http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[176 Issues]
[1745 Articles]
Home About US Temples Facebook
Issue No. 76

இதழ் 76
[ அக்டோபர் 16 - நவம்பர் 15, 2010 ]


இந்த இதழில்..
In this Issue..

வாழமுடியாத ஊரும் தொல்லியல் துறையும்
இராஜராஜேசுவரத்து ஆடலரசிகள் நானூற்றுவர் - 2
சென்னை அருங்காட்சியகச் செப்பேடுகள் - 1
மேற்றளியாரும் நலக்குன்றத்தாரும் - 1
சிபியும் நானும் - 2
கனிவின் பாலை
இதழ் எண். 76 > கலையும் ஆய்வும்
இராஜராஜேசுவரத்து ஆடலரசிகள் நானூற்றுவர் - 2
ரிஷியா


தளிச்சேரிப் பெண்டுகள் நிவந்தம் :-

இராஜராஜேசுவரத்துக் கல்வெட்டு வரிகள் கூறுவது யாதெனில், "தளிச்சேரிப் பெண்டுகளுக்கும் நிவந்தமாகப் பங்கு செய்தபடி பங்கு வழி பங்கு ஒன்றினால் நிலம் வேலியினால் ராஜகேசரியொடொக்கும் ஆடவல்லானென்னும் மரக்காலால் நெல்லு நூற்றுக் கலமாகவும் . . . . "

இவ்வரிகளை ஆராயும்போது ஒவ்வொரு தளிச்சேரிப் பெண்ணுக்கும் ஒரு பங்கு தரப்பட்டது.

1 பங்கு = 100 கலம் நெல்லைத் தரக்கூடிய விளைச்சல் மிகுந்த ஒரு வேலி நிலம் என்பதாம்.

இந்த நெல் ஆடவல்லான் என்னும் மரக்காலால் அளக்கப்பட்டது.

1 ஆடவல்லான் மரக்கால் அளவை = 1 இராஜகேசரி மரக்கால் அளவை.

தளிச்சேரிப் பணி விதிமுறைகள் :-

"இப்படிப் பங்குபெற்ற இவர்களில் செத்தார்க்கும் அனாதேசம் போனார்க்கும் தலைமாறு அடுத்தமுறை கடவார் இக்காணி பெற்றுப் பணி செய்யவும் அடுத்தமுறை கடவார் . . . . . "

பணியில் அமர்ந்தவர் யாரேனும் ஒருவர் இறந்துபட்டாலோ அல்லது வேறுநாடு சென்று விட்டாலோ அவர்களுடைய நெருங்கிய உறவில் யாரேனும் ஒருவர் தகுதியுடையவராய் இருந்தால் அவர்கள் அப்பணியில் அமர்ந்து பணிக்குரிய நிவந்தம் பெற்றுக் கொள்ளக் கடவார்கள்.

அவ்வாறு நெருங்கிய உறவினில் யாரும் பணியைத் தொடர இயலாதெனின் அவர்கள் அப்பணி தொடர்ந்து செய்யக்கூடிய வேறு ஒருவரைத் தேர்ந்தெடுத்து அப்பணியில் அமர்த்தி நிவந்தம் பெற்றுக் கொள்ளக் கடவார்கள்.

இப்படியாக அனைத்துப் பணிகளும் தங்குதடையின்றிச் சீராகத் தொடர்ந்து நடைபெற மேற்கண்ட பணி விதிமுறை வழிவகுத்தது. 10ம் நூற்றாண்டில் தமிழனின் நிர்வாகத்திறன் காட்டும் சீரிய கல்வெட்டு இத்தளிச்சேரிக் கல்வெட்டு. இராஜராஜனுக்கு ஈடில்லை யாரும் சொல்ல.

நக்கன் :-

இந்நானூறு ஆடலரசிகளும் தங்கள் பெயர்களுக்கு முன் "நக்கன்" என்னும் சொல்லை இணைத்துள்ளனர். நக்கன் என்ற முன்னொட்டு சிவனைக் குறிப்பதாம். (ஐராவதம் மகாதேவன் கட்டுரையை நினைவில் கொள்ளவும்).

(தொடரும்)
this is txt file
       
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.