![]() |
![]() |
![]() |
http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [181 Issues] [1800 Articles] |
Issue No. 114
![]() இதழ் 114 [ டிசம்பர் 2014 ] ![]() இந்த இதழில்.. In this Issue.. ![]() |
தொடர்:
ஆய்வுப்பாதையில் ஆங்காங்கே
மயிலாடுதுறை அருகே உள்ள பொன்செய் நல்துணையீசுவரம் திருக்கோயில் முந்தைய ஆய்வாளர்களால் முதலாம் பராந்தகர் காலத்துக் கோயிலாக அடையாளம் காணப்பட்டுள்ளது. இங்குள்ள பாதபந்தத் தாங்குதளத்தின் கண்டப் பகுதியிலும் தாங்குதளத்திற்கு மேல் அமைந்துள்ள வேதிகைத் தொகுதியின் பாதங்களிலும் பல்வேறு புராண இதிகாசக் காட்சிகளையும் இராமாயணக் காட்சிகளையும் சித்தரிக்கும் குறுஞ்சிற்பங்கள் அமைந்துள்ளன. ![]() இவற்றுள் சூரியன் தொடர்பான ஒரு புராணக் காட்சியைச் சித்தரிக்கும் ஒரு அரிய சிற்பம் காணப்படுகிறது. இக்குறுஞ்சிற்பத்தில் சூரியன் தன் இரு கைகளிலும் மலர்ந்த தாமரை மலர்களை வைத்துள்ளார். அவரது சிரசின் பின்புறம் ஒளி வட்டம் காட்டப்பட்டுள்ளது. ஒரு குதிரையும் ஒற்றைச்சக்கரமும் உள்ள தேரில் இரு மருங்கிலும் தேவியர் விற்போரில் ஈடுபட்டிருக்க அவர் சிரித்த முகத்துடன் தன் பயணத்தை தொடர்கிறார். இது குறித்த புராணக்கதை எவருக்கேனும் தெரிந்தால் எங்களை அடியிற்காணும் பின்னூட்டம் வழி தொடர்பு கொள்ளவும். this is txt file� |
![]() சிறப்பிதழ்கள் Special Issues ![]() ![]() புகைப்படத் தொகுப்பு Photo Gallery ![]() |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |