http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[179 Issues]
[1772 Articles]
Home About US Temples Facebook
Issue No. 78

இதழ் 78
[ டிசம்பர் 16 - ஜனவரி 17, 2011 ]


இந்த இதழில்..
In this Issue..

இது உங்கள் சொத்து
மேற்றளியாரும் நலக்குன்றத்தாரும் - 3
ஆரியபட்டாள் வாசல்
சென்னை அருங்காட்சியகச் செப்பேடுகள் - 3
புத்தகத் தெருக்களில் - இன்பக்கேணியும் ஆயிப்பெண்ணும்
தட்சிணாமூர்த்தி பிள்ளை
இதழ் எண். 78 > பயணப்பட்டோம்
புத்தகத் தெருக்களில் - இன்பக்கேணியும் ஆயிப்பெண்ணும்
ரிஷியா


உலகம் 'இன்பக்கேணி' என்றான் பாரதி. இச்சொற்றொடரே திரு. பிரபஞ்சன் எழுதிய இந்நாவலின் பெயராக அமைந்துள்ளது. மனித மனம் எத்தனை சிறுத்துப் போனாலும், மாலைகள் எத்தனை அற்புதமாக இருந்து மயக்குகின்றன நம்மை? சூரியமழையில் நனைந்திருக்கிறீர்களா? என நம்மைப் பார்த்துக் கேள்விக்கணைகளை வீசுகிறார் பிரபஞ்சன். அவர் நாவலின் கதாநாயகியும் அவரைப் போன்றே ஒரு மகாரசிகை.

ஆயி, கிருஷ்ணதேவராயர் காலத்தில் வாழ்ந்த ஒரு தேவரடியார்ப் பெண். அவள் நினைவாக ஆயிமண்டபம் என்ற பெயரில் நினைவுச்சின்னம் எழுப்புகிறார் பிரான்ஸ் மன்னர். ஏன்? ஆயி கதைக்கு ஆதாரமான கல்வெட்டையும் இணைத்துள்ளார் திரு. பிரபஞ்சன் தன் நாவலில்.

ஆயிக்குக் கிணற்றடியே சொர்க்கபுரி. ஜலக்கண்ணாடியில் தன் பிம்பத்தை இரசிப்பதே தனது நித்தியப்படி வழக்கமாய்க் கொண்ட பெண். ஒருநாள் குரு ஆனந்தரின் சிஷ்யரான மாதவனைச் சந்திக்கிறாள். காதலின் பல தோற்ற மாயங்களை, அதன் மயக்கங்களை யார் அறிவார்? அவள் மனம் மாதவனிடம் இலயிக்கிறது. குரு ஆனந்தரின் சிஷ்யனான அவனுக்கும் அவளிடம் ஒரு பிடிப்பு ஏற்படுகின்றது. அரசியல் சூழல் எனப் பலவும் வழக்கம்போலவே அவ்விரு காதலர்களையும் பிரித்து விடுகின்றது.

மாதவன் அவனுடைய குருநாதர் ஆனந்தன் இடையே நடக்கும் ஓர் உரையாடல் நம்மை ஆழ்ந்து சிந்திக்க வைப்பது.

மாதவன் கேட்கிறான், "இவர்கள், இந்த ஆடுவார்கள் என்ன பாவம் செய்தார்கள்?"

ஆனந்தர் சிரித்தார். "மனிதர்கள் எத்தனை விசித்திரமான ஜந்துக்கள்! அவர்களுக்குக் கலை வேணும்; பாட்டும் கும்மாளமும் வேணும்; ஆனால், பாடுவோர், ஆடுவோர் கீழ்த்தரம். அவர்களுக்குக் காமசுகம் வேணும்; ஆனால் அதைத் தருவோர் கீழ்த்தரம்".

நாவலில் இடம்பெறும் இந்த வார்த்தை சவுக்கடிகள் நம்மை, நம் சமூக சிந்தனைகளை எள்ளி நகையாடுகிறது.

சங்கீதம் பாடுவது, அபிநயம் பிடிப்பது, காதல் புரிவது என அவள் காலம் இனிதே நடைபயில்கின்றது. சாளுவ நரசிம்மன் அவள் வாழ்வில் வரும்வரை. அவனோ பெரும் தரத்து அதிகாரி. அவள் விருப்பம் இல்லாமலே அவனுக்கு அவள் போகப் பொருளாகிறாள். ஆயி துணிச்சலான பெண். தன்னை முதல்முதலாய்த் தன் காதலனுக்கு அர்ப்பணித்த பிறகே அவள் சாளுவ நரசிம்மனை ஏற்றுக் கொள்கிறாள்.

அரசியல் சதிகள் விளையாடுகின்றன, காட்சிகள் மாறுகின்றன. துளுவ நரசிம்மன், விஜயநகரப் பேரரசுவிற்கு எதிராகக் கலகம் செய்வதாகக் குற்றம் சாட்டப்பட்டு, ஆயியிடமிருந்து பிரிந்து சென்று விடுகிறான். மாதவன் தன் குடும்பத்தார் விரும்பும் பெண்ணை மணக்கிறான். அவன் ஆதுலர் சாலை வைக்க ஆயியே உதவுகின்றாள்.

ஒருநாள் வைகறைப் பொழுதில் தூபமணம் கமழும் அவள் மாளிகையைக் கோயில் எனக் கருதிக் கை தொழுதான் கிருஷ்ணதேவராயன். ஆனால், அது கோயில் அல்ல; தேவரடியார் வீடு என்று அறிந்தவுடன் அதை இடித்துத் தள்ள உத்தரவிடுகிறான். என்ன ஒரு பெரிய மனம் அம்மன்னனுக்கு?

ஆயி அம்மன்னனிடம் விண்ணப்பிக்கிறாள். "நான் ஜீவனம் செய்த சுவடு ஒன்றை விட்டுச்செல்ல விரும்புகின்றேன். கேணியும் குளமும் என் பேராசை" என்கிறாள். மன்னன் ஏற்றுக்கொள்ள, ஆயி குளம், கேணி வெட்டுகிறாள். ஜனங்கள் அதைப் பயன்படுத்துகிறார்கள்.

மாபெரும் சோழ சாம்ராஜ்யத்தின் வீழ்ச்சிக்குப் பிறகே ஆடற்கணிகையரின் வாழ்வுநிலை தாழ்வுறுகிறது என்பது வரலாற்று ஆய்வாளர்களின் கருத்து. அந்நிலையிலும் நற்காரியங்கள் பல செய்கின்றனர் அப்பெண்கள். அவற்றையெல்லாம் எழுதாமல் கீழான சுவாரசியங்களை எழுதுவதே வாடிக்கையாகிவிட்டது நம் தமிழ் எழுத்து வியாபாரிகளுக்கு. மாறுபட்டவர் திரு. பிரபஞ்சன்.

வரலாற்று ஆசிரியர்கள் கண்ணில் தென்படாத இந்த ஆயிப்பெண் நம் எழுத்தாளரின் கவனத்தை ஈர்த்துள்ளார். விளைவு, "இன்பக்கேணி"யின் மூலம் தமிழ் நல்லுலகத்திற்கு ஆயி அறிமுகம் ஆகிறார்.

தமிழக வரலாற்றில் இவரைப் போன்று பல ஆயிகள் உண்டு. அவர்களை எல்லாம் நாம் சந்திப்போம்.

எளிமையான தமிழ்நடையுடன் கூடிய இனிய நாவல் இது. இன்பக்கேணி - திரு. பிரபஞ்சன் - கவிதா வெளியீடு, சென்னை-17.
this is txt file
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.