http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[176 Issues]
[1745 Articles]
Home About US Temples Facebook
Issue No. 52

இதழ் 52
[ அக்டோபர் 16 - நவம்பர் 17, 2008 ]


இந்த இதழில்..
In this Issue..

எங்கே போயின ஏரிகளும் குளங்களும்?
சிவிகை பொறுத்தாரும் ஊர்ந்தாரும்
திரும்பிப் பார்க்கிறோம் - 24
சிதையும் சிங்காரக் கோயில்கள் - 6
திரிபுவன வீரனே! பாண்டியாரியே! - முதல் பாகம்
Virtual Tour On Kundrandar Koil - 4
ஐராவதி நூல் வெளியீட்டு விழா - ஒளிப்படத் தொகுப்பு (Videos)
அவர் - ஆறாம் பாகம்
நீங்கல் சரியோ நீயே சொல்!
பழந்தமிழர் பொறியியல் நுட்பத்திறன்
இதழ் எண். 52 > கலையும் ஆய்வும்
சிதையும் சிங்காரக் கோயில்கள் - 6
நீலன்
2. விடை ஏறிய சடைமுடிநாதர் - 2


திருச்சடைமுடிநாதர் கோயில் வளாகத்தில் கோபுரம், சுற்றுச்சுவர், சிற்றாலயங்கள், பலிபீடம், கொடிமரம் இவை எவையும் தற்சமயம் காணுமாறு இல்லை. சுற்றுச்சுவரின் அடிச்சுவடுகள் மட்டும் ஆங்காங்கே தென்படுகின்றன. சிதைவுக்குள்ளான செங்கல்லால் கட்டப்பட்ட சண்டேசுவரர் ஆலயம் மற்றும் அம்மன் ஆலயம், கிழக்குப்பார்வையாய் இருக்கும் சடைமுடிநாதரின் கருவறை, முகமண்டபம், அடித்தளம் மட்டும் காட்டும் பெருமண்டபம், திறந்த வெளியில் கிடக்கும் நந்தி, நிலை குலைந்து தரையில் விழுந்துகிடக்கும் கல்வெட்டுக்கள் கொண்ட மூன்று தூண்கள் மற்றும் மண்ணில் புதையுண்டு கிடக்கும் தேய்ந்துபோன சண்டேசுவரர் சிற்பம் ஆகியவை மட்டுமே இக்கோயில் வளாகத்தில் இன்று காணுமாறு உள்ளன.









விமானம்

இச்சடைமுடிநாதர் கோயிலின் விமானத்தைத் தற்போது இருக்கும் அமைப்பினைக்கொண்டு இரண்டு தள விமானமாகக் கருதலாம். கிரீவம், சிகரம் இல்லாததால் விமான அமைப்பு வேசரமா, நாகரமா அல்லது திராவிடமா என்று கூற இயலவில்லை.





இவ்விமானத்தின் தாங்குதளம், ஜகதி, ஊர்த்துவ பத்மவரி கொண்ட உருள்குமுதம், கம்புகளால் அணைக்கப்பெற்ற பாதங்கள் கொண்ட கண்டம், திருப்பங்களில் கோடிப்பாலையம் என்றழைக்கப்படும் கொடிக்கருக்குகள் பெற்ற கபோதம், திருப்பங்களில் மகரத்தலை பெற்ற பூமிதேசம் ஆகிய உறுப்புகள் பெற்ற கபோதபந்த தாங்குதளமாய் அமைந்துள்ளது. பூமிதேசத் திருப்பங்களில் காணப்படும் மகரத்தலையிலிருந்து வெளிவரும் வீரர்கள் அழகாக சித்திரிக்கப்பட்டுள்ளனர்.

அடித்தளத்திலிருந்து இருகர்ணபத்திகளும் சற்றே முன்னிழுக்கப்பட்டு சதுர பாதம் பெற்ற விஷ்ணுகாந்த அரைத்தூண்களைக் கொண்டு அணைவு பெற்றுள்ளன. சாலைப்பத்திகள் கர்ணபத்திகளிலிருந்து சற்றே முன்னிழுக்கப்பட்டு சதுரபாதம் பெற்ற இந்திரகாந்த அரைத்தூண்களைக் கொண்டு அணைவு பெற்றுள்ளன. சாலைப்பத்திக்கும் கர்ணபத்திக்கும் இடையில் காணப்படும் ஒடுக்கங்களில் நான்முக அரைத்தூண்கள் கொண்டு அமைக்கப் பெற்ற கோட்டங்கள் உள்ளன. இவற்றில் சிற்பங்கள் ஏதும் இல்லை.





கருவறையின் மூன்று பக்கங்களிலும் உள்ள சாலைப்பத்திகளில் உள்ள கோட்டங்கள் சதுரபாதம் கொண்ட உருளைத் தூண்களால் அணைவு பெற்றுள்ளன. தெற்கு, வடக்குக் கோட்டங்களில் நின்ற நிலையில் வீணாதரரும் பிரம்மனும் உள்ளனர். மேற்குக் கோட்டத்தில் தற்சமயம் சிற்பம் ஏதும் இல்லை. இக்கோட்டத்தில் ஏற்கனவே இருந்த அம்மையப்பர் சிற்பம் இங்கிருந்து அரசால் எடுத்துச்செல்லப்பட்டு சென்னை அரும்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. தெற்குத் தேவகோட்டத்தின் மேல் உள்ள மகர தோரணத்தில் ஆலமர் அண்ணலும், ஆனந்தத் தாண்டவம் புரியும் கோலத்தில் சிவனும் காட்சியளிக்கின்றனர். ஆனால் இவ்வுருவங்கள் சிதைந்தும் தேய்ந்தும் காணப்படுகின்றன. மேற்கு மற்றும் வடக்கு தேவகோட்டங்களின் மேல் காணப்படும் மகர தோரணங்கள் பணிமுடிவடையாமல் ஆரம்ப நிலையில் உள்ளன.

சுவரை அணைத்து நிற்கும் தூண்கள் கால், மாலைத்தொங்கல், தாமரைக்கட்டு, கலசம், தாடி, கும்பம், பாலி, பலகை, வீரகண்டம் ஆகிய உறுப்புகளை பெற்றுள்ளன. வீரகண்டத்திலிருந்து கிளைக்கும் போதிகைகள் பட்டையுடன் கூடிய குளவுத்தரங்கம் பெற்றுள்ளன. இப்போதிகைகள் விரிகோணத்தில் எழுந்து உத்திரம் தாங்க மேலே ஆலிங்கம், அந்தரி, பிரதிமுகம், வாஜனம் இவற்றுடன் பிரதிவரி உள்ளது. பிரதிவரி தாவும் யாளிகளாக உள்ளன.

பொதுவாகக் கருவறையின் வெளிப்புறத்தில் உத்திரத்தின் மேலே வாஜனத்துடன் வலபி காட்டப்பட்டிருக்கும். வலபியில் பூதகணங்களோ, தாமரை இதழோ அல்லது அன்னவரியோ காட்டப்பட்டிருக்கும். ஆனால் இங்கு தாவும் யாளிகள் காட்டப்பட்டிருப்பது சிறப்புவாய்ந்த ஒன்றாகும். இவ்வமைப்பு கோயில் கட்டடக்கலையில் இச்சடைமுடிநாதர் கோயிலுக்குத் தனி இடத்தைப் பெற்றுத் தந்துள்ளதாகக் கூறலாம்.

கூரை கபோதமாக முன்னிழுக்கப்பட்டு நீட்சியாக உள்ளது. கபோதக் கீழ்விளிம்பில் சந்திரமண்டலம் காட்டப்பட்டுள்ளது. கர்ணபத்திகளில் கபோதம் நேத்ர நாசிகைகள் பெற்றும் திருப்பங்களில் கொடிக்கருக்குகள் பெற்றும் உள்ளது. சாலைப்பத்திகளின் கபோதம் திருப்பங்களிலும் மத்தியிலும் கொடிக்கருக்குகளும் இருநாசிகைகளும் பெற்றுள்ளது. கபோத நாசிகைகள் கொடிக்கருக்குகள் பெற்ற வளைவுகளையும் மேலே கீர்த்திமுகமும் பெற்றுள்லன. கபோதத்திற்கு மேலே தளமுடிவைக் காட்டும் பூமிதேசம். இப்பூமி தேசத்தில் காட்டப்பட்ட யாளிகள் சில இடங்களில் எதிரெதிரே காணப்படுகின்றன. திருப்பங்களில் மகர தலைகள் பெற்றுள்ளன. கர்ணபத்திகளிலுள்ள தூண்கள் தாமரை இதழ் போன்ற வளைவுமுனைகளை பெற்றுள்ளன. சாலைப்பத்தியிலுள்ள தூண்கள் இவைகளைப் பெறாமல் உருளையாக உள்ளன. கீழ்தளத்தின் மேலே செடிகொடிகளும் மரங்களும் வளர்ந்திருப்பதால் கட்டுமானக் கற்கள் தடம் பிரிந்து இடம் பெயர்ந்துள்ளன. இதனால் ஆர உறுப்புகள் முழுமையாகக் காணுமாறு இல்லை.

இரண்டாம் தளத்தின் ஆரச்சுவரில் சாலையின் இருபக்கத்திலும் இரு நாசிகைகள் வீதம் நான்கு நாசிகைகள் உள்ளன. ஆநச்சுவரில் உள்ள தூண்களிலுருந்து எழும் வீரகண்டம் போதிகையுடன் உத்திரம் வாஜனத்தை தாங்குகின்றன. மேலே வலபியில் பூதகணங்கள். கீழ்தளத்தில் ஆலிங்கம், அந்தரி, தாவும் யாளி கொண்ட பிரதிவரி, வாஜனம், போன்ற உறுப்புகள் அமைய இரண்டாம் தளத்தில் வலபியுடன் கூடிய பூதகணங்கள் அமைந்திருப்பது சற்று வித்தியாசமானதாகும். பல்லவர்களால் தொடங்கி வைக்கப்பட்ட கோயில் கட்டிடக்கலை வளர்ச்சியில் சில மன்னர்கள் காலத்தில் புதியபாணி புகுத்தப்பட்டு வந்துள்ளது. இதன் தொடர்ச்சியாக முற்சோழர்காலத்திலும் பழைய முறையைப் பின்பற்றாமல் புதிய பாணி புகுத்தப்பட்டுள்ளதற்கு இக்கோயில் சிறந்த எடுத்துக்காட்டாக தெரிகின்றது.

(தொடரும்)
this is txt file
       
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.