http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[176 Issues]
[1745 Articles]
Home About US Temples Facebook
Issue No. 39

இதழ் 39
[ செப்டம்பர் 16 - அக்டோபர் 15, 2007 ]


இந்த இதழில்..
In this Issue..

வரலாற்று முடிவுகளும் மதநம்பிக்கைகளும்
நல்லூர்ப் பஞ்சரங்கள்
திரும்பிப் பார்க்கிறோம் - 11
பிள்ளையார் வழிபாட்டின் தோற்றமும் வளர்ச்சியும்
திருச்சிராப்பள்ளி மலைக்கோட்டை வட்டெழுத்துக் கல்வெட்டுகள்
அங்கும் இங்கும் (செப். 16 - அக். 15)
The Gajabahu Synchronism
காதலியின் கவலையும் சங்க கால வேட்டையும்
சங்ககாலத்து உணவும் உடையும் - 3
இதழ் எண். 39 > இலக்கியச் சுவை
காதலியின் கவலையும் சங்க கால வேட்டையும்
இரா. கலைக்கோவன்

கபிலரை அறியாதவர்கள் இருக்க முடியாது. தந்தையை இழந்த பாரி மகளிருக்குத் துணை நின்ற அந்தப் பழந்தமிழ்ப் புலவரின் பாடல்களுள் ஒன்று (318) அகநானூற்றில் காதலி ஒருத்தியின் கவலையைப் படம் பிடிப்பதாய் அமைந்துள்ளது. அவள் உள்ளம் கவர்ந்தவன் மலை நாட்டவன். முழவொலி போல அருவி கொட்ட, அதன் வளத்தால் வளர்ந்து செழித்திருக்கும் செடி, கொடிகளின் பூப்பரவலில் வண்டுகள் மொய்த்தொலிப்பது யாழென ஒலிக்கும் வளநாடு அவனுடையது. காதலியைக் கண்டு மகிழ நாள் தவறாமல் அவள் வாழிடம் வந்து செல்ல அவன் பயன்படுத்திய பாதை பகலிலேயே பாம்புகள் மேயும் காட்டுப்பாதை. புலிகளின் உறுமலும் யானைகளின் ஒலியும் நிறைந்த ஆபத்தான வழி.

இந்தத் துன்பங்கள் எவற்றிற்கும் அஞ்சாது காதலியோடு இருக்கும் மகிழ்வையே பெரிதாய்க் கருதி இரவுப்போதுகளில் இப்பாதை வழியே அவன் தனியே வந்து செல்வது காதலிக்குக் கவலை வளர்த்தது. 'திருமணம் செய்து கொள்வோமே' என்று சொல்லிப் பார்த்தாள். அவனோ காதலை நீட்டிப்பதிலேயே கவனமாக இருந்தான். அவள் மீண்டும் சொன்னாள், 'மணம் செய்து கொள்வோம். அதின் உனக்கு நாட்டம் இல்லையாயின் இனி வராதே!'

அவளுக்கே தெரியும், அவன் வராமல் இருக்கமாட்டான் என்பது. அவள் விரும்பவும் செய்தாள் அவன் வரவேண்டுமென்று. அதனால், தொடர்ந்து சொன்னாள், 'அப்படி வருவாய் என்றால், அன்பனே, உன் நண்பர்களுடன் நாய்களைத் துணைக்குக் கொண்டு வேட்டைக்குச் செல்லும் போது காட்டு வழியில் திசைமாறிப் போய்விடும் சூழல்களில் ஒருவரையொருவர் தொடர்பு கொள்ளவும் விலங்குகளைத் துரத்திச் செல்லும் நாய்களை மீள அழைக்கவும் குறிப்பொலி செய்யப் பயன்படுத்துகிறீர்களே ஓர் ஊது கொம்பு, அதை நீ ஊர்த் திரும்பியதும் கொஞ்சம் ஊதி, அந்த ஊதல் ஒலியால் நீ நலம்படத் திரும்பிவிட்டாய் என்பதை எனக்கு அறிவித்திடல் வேண்டும்!'

காதலியின் கவலைகளில்கூட வரலாற்றைத் தோய்த்துத் தந்திருக்கும் கவிஞர்கள் பிறந்த நாட்டில், வரலாறு எழுதத் தரவுகள் இல்லை என்பாரும் பிறந்துள்ளனரே அதுதான் துன்பம்.

this is txt file
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.