலையிலுள்ள துவரங்குறிச்சி சிவன்கோயிலுக்குக் கல்வெட்டுப் படிக்க அழைக்கப்பட்டிருந்தோம். கோயிலில் கல்வெட்டுகளைப் படித்து முடித்ததும் மேலூர் நெடுஞ்சாலைக்குக் கிழக்கில் உள்ள சடைவேளான்பட்டியை ஒட்டியிருந்த மோரணிமலைக்கு அழைத்துச் சென்றனர். முல்லையும் குறிஞ்சியும் கையிணைத்திருக்கும் வளமான பகுதி. குன்றில் ஒரு கல்வெட்டு வெட்டப்பட்டிருப்பதாகவும் அதையும் படித்துத் தரவேண்டுமென்றும் அழைத்த பெருமக்கள் வேண்டினர். குன்றின் இடைப்பகுதியில் உள்ள அந்தக் கல்வெட்டை அடைய மேற்கொண்ட முயற்சியின் போது ஊர்க்காரர்களே அதுவரை பார்த்திராத கல்வெட்டொன்றையும் காணமுடிந்தது.

அக்கல்வெட்டு காவற்காடு பற்றியது. தேவன் கண்டனான இலங்கேசுவரன் என்பார் ஊர்க்காவலுக்கு அளிக்கப்பட்ட நிலப்பகுதியின் மேற்கெல்லையைச் சுட்டுமாறு அந்தக் கல்வெட்டை மலைப்பாறையில் வெட்டியுள்ளார். கொடையளிக்கப்பட்ட அந்தக் காவற்காட்டை அழிப்பவனும் அழிக்குமாறு தூண்டுபவனும் அவர்களுக்கு வேண்டாதவர்களின் (இன்னாதார்தம்) செருப்புகளை எடுத்த கேவலமடைவர் என்ற சாபத்தையும் இலங்கேசுவரன் கல்வெட்டின் பின்பகுதியில் இணைத்துள்ளார்.

யாராவது அதிகமாகப் பேசினாலோ அல்லது தேவையற்ற நிலையில் பேச்சை நீட்டினாலோ, 'ஒரே இழுவையாக இருக்கிறதே' என்று கேட்பவர்கள் சொல்வது வழக்கம். இந்த இழுவை என்ற சொல்லாட்சியைப் பெயராகக் கொண்டு நிலமளந்த கோல் ஒன்று துவரங்குறிச்சிப் பகுதியில் புழக்கத்தில் இருந்தமையைக் குன்றின் இடைப்பகுதியிலுள்ள கல்வெட்டுத் தெரிவிக்கிறது. 7. 06 மீ. நீளத்தில், இரண்டு கூட்டல் குறிகளுக்கு இடைப்பட்டு இருக்குமாறு பாறையில் வெட்டப்பட்டுள்ள இந்த நீட்டலளவையே இரண்டாம் பாண்டியப் பேரரசுக் காலத்தில் இப்பகுதி நிலங்களை அளக்க உதவியுள்ளது. துவராபதி வேளார் ஆணைக்கேற்ப தேவன் கண்டனான இலங்கேசுவரனே இந்த நிலமளந்த கோலையும் வெட்டியுள்ளார் என்று இரண்டாம் கல்வெட்டு அறிவிக்கிறது.



இந்த இரண்டு கல்வெட்டுகளுமே பதின்மூன்றாம் நூற்றாண்டளவில் இப்பகுதியிலிருந்த ஆட்சிமுறை, நிலமளித்தல், நிலம் அளத்தல் குறித்த தகவல்களைத் தந்து நிற்பது குறிப்பிடத்தக்கது. இவை 1964-65ல் அரசுக் கல்வெட்டாய்வாளரால் படியெடுக்கப்பட்டவை. எனினும் பாடங்கள் வெளியாகவில்லை. நிலமளந்த கோலின் நீளத்தைக் கல்வெட்டறிக்கை 75 அடியாகக் குறிப்பிட்டுள்ளது.

இப்பயணத்திற்கு உதவியவர்கள் துரவங்குறிச்சியைச் சேர்ந்த வணிகர் திரு. சேதுராமன், மேனாள் ஊராட்சித் தலைவர் திரு. கு. ஆறுமுகம், மணியங்குறிச்சித் தமிழாசிரியர் திரு. சு. இருளப்பன் ஆகியோராவர்.
this is txt file
       
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.