http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[176 Issues]
[1745 Articles]
Home About US Temples Facebook
Issue No. 67

இதழ் 67
[ ஜனவரி 15 - பிப்ரவரி 15, 2010 ]


இந்த இதழில்..
In this Issue..

மாமன்னர் கிருஷ்ண தேவராயர்
இத்திருமலை செய்வித்தார்
கோவணநாடகம்
திருவரங்கத்து வைகாசித் திருவிழா
அன்னபிராயம் செய்த நாள்கொடை
தமிழிலிருந்து வந்ததா ஜப்பானிய மொழி?
பண்டைய நாழிகை காட்டிகள்
இதழ் எண். 67 > கலையும் ஆய்வும்
அன்னபிராயம் செய்த நாள்கொடை
மா. இலாவண்யா

கல்வெட்டுகள் மன்னர் பெயர், ஊர் பெயர் முதலிய செய்திகளை மட்டும் வழங்குவதில்லை. ஆழ்ந்து ஆராய்ந்தால், அக்காலச் சமுதாயத்தில் நிலவிய பழக்க வழக்கங்களையும், இந்நாளில் நிலவும் பழக்கம் எப்போது எவ்விதம் தொடங்கியது என்ற செய்திகளையும் கல்வெட்டுகளில் காணலாம். நம்முடைய வேர்களைத் தேடக் கல்வெட்டுகள் மிகச் சிறந்தவை.

ஒரு சில சமுதாயத்தில் குழந்தைக்கு முதன்முதலில் சோறூட்டும் வைபவத்தை நல்லநாள் பார்த்துக் கடவுளுக்குப் படையலிட்டு வணங்கியபின் செய்வது வழக்கத்தில் உள்ளது. இப்பழக்கம் எப்பொழுது தொடங்கியது என்பது தெரியவில்லை. ஆனால் ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக இப்பழக்கம் நம் சமுதாயத்தில் நிலவியுள்ளது என்பது, திருச்சிராப்பள்ளியிலுள்ள டாக்டர். மா.இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மைய ஆய்வர்களால் கண்டறியப்பட்ட பின்வரும் திருச்செந்துறைக் கோயில் கல்வெட்டின் வாயிலாகத் தெளிவாக விளங்குகிறது.

கல்வெட்டு உள்ள ஊர் : திருச்சிராப்பள்ளி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து பத்து கி.மீ. தொலைவில் திருச்சிராப்பள்ளி கரூர் நெடுஞ்சாலையில் உள்ளது திருச்செந்துறை. இவ்வூர் சோழர்கள் காலத்தில் ஈசான மங்கலத்து பிரம்மதேயமாக விளங்கியது.

கோயில் : சந்திரசேகரர் கோயில் என்று தற்போது அழைக்கப்படும் கோயில் அரிஞ்சய சோழரின் வாழ்வரசியான கொடும்பாளூர் பூதி ஆதித்த பிடாரியால் கட்டப்பட்டது.

கோயிலில் கல்வெட்டு உள்ள இடம் : கருவறை, உள்மண்டப ஜகதி. கல்வெட்டின் தொடக்க எழுத்துக்கள் சில தவிர எஞ்சிய முதற் பகுதி ஆலமர் அண்ணலின் கட்டடப் பகுதியில் சிக்கியுள்ளன.

கல்வெட்டுச் செய்தி : கொடும்பாளூர் ஆதித்தம் பூதி என்பவர், தன் மகன் பூதி பராந்தகன் அன்னபிராயம் செய்த நாளில் கோயில் இறைவனுக்கும், பிள்ளையாருக்கும் திருவமுது செய்விக்க அதாவது படையல்கள் செய்ய மற்றும் வழிபாடுகளுக்காக தேவதான இறையிலி அதாவது வரி நீக்கியநிலத்தை கொடையளித்தார்.

கல்வெட்டு வரிகள் :

1) ஸ்வஸ்தி................ஆதித்தம் பூதியேன் என் மகன் பூதி பராந்தகன் அந்நப்ராயஞ் செ[ய்*]கின்ற இடத்து தக்ஷிணையாக பிரமதேயம் ஈசான ம

2) ங்கலத்து .................ம் உடும்போடி ஆமை தவழ்ந்தது எப்பேர்ப்பட்ட நிலமு முண்ணிலம் ஒழிவின்றி குடி நீக்கிய தேவதானமாக நீரோடு அட்டிக் இறையி

3) லி சந்திராதி.........படி திருவமிதுக்கு பதக்காறு குத்தல் பழவரிசி சிறுகாலைக்கும் உச்சம் போதைக்கும் ஆக சூல நாழியால் பதி[னா*]று நாழிக்கு நிசதி நெல் ஐங்குறுணி இருநாழி உரியா

4) ழாக்கான ப[டி]...........கலனே இரு தூணிப் பதக்கினால் நிலம் ஒன்றரையே யொருமா முக்காணி அரைக்காணி முந்திரிகையும் தூப்பருப்பு நாழிக்கு நெல் நானாழியும் நெய்யமிது

5) முழாக்கி............க்கு நெல் அறு நாழியும் காயத்துக்கும் உப்புக்கும் புளிக்கும் நெல் முன்னாழியும் தயிரமிது போது நாழியானபடி முன்னாழியால் நெல் குறுணி ஒரு நாழியும் ஆக

6) நிசதி.........னே முக்குறுணியால் நிலம் இரண்டேய் ஒரு மாக்காணியும் கணவதியார்க்கு நிசதிப்படி அப்பம் அமிது செய்ய அரிசிக்கு நெல் முன்னாழியும் நெய் யாழாக்குக்கு நெல் முன்னாழியும் சர்க்கரை இரு பலத்துக்கும் நெல் இருநாழியும் ஆ[க*] இப்பரமேச்வரருடைய கணவதியார்க்கு நிசதி குறுணியானபடி ஆண்டுவரை முப்பதின் கலத்தா

7) ............ம் முக்காணி முன்திரிகையால் நெல் நால்க் கலனே அறு நாழியுமாக நெல் நானூற்றுக் கலத்துக்கும் நிலம் நால் வேலியும் சூல காலால் வேலி நூற்றுக் கல வரிசையால் என் மகன் பூதி பராந்தகன் அன்ன பிராயஞ் செய்த நான்று இ1

குழந்தை முதன் முதலில் சோறுண்ணத் தொடங்கிய நாளை அக்காலத்திலும் இறைவனுக்கு படையலிட்டுக் கொண்டாடினர் என்பது இக்கல்வெட்டின் மூலமாகத் தெரியவருகிறதன்றோ.
this is txt file
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.