http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[176 Issues]
[1745 Articles]
Home About US Temples Facebook
Issue No. 85

இதழ் 85
[ ஜனவரி 16 - ஃபிப்ரவரி 15, 2012 ]


இந்த இதழில்..
In this Issue..

ஐந்தாண்டுக்கொருமுறை மாற்றம் ஏன்?
திரும்பிப்பார்க்கிறோம் - 32
ஆடிஅருளப் பிரசாதம் பெற்ற பொன்னில் . . .
வைகல்
மனத்துக்கண் மாசிலன்
ஊன்சோறு (அ) ஊன்துவையடிசில்
பருத்திப் பெண்டிர்
இதழ் எண். 85 > தலையங்கம்
ஐந்தாண்டுக்கொருமுறை மாற்றம் ஏன்?
ஆசிரியர் குழு
வாசகர்களுக்கு வணக்கம்.

வரலாறு.காம் வாசகர்கள் அனைவருக்கும் இதயங்கனிந்த பொங்கல் மற்றும் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்.

தமிழ்நாடு அரசுதான் தமிழ்ப் புத்தாண்டை மீண்டும் சித்திரை மாதத்துக்கே மாற்றி உத்தரவிட்டு விட்டதே? இப்போது எதற்கு வாழ்த்து என்று சில வாசகர்கள் எண்ணக்கூடும். அவர்களுக்காக ஏற்கனவே பல தமிழறிஞர்களால் நிரூபிக்கப்பட்ட ஒன்றை மீண்டும் ஒருமுறை நாம் நிரூபித்துக் கொண்டிருக்கப் போவதில்லை. அப்படிச் செய்வதால் மீண்டும் அவர்கள் மனது மாறப்போவதும் இல்லை. அரசின் அறிவிப்புகளால் முடிவு செய்யப்படுபவைகளா பண்டிகைகளும் கொண்டாட்டங்களும்? விக்கிரமன் அல்லது சாலிவாகனன் காலத்திய மன்னராட்சியின்போது வேண்டுமானால் அவ்வாறு நிகழ்ந்திருக்கலாம். ஆனால் குடியரசாகி 63 ஆண்டுகளுக்குப் பிறகும் இந்த நிலை தொடர வேண்டியதில்லை. மானமும் அறிவும் நிரம்பிய யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஆபாசக் குப்பையான 60 ஆண்டுகளின் பிறப்பு பற்றிய கதையை நம்பிக்கொண்டு இத்தனை காலமும் தமிழன் சித்திரையில் புத்தாண்டைக் கொண்டாடி வந்தான் என்பதே எண்ணுவதற்கு இழிவாக இருக்கிறது. தீபாவளியைப் போன்றே இதையும் தம் இனத்துப் பண்டிகை என்று தமிழன் நம்பவைக்கப்பட்டு விட்டான்.

கடந்த திமுக ஆட்சியில் ஆண்டுத்தொடக்கம் மாற்றப்பட்டது என்பதற்காகவே இந்த அரசு மீண்டும் சித்திரைக்கு மாற்றியிருக்கிறது என்பது உள்ளங்கை நெல்லிக்கனி. (பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்கள் 'ஆண்டுப்பிறப்பு' அல்லது 'வருடப்பிறப்பு' என்பதே ஆண்டுகள் நாரதர் குழந்தை என்ற கதை மரபால்தான்; மற்றபடி ஆண்டுத்தொடக்கம் என்பதுதான் தமிழர் மரபு என்று கூறியுள்ளார்கள்.) தமிழ்ப் புத்தாண்டுத் தேதியை ஒரு கட்சி மாற்றியது என்று கருத வேண்டிய அவசியமில்லை. 1921ம் ஆண்டு மறைமலை அடிகளார் தலைமையில் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் கூடிய தமிழறிஞர்களால் எடுக்கப்பட்ட முடிவுகள்தான் 'தை மாதம் தமிழ்ப் புத்தாண்டுத் தொடக்கம்' என்பதும் 'திருவள்ளுவர் ஆண்டையே தமிழ் ஆண்டாகக் கொள்வது' என்பதும். இதற்குப் பின்னர் சோமசுந்தர பாரதியார் தலைமையில் 1939ம் ஆண்டு திருச்சிராப்பள்ளியில் நடைபெற்ற 'அகில இந்தியத் தமிழர் மாநாடு' இம்முடிவுகளை வழிமொழிந்தது. அப்போதிருந்தே தமிழறிந்த தமிழறிஞர்களும் இனப்பற்றுள்ள தமிழர்களும் சித்திரையில் புத்தாண்டு கொண்டாடுவதை விட்டுவிட்டார்கள். எஞ்சியிருந்த தமிழர்களுக்கும் இந்நிலையை உணர வைப்பதற்காகவே கடந்த திமுக ஆட்சியில் அரசாணை பிறப்பிக்கப்பட்டது. ஒருவேளை 1969லோ அல்லது 1971லோ ஆணையிட்டிருந்தால் பின்னாளில் மாறியிருக்காதோ என்னவோ?

கடந்த ஆண்டு தை முதல்தேதி தமிழ்ப் புத்தாண்டைக் கொண்டாடிய சில தமிழ் அமைப்புகள் மற்றும் சங்கங்கள் கூட இந்த ஆண்டு அவ்வாறு கொண்டாடவில்லை. பண்டிகைத் தேதிகளை முடிவு செய்ய அரசுக்கு அதிகாரம் உள்ளது என்பதை அந்த அமைப்புகள் நம்பியதையே இது காட்டுகிறது. இன்னும் ஐந்து ஆண்டுகள் கழித்து மீண்டும் இவ்வமைப்புகள் தை முதல்தேதி தமிழ்ப் புத்தாண்டைக் கொண்டாடத் துவங்கும். இரண்டுமே தவறானது. ஐந்தாண்டுக்கொருமுறை ஆட்சிகள் மாறலாம். ஆனால் நம் வழக்கங்கள் மாறலாகாது. அப்படி மாறியிருந்தால் மாறி மாறி வந்த சேர, சோழ, பாண்டிய ஆட்சிகளால் தமிழர் பண்பாடு என்ற ஒன்றே இல்லாமல் போயிருக்கும். ஆட்சியிலிருப்பவர்களுக்காகப் புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் என்றில்லாமல், 1921லும் 1939லும் தமிழனுக்கு உண்மையை உணர்த்த விழைந்த தமிழறிஞர்களின் அறிவு, ஆராய்ச்சி, அனுபவம் ஆகியவற்றைப் போற்றுவதற்காகக் கொண்டாடுவதே சாலப்பொருத்தம்.

சித்திரை முதல் நாளன்று இந்து மதக் கோயில்களில் பஞ்சாங்கம் படிப்பதை அன்றைய கலைஞர் அரசும் தடை செய்யவில்லை; தை முதல் நாளில் ஏன் தமிழ்ப் புத்தாண்டு கொண்டாடினீர்கள் என்று தடா/பொடாவையும் இன்றைய அம்மா அரசு பயன்படுத்தவும் இல்லை. அவரவர் மனசாட்சிக்கு எது சரியென்று படுகிறதோ அதைப் பின்பற்றுவதுதான் சரி. இதையெல்லாம் உணர்ந்திருந்தும் (தெரிந்திருந்து மட்டுமல்ல), 'என்ன பெரிய புடலங்காய்த் தமிழறிஞர்கள்?' என்று, 'காலங்காலமாக இருக்கும் சித்திரை முதல்தேதியைத்தான் தமிழ்ப் புத்தாண்டாகக் கொள்வேன்' என்று கூறுபவர்களை ஒன்றும் செய்ய முடியாது. பெரியாராலேயே முடியாதது நம்மாலா முடியப்போகிறது? ஒரு நண்பர் கூறியதுதான் நினைவுக்கு வருகிறது. சித்திரையா? தையா? என்பதெல்லாம் தமிழர்களுக்குத்தான். டமிலர்களுக்கு இதைப்பற்றியெல்லாம் கவலையே இல்லை. அவர்களுக்குத்தான் Happy New Year சொல்ல ஜனவரி 1 இருக்கிறதே?

அன்புடன்
ஆசிரியர் குழு
this is txt file
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.