http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[176 Issues]
[1745 Articles]
Home About US Temples Facebook
Issue No. 55

இதழ் 55
[ ஜனவரி 24 - ஃபிப்ரவரி 15, 2009 ]


இந்த இதழில்..
In this Issue..

வரன்முறை தேடும் வரலாற்று ஆய்வுகள்
மணியான மணி
திரும்பிப்பார்க்கிறோம் - 27
கழுகுமலை பயணக் கடிதம் - 1
கங்கையின் மறுவீட்டில் - ஒரு நாட்குறிப்பு
தனித்தமிழ்க் கலைச்சொற்கள் - 2
Silpi's Corner-07
Thirumeyyam- 2
மாறியது உள்ளம் மலர்ந்தது மன்றல்
மூலபுராணங்களில் முடியுடை மூவேந்தர்கள்
கோட்டகாரம்
இதழ் எண். 55 > சுடச்சுட
மணியான மணி
மு. நளினி
மதுரை சொக்கநாதர் மீனாட்சியம்மன் கோயில் வளாகத்தில் பல கோபுரங்களும் விமானங்களும் உள்ளமை அனைவரும் அறிந்ததே. அவற்றைப் பாதுகாப்பதற்கென்றே, ‘சிகரங் காவல்’ என்ற பெயரிலமைந்த காவலர் குழுவொன்று உள்ளது. இவர்கள், முறை வைத்து இருபத்து நான்கு மணிநேரமும் இத்திருக்கோயில் வளாகத்தின் கோபுரங்களையும் சிகரங்களையும் பாதுகாத்து வருகின்றனர். அம்மன் திருக்கோயில் விமானத்தின் மேற்பகுதிகளை ஆராய்வதற்காகக் கோயிலின் மேற்றளம் சென்றபோது மணிக்கூண்டு ஒன்றைப் பார்க்கமுடிந்தது. அந்த மணியில் கல்வெட்டுப் பொறிப்பொன்றும் உள்ளது.

சித்திவினாயகர் திருமுன்னுக்கு முன்பாகக் கட்டப்பட்ட ஆராய்ச்சி மணியாக அதைக் குறிக்கும் கல்வெட்டு, அதன் எடை 560 சேர் என்கிறது. கி. பி. 1884ம் ஆண்டுச் சித்திரைத் திங்கள் கார்த்திகைப் பிரதோஷமும் சுக்கிரவாரமும் பொருந்திய நாளில் மணிக்கூண்டு எழுப்பப்பட்டதாகக் கூறும் கல்வெட்டு, இந்த மணிக்கான செய்கூலியை அடியவர்கள் பலர் கொடையாகத் திரட்டித் தந்ததாகக் குறிப்பிடுகிறது. மணிக்கூண்டு தேவஸ்தானப் பணியாக அமைந்தது.



பதினான்கு வரிகளில் அமைந்துள்ள இக்கல்வெட்டுப் பொறிப்பை அடுத்துச் சிற்பங்கள் வடிக்கப்பட்டுள்ளன. சந்திரனும் சூரியனும் பக்கத்திற்கொருவராக விளங்கும் மேற்பகுதியை அடுத்துக் கீழ்நிலையில் நடுநாயகமாகத் தம் ஊர்தியான எலியின் மேல் இலலிதாசனத்தில் உள்ள வினாயகரின் தலையைக் கரண்டமகுடம் அலங்கரிக்கிறது. முன்கைகளில் வலப்புறம் தந்தமும் இடப்புறம் மோதகமும் உள்ளன. இடம்புரியாக உள்ள அவரது பின்கைகளில் அங்குசமும் கரும்புத்தோகையும் உள்ளன.



வினாயகரின் வலப்புறம் அவரையடுத்துத் திரிசூலமும் பாம்பும் விளங்க, இடப்புறம் வேலும் மயிலும் காட்டப்பட்டுள்ளன. மதுரைக் கோயில் வளாகத்தில் பல பெருமணிகள் இருந்தபோதும் இது ஒன்றே கல்வெட்டுப் பொறிப்புடனும் சிற்பச் செழுமையுடனும் வரலாற்றைப் பகிர்ந்தவாறே ஒலி எழுப்புகிறது. this is txt file
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.