http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[176 Issues]
[1745 Articles]
Home About US Temples Facebook
Issue No. 58

இதழ் 58
[ ஏப்ரல் 26 - மே 20, 2009 ]


இந்த இதழில்..
In this Issue..

கொள்ளை அழகு - கொள்ளை போகும் அழகு
மீனாட்சி திருமணத்தில் மங்கம்மாள்
திரும்பிப்பார்க்கிறோம் - 30
பழந்தமிழ்க் கல்வெட்டுகள்
கங்கையின் மறுவீட்டில் - 4
Thirumeyyam - 5
பிரிய மனமில்லாத புறாக்களும் பகலிரவு தெரியாத பாவையும்!
சோழர்களின் சாஸன சுலோகங்கள்
பிறமொழிக் கல்வெட்டுக்கள் – 1
வடமொழிக் கல்வெட்டுக்கள் – 3
இதழ் எண். 58 > இலக்கியச் சுவை
பிரிய மனமில்லாத புறாக்களும் பகலிரவு தெரியாத பாவையும்!
இரா. கலைக்கோவன்


'நெற்றியில் கவலையின் ரேகைகள் படிய, தோள்கள் ஏக்கத்தால் மெலிய, சரியாக உண்ணாமையினால் இடுப்பும் அடிவயிற்றுப்பகுதியும் மடிப்புகளை இழக்க, எது பகல், எது இரவு என்பதுகூடத் தெரியாதவளாய் விழிகளில் நீர் பெருகி வழிய, இங்கே இவள் தனித்துத் துன்புறுவாள் என்ற கருத்தே இல்லாமல் பொருள் சேர்க்கப் பிரிந்து சென்ற தலைவா, நீ சென்றிருக்கும் வழிதான் எவ்வளவு ஆபத்தானது?

தன்னை நெருங்கி வந்து சீறிய புலியை விரட்டிய வேகத்தில் மதச் செருக்குற்ற யானைகள் அந்த வழியில் போவார் வருவாரையெல்லாம் வெருட்டிச் சிதைக்கும். முள்ளம்பன்றிகள் அங்குமிங்கும் உலவும். புற்றுகளைத் தம் பெருங்கைகளால் கிளறும் கரடிக்கூட்டம் இயங்கும் அந்த வழியில் பாழடைந்த பொதியில் ஒன்று உண்டு. வழிபாடிழந்த அதன் கருவறைக் கந்திலிருந்த கடவுளும் வேறிடம் தேடிப் போய்விட்டார். சுவர்களில் புதர்கள் மண்டியுள்ளன. புற்றுகள் செறிந்துள்ளன.

கடவுளே போனபிறகும் நெடுங்காலம் அங்கிருந்த உறவின் காரணமாக, அக்கோயிலைவிட்டுப் பிரிந்து செல்ல மனமில்லாத புறாக்கள் மட்டுமே அங்குத் தங்கிக் கூச்சலிட்டுக் கொண்டுள்ளன. அந்தக் கம்பலையும் பெருங்கற்களும் நிரம்பிய வழியிலன்றோ நீ சென்றிருக்கிறாய்! நீ திரும்பி வரும்வரை இவள் எப்படி அமைதிகாப்பாள் தோழனே?'

சங்ககாலக் கோயில், அதன் அமைப்பு, வழிபாடிழந்த கோயில்களில் இறைவன் இரான் என்ற ஊரார் நம்பிக்கை, எத்தனை துன்பம் வந்தும் உறவின் காரணமாய் ஒன்றியிருப்பவரும் உளர் எனும் சுட்டல் இவை இப்பாடல் வழங்கும் முதன்மைத் தரவுகள்.

அகம். 307

சிறுநுதல் பசந்து பெருந்தோள் சாஅய்
அகலெழில் அல்குல் அவ்வரி வாடப்
பகலுங் கங்குலும் மயங்கிப் பையெனப்
பெயல்உறு மலரின் கண்பனி வார
ஈங்கிவள் உழக்கும்' என்னாது வினைநயந்து
நீங்கல் ஒல்லுமோ- ஐய!- வேங்கை
அடுமுரண் தொலைத்த நெடுநல் யானை
மையலம் கடாஅஞ் செருக்கி மதஞ்சிறந்து
இயங்குநர்ச் செருக்கும் எய்படு நனந்தலைப்
பெருங்கை எண்கினம் குரும்பி தேரும்
புற்றுடைச் சுவர புதலிவர் பொதியிற்
கடவுள் போகிய கருந்தாட் கந்தத்து
உடனுறை பழமையின் துறத்தல் செல்லாது
இரும்புறாப் பெடையொடு பயிரும்
பெருங்கல் வைப்பின் மலைமுதல் ஆறே?

this is txt file
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.