http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[176 Issues]
[1745 Articles]
Home About US Temples Facebook
Issue No. 73

இதழ் 73
[ ஜூலை 16 - ஆகஸ்ட் 15, 2010 ]


இந்த இதழில்..
In this Issue..

ஆயிரமாண்டு அதிசயம்
வரலாற்றில் ஸ்தபதிகள்
இராசராசசோழனும் சோழமகாதேவியும் - 1
மெய்யத்தே பள்ளிகொண்டவரும் நின்றருளியவரும் - 2
தமிழுடன் 5 நாட்கள்
செல்லக் குறிஞ்சியே! ஆராரோ... ஆரீராரோ
இதழ் எண். 73 > தலையங்கம்
ஆயிரமாண்டு அதிசயம்
ஆசிரியர் குழு
வாசகர்களுக்கு வணக்கம்.

அனைவரும் நலம்தானே?

தமிழக அரசு, தஞ்சை பெரிய கோயில் கட்டி முடிக்கப்பட்டு ஆயிரம் ஆண்டுகள் முடிவுற்றதைக் கொண்டாடும் வகையில் செப்டம்பர் 25 - 26 ஆகிய இரு நாட்களுக்குத் தஞ்சையில் சிறப்பு விழா நிகழ்ச்சிகளை அறிவித்துள்ளது. ஆயிரம் ஓதுவார்கள் பாடும் தேவார நிகழ்ச்சி, ஆயிரம் நடனக் கலைஞர்களுடன் நாட்டிய நிபுணர் பத்மா சுப்பிரமணியம் நிகழ்த்தும் நாட்டிய நிகழ்ச்சி, கிராமியக் கலை நிகழ்ச்சிகள் எனப் பல கலை நிகழ்ச்சிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்நிகழ்ச்சிகள் அனைத்தும் சிறப்பாக நடைபெறவேண்டும். பொதுமக்கள், தொலைக்காட்சி அரசியல் சினிமா முதலியன அனைத்தையும் மறந்து ஓரிரு கணங்களேனும் அந்தப் பெருங்கோயிலையும் அதனை எடுப்பித்த இதயத்தையும் நெகிழ்ச்சியுடன் நினைவு கூற வேண்டும் என வாழ்த்தி மகிழ்கிறது.

நமது பத்திரிக்கைக்கும் தஞ்சைப் பெருங்கோயிலுக்குமான உறவு மிகவும் உன்னதமானது. உணர்வுபூர்வமானது.

வரலாறு டாக் காம் நற்குடும்பமே 2003 அக்டோபரில் பெரிய கோயில் மேற்தளத்தில் விமானத்தின் கீழ்தான் தோன்றியது. ஆகஸ்ட் 2004ல் வரலாறு டாட் காமின் முதல் இதழிலேயே கருங்கல்லில் ஒரு காவியம் எனும் தலைப்பில் அத்திருக்ககோயில் பற்றிய நீண்ட பயணக்கட்டுரை எழுதப் பெற்றது. அதே இதழில் முனைவர் நளினியால் எழுதப்பட்ட இராஜராஜீஸ்வரத்துப் பாடகர்கள் எனும் கட்டுரையே அத்திருக்கோயில் பற்றி நமது பத்திரிக்கையில் வெளியான முதல் ஆய்வுக் கட்டுரையாகும். அவ்விதழுக்கு அட்டைப் படமாக அமைந்ததும் அத்திருக்கோயில் கோபுரமான இராஜராஜன் திருவாயிலே. தமிழகத்தில் காணப்பெறும் பெரும்பாலான கோபுரங்கள் பிற்காலத்தவை. சோழர்காலக் கோபுரங்களுள் காலத்தால் மிகப் பழமையானது பெரியகோயிலின் கேரளாந்தகன் வாயிலும் இராஜராஜன் திருவாயிலும்தான் எனும் உண்மையை நம்மில் எத்தனைபேர் உணர்ந்துள்ளோம்?

இரண்டாவது இதழிலிருந்து வெளிவரத் துவங்கிய நமது பத்திரிக்கையின் முதல் சரித்திரத் தொடரான இராஜகேசரியின் பிரதான களமும் பெரிய கோயில் வளாகமே.

வரலாறு டாக் காம் குழுவினரால் நடத்தப்பெற்ற முதல் பொதுவிழாவான முப்பெரும் விழா 2005 ஜனவரியில் பெரிய கோயில் வளாகத்தில்தான் நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியின்போது வெளியிட்ட இராஜராஜீஸ்வரம் சிறப்பிதழே நமது பத்திரிக்கை வெளியிட்ட முதல் சிறப்பிதழாகும். வரலாறு டாட் காம் நண்பர்கள்- வாசகர்கள் பங்குபெறும் ஆயிரம் ரூபாய் திட்டத்தின் கீழ் வெளிவந்த பெண் தெய்வ வழிபாடு எனும் நூலும் பெரிய கோயில் வளாகத்தில் அவ்விழாவில்தான் வெளியானது.

தஞ்சை விமான நிழல் கீழே விழும் எனும் உண்மையை முன்பே டாக்டர் கலைக்கோவன் உரைத்திருக்க, அதற்கேற்ற புகைப்படத்தை விமானத்தின் உச்சியிலிருந்து எடுத்து முதன்முதலில் வெளியிட்டது நமது பத்திரிக்கையே.

தஞ்சை மற்றும் பெரியகோயில் பற்றி மட்டும் கடந்த ஆறு ஆண்டுகளில் நமது பத்திரிக்கையில் பதினைந்துக்கும் மேற்பட்ட அரிய கட்டுரைகள் வெளியாகியுள்ளன. சொல்லப்போனால் நமது கட்டுரையாளர்கள் அனைவராலும் வெவ்வேறு கோணங்களில் எழுதப்பட்ட ஒரே கருப்பொருள் பெரியகோயில்தான்.

இதழ் 1 - கருங்கல்லில் ஒரு காவியம்-1

இதழ் 1 - இராஜராஜீஸ்வரத்துப் பாடகர்கள்

இதழ் 2 - கருங்கல்லில் ஒரு காவியம்-2

இதழ் 3 - கல்வெட்டாய்வு (2) (இதில் இராஜராஜீஸ்வரத்தில் வெட்டப்பெற்றுள்ள முதலாம் இராஜராஜரின் மெய்க்கீர்த்தி மற்றும் பெரிய கோயில் முதல் கல்வெட்டு வெளியாகியுள்ளது)

இதழ் 5 - இராஜராஜீஸ்வரம் சிறப்பிதழ் அறிவிப்பு

இதழ் 7 - இராஜராஜீஸ்வரம் சிறப்பிதழ்

இதழ் 7 - காதலாகிக் கசிந்துருகிக் கண்ணீர் மல்கி (இராஜராஜீஸ்வரத்திற்கும் தனக்குமுள்ள உறவை விளக்கும் முனைவர் கலைக்கோவனின் அருமையான கட்டுரை)

இதழ் 7 - வரலாறு காத்திருக்கிறது (பெரிய கோயில் பற்றிய பல அரிய தரவுகளை முன்வைக்கும் முனைவர் நளினியின் கட்டுரை)

இதழ் 7 - இராஜராஜீஸ்வரம் கல்வெட்டுக்கள்

இதழ் 7 - சண்டேஸ்வரர் திருமுன் கலைப்பிடிச்சுவர்

இதழ் 7 - கட்டிடக்கலை ஆய்வு (இராஜராஜீஸ்வரம்)

இதழ் 7 - ஸிணீணீழீணீக்ஷீணீழீமீsஷ்ணீக்ஷீணீனீ சிமீக்ஷீtணீவீஸீ ஸிமீஸ்ணீறீணீtவீஷீஸீs

இதழ் 7 - ஷிணீணீஸீtலீணீக்ஷீணீனீ மிநீஷீஸீs ஷீயீ ஸிணீணீழீணீக்ஷீணீழீமீsஷ்ணீக்ஷீணீனீ

இதழ் 7 - இராஜராஜீஸ்வரம் பயணக்கட்டுரை

இதழ் 7 - இராஜராஜீஸ்வரம் கல்வெட்டுக்கள்

இதழ் 8 - முப்பெரும் விழா நிகழ்வுகள்

இதழ் 22 - தரிசனமான தட்சிணமேரு

இதழ் 24 - தட்சிண கைலாயம்

சென்ற பல வருடங்களில் வரலாறு மெல்ல மெல்லப் புரியத் துவங்க, பெரியகோயிலின் பரிமாணங்கள் விஸ்வரூபமெடுத்து மிரட்டுகின்றன. எழுதப்பட்டது எத்தனை குறைவு! புரிந்துகொள்ளப்பட்டது எத்தனை எள்ளளவு! எதிரில் நிற்பது எத்தனை பிரம்மாண்டமானது!

ஒரு ஆயுள் என்ன - ஒன்பது ஆயுள்களை அங்கேயே செலவழிக்கலாம். அது ஒரு அட்சய பாத்திரம்.

அன்புடன்

ஆசிரியர் குழுthis is txt file
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.