http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[176 Issues]
[1745 Articles]
Home About US Temples Facebook
Issue No. 36

இதழ் 36
[ ஜூன் 16 - ஜூலை 15, 2007 ]


இந்த இதழில்..
In this Issue..

நமக்கு நாமே
அபிமுத்தன் திருமடம்
கதை 10 - மதுரகவி
திரும்பிப் பார்க்கிறோம் - 8
ஆடற்கலை வாயிலாக அறியப்படும் தமிழின் தொன்மையும் தமிழர் பெருமையும்
எவ்வுள் கிடந்தான்
ஜப்பானில் பொ.செ தீம்பார்க் போல
திருவள்ளுவரின் திருமேனி தாங்கிய தங்கக்காசு - 2
Links of the Month
சங்கச்சாரல் - 18
இதழ் எண். 36 > சுடச்சுட
அபிமுத்தன் திருமடம்
மு. நளினி


உடையாளூரிலிருந்து 1927ல் பதின்மூன்று கல்வெட்டுகள் படியெடுக்கப்பட்டுள்ளன. இவற்றுள் பெரும்பான்மையன படியெடுக்கப்பட்டபோதே சிதைந்த நிலையிலும் தொடர்பற்றும் முடிவுறாத நிலையிலும் இருந்தன. களஆய்வில் இவற்றுள் சிலவற்றின் விட்டுப்போன தொடர்ச்சிகளைக் கண்டறிய முடிந்துள்ளதுடன், பல புதிய கல்வெட்டுகளும் கண்டறியப்பட்டன. அவற்றுள் ஒன்று இங்குத் தரப்படுகிறது.

காலம்: மூன்றாம் குலோத்துங்கரின் 25ம் ஆட்சியாண்டு கி. பி. 1202

இக்காலத்தில் சிவபாதசேகர மங்கலம் என்னும் ஊர் அருமொழிதேவ வளநாட்டின் கீழிருந்த திருநறையூர் நாட்டுப் பிரிவில் சேர்க்கப்பட்டிருந்தது. இவ்வூரில் இருந்த சிவபாதசேகரமுடையார் கோயிலுக்குத் தெற்கில், பால்குளத்தின் மேல்கரையில் 'அபிமுத்தம் ' என்ற பெயரில் மடம் ஒன்று கட்டப்பட்டது. இதைக் கட்டியவர் சிவபாதசேகர மங்கலத்தைச் சேர்ந்த தவசியரில் ஒருவரான வித்யாசிவ பண்டிதர் என்பவர். திருச்சிற்றம்பலத்தைச் சேர்ந்த இவரால், இம்மடத்தில், 'விசுவேசுவர தேவர்' என்ற பெயரில் இறைத்திருமேனி ஒன்று அமைக்கப்பட்டது. இத்திருமேனிக்குரிய பூசைக்கும் வழிபாட்டிற்கும் உரிய செலவினங்களுக்காகவும் அபிமுத்தன் மடத்திற்கு வந்து அங்குத் தங்கியிருந்து இறைவழிபாட்டில் கலந்துகொண்ட அடியார்களின் உணவுத் தேவைக்காகவும் நிலம் வழங்கப்பட்டது. இந்நிலத்தை வித்யாசிவ பண்டிதரும், வேறு பலரும் இணைந்து வழங்கினர்.

இக்கல்வெட்டு முழுமையாகக் கிடைக்கவில்லை என்றாலும், கிடைத்திருக்கும் பகுதி மிக முக்கியமான வரலாற்றுத் தகவலைத் தந்துள்ளது. திருப்பணியாளர்களின் வரலாற்று நோக்கற்ற கட்டுமானப் பணிகளால் இக்கோயிலின் கல்வெட்டுகள் அனைத்தும் துண்டாடப்பட்டுள்ளன.

களஆய்வின்போது இவற்றைத் தொடர்புபடுத்தவும் இவற்றின் மீது பூசப்பட்டிருந்த சுண்ணாம்புப் பூச்சை நீக்கவும், உயரமான இடங்களிலிருந்த கல்வெட்டுகளைச் சாரம் கட்டிப் பலகை இட்டுப் படிக்கவும் துணைநின்ற திரு. பால பத்மநாபனும், திரு. சு. சீதாராமனும் வரலாற்று விளக்குகள். பத்மநாபனின் நண்பர் திரு. ஜெயபால், உடையாளூர் ஊர் நிருவாக அலவலர், அவரது உதவியாளர் திரு. விஜி, சீதாராமனின் உதவியாளர்கள் திரு.இரவி, இரமேஷ் இவர்தம் தளாரக் கூட்டுறவில் உடையாளூர் ஆய்வுப்பணிகள் நிறைவடைந்துள்ளன.

உடையாளூரில் கிடைத்திருக்கும் புதிய தரவுகளை உலகளாவிய நண்பர்களுடன் வரலாறு மின்னிதழ் இப்பகுதியில் தொடர்ந்து பகிர்ந்துகொள்ளும்.

this is txt file
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.