http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[176 Issues]
[1745 Articles]
Home About US Temples Facebook
Issue No. 11

இதழ் 11
[ மே 15 - ஜூன் 14, 2005 ]


இந்த இதழில்..
In this Issue..

புதியன விரும்பு
பகவதஜ்ஜுகம் - 2
பேய்த்தொழிலாட்டி
யாவரே எழுதுவாரே?
பழுவூர்-4
கட்டடக்கலைத் தொடர் - 9
வெளிச்சத்திற்கு வராத உறவுகள்
கல்வெட்டாய்வு - 9
மைக்கேல் லாக்வுட்டுடன் ஒரு சந்திப்பு
Gopalakrishna Bharathi - 2
சங்கச்சாரல் - 10
இதழ் எண். 11 > இலக்கியச் சுவை
சங்கச்சாரல் - 10
மா. இலாவண்யா
பறம்பு நாட்டின் செல்வம்

பாரிவள்ளல் ஆண்டு கொண்டிருந்த பறம்பு நாடு எத்தகைய மக்களைப் பெற்றது, எத்தகைய செல்வத்தைப் பெற்றது? பாரி இறந்த பின் பாரியின் இரு பெண்களையும் தன்னுடன் அழைத்துச் செல்ல வந்த கபிலர், இப்புறநானூற்றுப் பாடல் வழி, தனது கலக்கத்தை கூறுமிடத்து, பறம்பு நாட்டின் செல்வத்தைப் பற்றிப் பாடுகிறார். (புறம்: 113)

பெரும் புகழை உடையதாம் பறம்பு நாடு. அந்நாட்டு மக்களும் பாரியைப் போலவே கொடைத் தன்மையில் சிறந்திருந்தனராம். விருந்தினர்கள் தங்களுக்கு வேண்டும் அளவு அருந்துவதற்காக, அவர்கள் வீடுகளில் உள்ள மதுச் சாடிகள் திறந்தே இருக்குமாம். வருபவர்கள் பசியாற, ஆட்டுக் கிடாய்களை வெட்டிய வண்ணம் இருப்பராம். கொழுந்துவையலையும், ஊன் கலந்த சோற்றையும் எப்பொழுதும் சமைத்த வண்ணம் இருப்பராம். 'இத்தகைய செல்வம் நிறைந்தது பாரி நாடு. ஆனால் இப்பொழுது அவனில்லாமல் மக்கள் அனைவரும் கலங்கியிருக்கின்றனர். பாரியின் மக்களை உரிய கணவரிடம் சேர்ப்பிக்க அழைத்துச் செல்கிறேன்' என்று தனது கையறு நிலையை விளக்கியிருக்கிறார் கபிலர்.




கவி பாடுபவரும் பொருளாதார நிபுணர்

அறிவுடை நம்பி ஓர் பாண்டிய மன்னன். அவன் நாட்டில் வரி விதிப்பதில் குறை இருந்ததை பிசிராந்தையார் அறிந்தார். தனது பாடல் மூலம் அவனுக்கு வரி வாங்கும் சரியான முறையை விளக்கினார்.

ஒரு மா அளவு நிலமேயாயினும், அதில் விளைந்த நெல்லைக் கொண்டு யானைக்கு உணவிட்டால், அது பலநாட்களுக்கு யானைக்கு உணவாகும். நூறு செய் அளவுடைய பெரிய நிலமாக இருந்தாலும், யானை தனியே அந்நிலத்தில் உணவு உட்கொள்ளப் புகுந்தால், யானையில் காலடியில் மிதிபட்டு நெல் அனைத்தும் வீணாகும். அதுபோலவே, அறிவுடைய மன்னன் குடிமக்களிடம் வரி வாங்கும் சரியான முறையை அறிந்து வரி வாங்கினால், நாட்டில் வாழும் மக்கள் பெருமளவில் வரியைக் கொடுத்துவிட்டு பெரும் பொருள் கொண்டு தழைத்திருப்பர். ஆனால், மன்னன் அறநெறி அறியாமல், அவன் சொல்வதற்கெல்லாம் தலையாட்டும் அமைச்சர்களுடன் கூடி, தன்னிடம் மக்கள் கொண்ட அன்பு கெடும்படி வரியை வாங்குவானாயின், அது யானை புகுந்த விளைநிலத்தைப் போல, தானும் உண்ணாமல், நாட்டு மக்களும் பொருளின்றி அவதியுறுவர். (புறம்: 184)

இவ்வாறு தனது புறநானூற்றுப் பாடல் வரிகள் மூலம் மன்னனுக்கு அறிவு புகட்டுகிறார் பிசிராந்தையார். கவிபாடும் திறன் கொண்ட இவர், கற்பனை மட்டுமே கொண்டிருக்காமல், நாட்டின் பொருளாதாரம் பற்றியும் கூட தெளிவு பெற்றிருந்தார் என்பது புலனாகிறதல்லவா!

this is txt file
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.