http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[176 Issues]
[1745 Articles]
Home About US Temples Facebook
Issue No. 52

இதழ் 52
[ அக்டோபர் 16 - நவம்பர் 17, 2008 ]


இந்த இதழில்..
In this Issue..

எங்கே போயின ஏரிகளும் குளங்களும்?
சிவிகை பொறுத்தாரும் ஊர்ந்தாரும்
திரும்பிப் பார்க்கிறோம் - 24
சிதையும் சிங்காரக் கோயில்கள் - 6
திரிபுவன வீரனே! பாண்டியாரியே! - முதல் பாகம்
Virtual Tour On Kundrandar Koil - 4
ஐராவதி நூல் வெளியீட்டு விழா - ஒளிப்படத் தொகுப்பு (Videos)
அவர் - ஆறாம் பாகம்
நீங்கல் சரியோ நீயே சொல்!
பழந்தமிழர் பொறியியல் நுட்பத்திறன்
இதழ் எண். 52 > இலக்கியச் சுவை
நீங்கல் சரியோ நீயே சொல்!
இரா. கலைக்கோவன்


பிரியப்போகிறேன் என்று நீ சொன்னதுமே அவள் நெற்றி குழைந்தது. தோள்கள் நொடியில் மெலிந்தன. அடிவயிற்றில் அழகாய்த் தெரிகின்றன என்று நீ அடிக்கடி பாராட்டும் அந்த வரியடுக்குகளும் வாடின! பகல் எது இரவு எது என்பதுகூடத் தெரியாதவள் ஆனாள் தலைவி. பெய்யும் மழையில் நனையும் மலர்களைப் போல அவள் கண்களை நனைத்துப் பெருகுகிறது கண்ணீர். இவள் தனித்து வருந்துவாளே எனக் கருதாமல், பொருளீட்டவேண்டும் என்று கூறிப் பிரிய நினைக்கிறாயே! இது சரிதானா தலைவா?

பொருளீட்ட நீ செல்லவிருக்கும் வழி எளிமையானதா? வேங்கையை விரட்டிய யானை மதச்செருக்குடன் வழிச் செல்வாரை அலைக்கழிக்கும் நெறியல்லவா நீ செல்ல விரும்பியுள்ள வழி! அங்கு முள்ளம்பன்றிகள் மேய்வதாகச் சொல்கிறார்கள்!

அந்த வழியில் ஒரு காலத்தில் மக்களால் வணங்கப்படும் இடமாக, வளமாக இருந்த பொதியில் இன்று அழிந்துள்ளதாம்! அதைப் புதர்கள் முடியுள்ளனவாம். சுற்றுச் சுவரைப் பெரும் புற்றுகள் சூழ்ந்துள்ளனவாம் பெரிய கைகளையுடைய கரடிகள் அப்புற்றுகளைச் சூழ்ந்து சோற்றுக்காக ஆராய்வதாகவும் கூறுகிறார்கள். யாரும்வருவதில்லை என்ற நிலையில் அந்தப் பொதியிலில் நடப்பட்டிருந்த கந்தில் (தூண்) குடியிருந்த கடவுள்கூட இடம் நீங்கி வேறெங்கோ போய்விட்டாராம்!

ஆனால், நெடுங்காலம் அங்கு உறைந்திருந்த பற்றின் காரணமாகப் பொதியில் வாழ் புறாக்கள் மட்டும் தத்தம் துணைகளுடன் அங்கேயே தங்கியிருந்து இடையறாது ஒலி செய்து தங்கள் ஆற்றாமையைப் புலப்படுத்துகின்றனவாம். பெரிய, பெரிய கற்களால் சூழப்பட்ட நெடுந்தொலைவு ஊர்கள்அமைந்த அந்தத் தனி வழியில் தலைவியைப் பிரிந்து நீ செல்வது தேவைதானா?

ஈழத்துப் பூதன் தேவனாரின் (அகம் 307) இந்தப் பாடல் வழிபாடிழந்த பாலை நிலக் கோயில் ஒன்றின் படப்பிடிப்பைத் தருகின்றது. பொதியில் - கந்து - சுற்றுச் சுவர் - புறாக்கள் எனும் அந்த அமைப்பில், கந்திற்கு மாறாக எழுதணி கடவுளைக் காட்டுவார் கடியலூர் உருத்திரங்கண்ணனார் (அகம் 167). அவர் சுட்டும் பொதியிலைக் கடவுளைப் போலப் புறாக்களும் நீங்கினவாம்.

அகம் - 167.

தலைமகன் கூற்று

தலைமகன் பொருள் கடைக்கூட்டிய நெஞ்சிற்குச் சொல்லிச் செலவு அழுங்கியது

திணை : பாலை
ஆசிரியர் : கடியலூர் உருத்திரங் கண்ணனார்

வயங்கு மணி பொருத வகைஅமை வனப்பின்
பசுங் காழ் அல்குல் மாஅயோளொடு
வினை வனப்பு எய்திய புனை பூஞ் சேக்கை,
விண் பொரு நெடு நகர்த் தங்கி, இன்றே
இனிது உடன் கழிந்தன்று மன்னே; நாளைப்
பொருந்தாக் கண்ணேம் புலம்பு வந்து உறுதரச்
சேக்குவம் கொல்லோ, நெஞ்சே! சாத்து எறிந்து
அதர் கூட்டுண்ணும் அணங்குடைப் பகழிக்
கொடு வில் ஆடவர் படு பகை வெரீஇ,
ஊர் எழுந்து உலறிய பீர் எழு முது பாழ்,
முருங்கை மேய்ந்த பெருங்கை யானை
வெரிந் ஓங்கு சிறு புறம் உரிஞ, ஒல்கி
இட்டிகை நெடுஞ் சுவர் விட்டம் வீழ்ந்தென,
மணிப் புறாத் துறந்த மரம் சோர் மாடத்து
எழுது அணி கடவுள் போகலின், புல்லென்று
ஒழுகுபலி மறந்த மெழுகாப் புன் திணைப்
பால் நாய் துள்ளிய பறைக்கட் சிற்றில்,
குயில் காழ் சிதைய மண்டி, அயில் வாய்க்
கூர் முகச் சிதலை வேய்ந்த
போர் மடி நல் இறைப் பொதியிலானே?


இன்றும் கோயில்களில் கந்தாய் இலிங்கமும் சுற்றுச் சுவர்களும் புறாக்களும்தான் உள்ளன. ஆனால், 'பொதியில்' என்ற அழகான, இயல்பான, இனிமையான அந்தப் பொதுவுடைமைச் சொல்தான், 'கோயில்' என்ற தனியுடைமைச் சொல்லாக மாறிப்போய் நிலைத்துவிட்டது.this is txt file
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.