http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[176 Issues]
[1745 Articles]
Home About US Temples Facebook
Issue No. 133

இதழ் 133
[ மார்ச் 2017 ]


இந்த இதழில்..
In this Issue..

The Importance of Rajaraja Chola I and his son Rajendra Chola I in Southeast Asian Tamil Links
TEMPLES IN AND AROUND THIRUCHIRAPPALLI - 6
உலகப் பார்வைக்கு உதயம் - 1
பெருங்குடித் தோரணம்
திருவையாற்று தென்கயிலாயம்
கருந்துளைக் குழலும் வில்யாழும்
இதழ் எண். 133 > இலக்கியச் சுவை
கருந்துளைக் குழலும் வில்யாழும்
ரிஷியா

 



முல்லை நிலத்தில் ஆநிரைகள் மேய்க்கும் இடையர்களின் வாழ்வியலோடு இசையும் பின்னிப் பிணைந்துள்ளது. முல்லைவனத்து இயற்கைப் பொருட்களைக் கொண்டு தாமே தமக்குரிய இசைக்கருவிகளை உருவாக்கி இசைக்கின்றனர். இக்காட்சி பெரும்பாணாற்றுப்படை வரிகளின் வழியே மிக அழகாகப் படம் பிடிக்கப்படுகிறது. கடியலூர் உருத்திரங்கண்ணனாரின் பதிவு இதோ:



"........ கூழ் ஆர் இடையன்

கன்று அமர் நிரையொடு கானத்து அல்கி,

அம்நுண் அவிர்புகை கமழ, கைம்முயன்று

ஞெலிகோல் கொண்ட பெருவிறல் நெகிழிச்

செந்தீத் தோட்டக் கருந்துளைக் குழலின்

இன் தீம் பாலை முனையின், குமிழின்

புழற்கோட்டுத் தொடுத்த மரல்புரி நரம்பின்

வில்யாழ் இசைக்கும் விடல் ஏறி குறிஞ்சி"



வரிகள்: 175-182



விளக்கம்: கன்றுகளைப் பெரிதும் விரும்புகின்ற பசுத்திரளுடன் கானகத்தில் இருக்கும் பொழுதுகளில், நுண்புகை கமழும்படி தீக்கோலைக் கையால் கடைந்து தீ உண்டாக்கி அக்கொள்ளியால் மூங்கில் குழலில் துளையை உண்டாக்கி அப்புல்லாங்குழலை ஊதி இனிய குழலோசையை இசைக்கின்றான். பாலைப் பண்ணில் இன்னிசை பாடிப்பாடி அலுத்தபொழுது, அதைவிடுத்து, குமிழங்கோட்டை வளைத்துக்கட்டி மரல் கயிற்றை நரம்பாகக் கொண்டு யாழை உருவாக்கி, அவ்யாழிலே குறிஞ்சிப் பண்ணை விரலால் மீட்டுகிறான் என்பதாம்.



தத்தம் இசைக்கருவிகளைத் தாமே உருவாக்கி இசைத்து மகிழும் இசைக்கலைஞர்களாய் இடையர்கள் விளங்குகின்றனர். கோவலர்களின் வாழ்வில் குழலோசை என்பது இன்றியமையாததாய் விளங்குகிறது. அவர்தம் ஆநிரைகளும் குழகோசைக்கே மயங்குகின்றன. அவர்களின் எளிய இசையும் இனிமையான வாழ்க்கையும் சங்ககால வாழ்வியலின் படப்பிடிப்பாகும். இயற்கையோடும், இயற்கை சார்ந்த பொருட்களோடும் வாழ்ந்த கோவலர்தம் வாழ்க்கை சங்கத் தமிழனின் நனிசிறந்த நாகரிகத்தின் சிறந்த எடுத்துக்காட்டாகும். இயற்கைப் பொருட்கள் கொண்டும் இசைக்கருவிகளை அனாயாசமாக அவர்கள் உருவாக்கும் விதமும் அவர்களின் இசை நுண்ணறிவின் சிறந்த சான்றாகும்.



 


இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.