http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[176 Issues]
[1745 Articles]
Home About US Temples Facebook
Issue No. 133

இதழ் 133
[ மார்ச் 2017 ]


இந்த இதழில்..
In this Issue..

The Importance of Rajaraja Chola I and his son Rajendra Chola I in Southeast Asian Tamil Links
TEMPLES IN AND AROUND THIRUCHIRAPPALLI - 6
உலகப் பார்வைக்கு உதயம் - 1
பெருங்குடித் தோரணம்
திருவையாற்று தென்கயிலாயம்
கருந்துளைக் குழலும் வில்யாழும்
இதழ் எண். 133 > பயணப்பட்டோம்
திருவையாற்று தென்கயிலாயம்
சு.சீதாராமன்

 



மார்கழியின் மகத்தான இசை அனுபவம் ஒவ்வொருவரும் தவறாமல் பெறவேண்டிய பேறு! இந்த வருடமும் தியாகப்பிரம்ம உற்சவத்தை முன்னிட்டுத் திருவையாறு வழக்கம்போல் விழாக்கோலம் பூண்டது. அடியேனுக்கும் அங்குச் செல்ல அலுவல் நிமித்தமாக ஒரு வாய்ப்புக் கிடைத்தது. சரி, இம்முறை தென்கயிலாயம் கோவிலை நிதானமாகப் பார்த்துவிட்டு வருவோம் என்று மனதிற்குள் ஒரு சங்கல்பம்! தென்கயிலாயம் என்றவுடன் அப்பர் சுவாமிகளின் கயிலாயக்காட்சி நினைவுக்கு வந்தது!



"மாதர் பிறை கண்ணியானை மலையான் மகளொடும் பாடி

போதொடு நீர் சுமந்து ஏத்தி, புகுவார் அவர் பின் புகுவேன்!

யாதும் சுவடு படாமல், ஐயாறு அடைகின்ற போது

காதல் மடப் பிடியோடு, களிறு வருவன கண்டேன்!

கண்டேன் அவர் திருப்பாதம்! கண்டறியாதன கண்டேன்!!"



அப்பர் சுவாமிகளின் அரும்பெரும் தவம் அவருக்குக் கண்டறியாதன காணக் கொடுப்பினையாயிருந்தது! நமக்கு என்ன கிடைக்கும்! இந்தக் கணக்குகள் எல்லாம் மனதில் இல்லை! ஓர் இனம்புரியாத உற்சாகம்! கோயிலை நோக்கி ஈர்க்கப்பட்டேன்! வழக்கம்போல் புகைப்படக்கருவி நம்மை ஆட்கொண்டதில் கோயில் கட்டமைப்பை உள்வாங்கிக்கொள்ளாமல் புகைப்படமெடுப்பதிலேயே கவனமிருந்தமையால் கட்டமைப்புக்கூறுகளை உள்வாங்காமல் கருமமே கண்ணாகப் படங்கள் எடுத்துக்கொண்டிருந்தேன்! முதல் தளமேறி விமான அமைப்புகளைப் புகைப்படக்கருவிக்குள் உள்வாங்கிக் கொண்டிருக்கும்போது உள்மனம் எதோ ஒன்று இங்கு வழக்கத்திற்கு மாறாகக் கண்ணில் படுகிறதே, உற்றுப்பார் என்று எச்சரித்தது! ஆனாலும் புறமனம் அந்த எச்சரிக்கையைக் கண்டு கொள்ளாமல் அதன் வேலையிலேயே குறியாயிருந்தது! கீழே இறங்கி ஒவ்வொரு பத்தியாகப் படங்கள் எடுக்கும் போதும் உள்மனம் குரலெழுப்ப, வழக்கம்போல் புறமனம் அலட்சியப்படுத்த, மீண்டும் கருமமே கண்ணாகப் புகைப்படங்கள் எடுக்கும் வேலை தொடர்ந்தது!



 





 





திருவையாறு அமைவிட வரைபடம்  (Courtesy – Google Earth)





 

திருவையாறு மற்றும் கயிலாய மலை ஒரே 180 பாகை நேர்கோட்டில்! பிறகு புகைப்பட கருவியை அதன் யதாஸ்தானத்தில் இருத்திவிட்டு அமைதியாகக் கோயிலின் கட்டுமான அமைப்பில் மனக்ச் செலுத்தச் சில விஷயங்கள் உடனே பளிச்செனத் தென்படுவதைப் புரிந்துகொள்ள முடிந்தது. உபபீடத்திலிருந்து எழும் பத்மபந்தத் தாங்குதளம், சாலை கர்ணகூட்டை விடச் சற்று முன்னிழுக்கப்பட்டுள்ளது. சாலை மற்றும் கர்ணகூட்டிற்கு நடுவில் உள்ள சுவர்ப்பகுதியில் சுவர்ப்பஞ்சரம் காட்டப்பட்டுள்ளது. அனைத்துக் கருவறைக் கோட்டங்களிலும் சிவனின் உருவச்சிற்பங்களே காணக்கிடைகின்றன. கருவறைக்கும் முகமண்டபத்திற்கும் இடையில் ஓர் ஒடுக்கம் அமைந்துள்ளது. இவ்வொடுக்கத்தில் கிழக்குப்பக்கம் விநாயகரும் மேற்குப்பக்கம் முருகரும் நின்ற நிலையில் அருள் பாலிக்கின்றனர்.

 

இதனை அடுத்து, முகமண்டபம் நேரடியாகச் சாலைப்பத்தி பெற்று அதனை அடுத்து ஒரே ஒரு கர்ணப்பத்தி பெற்று வாயில் பெறுவது சற்று வித்தியாசமானதாகும்! பெரும்பாலான ஆலயங்களில் இவ்வாறான அமைப்பைக் காண்பது அரிதாகும். (நான் இதுவரை இதுபோன்று பார்த்தில்லை!) முகமண்டபக் கிழக்க்ச் சாலைப்பகுதியில் ஷேத்திரபாலரும் மேற்குச் சாலைப்பகுதியில் கொற்றவையும் காணப்படுகின்றனர். மேலும் முதல் தள ஆரச்சுவரில் சாலை மற்றும் கர்ணகூடுகளுக்கிடையில் விருத்தாஸ்புடிதா காட்டப்பட்டுள்ளது! 



 



 





 











 



வழக்கமான இக்காலக் கட்டுமான அமைப்புகளிலிருந்து இவ்வாலயம் கீழ்க்கண்ட வகைகளில் வேறுபடுவதை நம்மால் உணர முடிகிறது.

 

1)    இது வடமேற்குத் திசை நோக்கி அமைந்திருக்கிறது.

2)    முகமண்டபம் ஒரே ஒரு கர்ணபத்தி மட்டுமே கொண்டுள்ளது!

3)    முதலாம் ஆதித்தர் காலத்திற்குப்பிறகு கருவறைக்கோட்டங்களில் சிவனின் வடிவங்கள் மட்டுமே காணப்படுவது.

4)    முதலாம் ஆதித்தர் காலக் கட்டுமானங்களில் காணப்படும் விருத்தஸ்புடிதா முதல்தள ஆரச்சுவரில் தென்படுவது 



போன்ற தனித்தன்மையான கூறுகளைத் தரிசிக்கப்பெற்றதில் மகிழ்ந்து, அப்பருக்குக் கயிலாயக்காட்சி அருளியது போல் அடியேனுக்கும் ஐயாறப்பர் சில புதிய செய்திகளை அருளி ஆசீர்வதித்த மகிழ்வுடன் தென்கயிலாயத்தில் இருந்து வீடு திரும்பினேன்!



 


இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.