![]() |
![]() |
![]() |
http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [167 Issues] [1671 Articles] |
Issue No. 134
![]() ![]() இந்த இதழில்.. In this Issue.. ![]() |
நம் சங்கத் தமிழர்கள் மிகச்சிறந்த இசைவல்லுநர்களாக வாழ்ந்துள்ளனர். நிலமும் நிலம் சார்ந்த பண்கள், பொழுதுகள் சார்ந்த பண்கள் எனப் பல வகைகளாகப் பகுத்துள்ளனர். பாலை யாழில் வாசிக்கப்படும் சிறந்த இன்னிசைப் பண்ணான நைவளம் பற்றிய குறிப்புகள் சங்கப் பாடல்கள்வழி நமக்குக் கிடைக்கின்றன. கபிலரின் குறிஞ்சிப் பாட்டில், "நைவளம் பழநிய பாலை வல்லோன் விளக்கம்: "பொன்வார்ந் தன்ன புரிஅடங்கு நரம்பின் விளக்கம்: மேற்கண்ட வரிகளில் காணப்படும் நைவளம் என்னும் பண் பகல் பொழுதுகளில் வாசிக்கப்பெறும் இராகமாகும். பாலையாழில் வாசிக்கப்பெறும் நட்டராகம் இதுவேயாகும். நட்டபாடை என்று அழைக்கப்படும் இராகமும் இதுவே. பண்டைய இசைத்தமிழ் வல்லோர்கள் இரவுப்பண்கள், பகற்பண்கள் எனவும், குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலைப்பண்கள் எனவும் தாம் வாழ்ந்த நிலம் சார்ந்த இராகங்கள், அந்நிலம் சார்ந்த இசைக்கருவிகள் என இயற்கையோடும், இயற்கை சார்ந்த வாழ்வியலோடும் இசைபட வாழ்ந்தார்கள். |
![]() சிறப்பிதழ்கள் Special Issues ![]() ![]() புகைப்படத் தொகுப்பு Photo Gallery ![]() |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |