http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[179 Issues]
[1772 Articles]
Home About US Temples Facebook
Issue No. 79

இதழ் 79
[ ஜனவரி 16 - பிப்ரவரி 17, 2011 ]


இந்த இதழில்..
In this Issue..

நினைவுச் சின்னத்தைப் பாதுகாக்க சமஸ்கிருத அறிவு தேவையா?
மாங்குடி
அறிவர் கோயில் - 1
சென்னை அருங்காட்சியகச் செப்பேடுகள் - 4
பழனி முத்தையா பிள்ளை
பேய்த்திருவிழா
இதழ் எண். 79 > கலையும் ஆய்வும்
மாங்குடி
மு. நளினி

அண்ணல்வாயில் வயலோகம் சாலையில் 10 கி. மீ. தொலை வில் அமைந்துள்ள மாங்குடி வளம் குறைந்த சிற்றூராகும். ஊரின் புறத்தே பரந்து கிடக்கும் பாறைத்தொடரின் சற்று உயரமான பகுதியில் கிழக்கு முகமாகச் சிறிய அளவிலான குடைவரை அகழப்பட்டுள்ளது.1 முகப்பு, அகலக்குறைவான முகமண்டபம், கருவறை என அமைந்துள்ள குடைவரையின் முன்னுள்ள பாறைத்தரை இடைவெளியிட்ட மூன்று துண்டுக ளாக விடப்பட்டுள்ளது. தென், வடல் துண்டுகள் அகலக்குறை வினவாக அமைய, நடுத்துண்டு அவற்றைப் போல் மும்மடங்கு அகலம் பெற்றுள்ளது. குடைவரையின் வடபுறம் சாய்த்து வைக்கப்பட்டுள்ள இறைவியின் தனிச் சிற்பம் சிதைந்துள்ளது.

முகப்பு

தென்வடலாக 1. 95 மீ. நீளம், கிழக்கு மேற்காக 39 செ. மீ. அகலம், 1. 96 மீ. உயரம் கொண்டுள்ள முகப்பை அதன் தெற்கிலும் வடக்கிலும் வெட்டப்பட்டுள்ள உறுப்பு வேறுபாடற்ற நான்முக அரைத்தூண்கள் அணைத்துள்ளன. தூண்களின் மேலுள்ள வளைமுகப் போதிகைகள் மெலிதான உத்திரம் தாங்க, கூரை யைத் தழுவி வாஜனம். கூரை வடிவமைக்கப்படாத கபோதமாக முன்னிழுக்கப்பட்டுள்ளது. தூண்களையொட்டிக் கிழக்கு முகமாகப் பரவும் தென், வடபாறைச்சுவர்கள் மேலிருந்து கீழாக அகலப் பட்ட நிலையில், கீழ்ப்பகுதியில் முறையே 81, 83 செ. மீ. அகலத் திற்குப் பரவியுள்ளன. அவற்றில் கல்வெட்டுகளோ, சிற்பங்களோ இடம்பெறவில்லை.

முகமண்டபம்

முகப்பை அடுத்து 2. 25 மீ. நீளம், 44 செ. மீ. அகலம், 1. 67 மீ. உயரம் கொண்டு அமைந்துள்ள முகமண்டபத்தின் வடக்குச் சுவர் முழுமையுறவில்லை. தெற்குச் சுவர் முழுமையடைந்துள்ள போதும் சீர்மையுறவில்லை. கூரையும் தரையும் பெருமளவிற்குச் சீராக்கப்பட்டுள்ளன. முகப்பின் முன்னுள்ள நடுப் பாறைத்தரை முகமண்டபத் தரையின் தொடர்ச்சியாக அமைந்துள்ளது.

கருவறை

சீர்மையுறாத முகமண்டப மேற்குச் சுவரில் 1. 63 மீ. உயர, 56 செ. மீ. அகல வாயில் திறக்கப்பட்டுள்ளது. நிலைகளற்ற இவ்வாயிலின் முன் படிகள் இல்லை. தெற்கு வடக்காக 1. 22 மீ. நீளம், கிழக்கு மேற்காக 60 செ. மீ. அகலம், 1. 64 மீ. உயரம் பெற்றுள்ள கருவறையின் தெற்கு, வடக்குச் சுவர்களும் வாயிலை ஒட்டிய கிழக்குச் சுவரும் கூரை, தரை இவையும் பெருமளவிற்குச் சீரமைக்கப்பட்டுள்ளன. பின்சுவரில், கருவறைத் தரையிலிருந்து 72 செ. மீ. உயரத்தில் அமையுமாறு 54 செ. மீ. பக்கமுடைய சதுரக் கோட்டம் 7 செ. மீ. ஆழத்திற்கு வளைமுகத் தலைப்பு டன் அகழப்பட்டுள்ளது. அக்கோட்டத்தில் இடம்பெற்றுள்ள இலலிதாசன இடம்புரிப் பிள்ளையார் குடைவரைக் காலத்திற் குப் பிற்பட்ட தோற்றஅமைதியில் பின்கைகளில் அங்குசம், பாசம் கொண்டு, வல முன் கையில் தந்தம் ஏந்திக் காட்சி தருகிறார். கரண்டமகுடம் அணிந்துள்ள அவரது இட முன் கை மோதகத்தைத் துளைக்கை சுவைக்கிறது.

குடைவரையின் காலம்

சிற்பங்கள், அலங்காரமான கட்டுமான உறுப்புகள் இவை ஏதுமற்ற நிலையில் குடைவரையின் காலத்தை நிர்ணயிப்பது எளிதானதாக இல்லை.

குறிப்புகள்

1. ஆய்வு நாள்: 13. 6. 2010. உடனிருந்து உதவிய இந்தியத் தொல்லியல்துறை உதவியாளர் சு. பாலசுந்தரம் நன்றிக்குரியவர்.
this is txt file
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.