http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[176 Issues]
[1745 Articles]
Home About US Temples Facebook
Issue No. 120

இதழ் 120
[ ஜுன் 2015 ]


இந்த இதழில்..
In this Issue..

சிராப்பள்ளி முசிறிச் சாலையில் சில கண்டுபிடிப்புகள்-3
A Study on Nagaram in Thiruchirappalli District - II
To Sacred Shrines.. with Sacred Hymns..- 1
Chola Ramayana 14
இசையால் இசையும் இடைமருதூர் இறைவன் -2
ஆய்வுப்பாதையில் ஆங்காங்கே - 11
திருவல்லம் கம்பராஜபுரம் சிதைந்த திருக்கோயில்
சிறுபாணாற்றுப்படை சுட்டும் மடைநூல்
இதழ் எண். 120 > இலக்கியச் சுவை
சிறுபாணாற்றுப்படை சுட்டும் மடைநூல்
ரிஷியா
ஐந்திணை சார்ந்த இயற்கையோடு இயைந்த வாழ்வியலை மேற்கொண்டிருந்த சங்க காலத் தமிழரின் உணவியலும் அவரவர் திணை சார்ந்து இயற்கை வளத்தோடும் நலத்தோடும் ஒருமித்த வழக்காறாய் அமைந்து சிறப்புற்றிருந்தது. உணவியல் கலை பற்றிக் குறிப்பிடும் மடை நூல்களும் அக்காலத்தில் வழக்கில் இருந்துள்ளமையை ஆற்றுப்படை நூல்களுள் ஒன்றான சிறுபாணாற்றுப்படை சுட்டுகிறது. இச்சுவையான இலக்கியச் சுட்டலில் மகாபாரதச் செய்திகளையும் பஞ்ச பாண்டவர்களுள் இருவரான அர்ஜூன ன் மற்றும் வீமன் பற்றிய செய்திகளையும்கூட அறிய முடிவது கூடுதல் சிறப்பு.



அப்பாடல் வரிகள் இதோ..

‘கா எரியூட்டிய கவர் கணைத் தூணிப்
பூ விரி கச்சை புகழோன் தன்முன்
பனி வரை மார்பன் பயந்த நுண்பொருள்
பனுவலின் வழாஅ பல்வேறு அடிசிலை..
- வரிகள் 238-241

கா எரி ஊட்டிய கணை கவர் தூணிபூ விரி கச்சை புகழோன் - காண்டவ வனத்தை நெருப்புண்ணும்படி எய்த கணையை உள்ளடக்கின ஆவநாழிகையினையும் (அம்பறாத் துணியையும்) பூத்தொழில் பரந்த கச்சையினையும் (அதாவது இடைக்கச்சினையும்) உடைய புகழ் மிக்கவனின் (அருச்சுனன்)

(புகழோன்) தன்முன் பனிவரை மார்பன் பயந்த- (அருச்சுனனின்) தமையனாகிய இமய மலையையொத்த மார்பை உடையவனான வீமசேனன் கண்ட

நுண் பொருள் பனுவலின் வழாஅ பல் வேறு அடிசில்- கூரியபொருளையுடைய மடைநூலில் காணப்படும் நெறியிலிருந்து தப்பாத பல வேறுபாட்டையுடைய அடிசிலை..

அக்காலத்தில் பல்வேறு சமையல் நூல்கள் (மடை நூல்கள் அல்லது பாகசாத்திர நூல்கள்) புழக்கத்தில் இருந்ததையும் அவற்றுள் ஒன்றாக சமையற்கலையில் சிறந்த கலைஞனான வீமன் யாத்த நூலும் இருந்ததையும் இப்பாடல் வரிகள் ஒருங்கே குறிப்பிடுகின்றன. ‘நள பாகம்’ ‘பீம பாகம்’ என்று பேச்சுவழக்கில் குறிப்பிடப்படுவதை சிறுபாணாற்றுப்படையும் வலியுறுத்துவது குறிப்பிடத்தக்கது.
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.