http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[176 Issues]
[1745 Articles]
Home About US Temples Facebook
Issue No. 103

இதழ் 103
[ ஜனவரி 2013]


இந்த இதழில்..
In this Issue..

தெரிதலில் தொடங்கிப் புரிதல் வரை ...
தேடலில் தெறித்தவை - 9
மலையீசுவரம்
கோனார் கோயில் - திருமால்பூர்
Gokarneswara - 1
இடையார்பாக்கம் மகாதேவர் திருக்கோயில்
அவன்! ஐயையின் தந்தை!
இதழ் எண். 103 > இலக்கியச் சுவை
அவன்! ஐயையின் தந்தை!
ரிஷியா

சங்க காலத்தில் மகளிர்க்கு உரிய மரியாதை, மதிப்பு பெருமளவில் வழங்கப்பட்டுள்ளது. பெண் என்பவள் வெறும் காதல் பாவையாக, காமப் பதுமையாகப் பார்க்கப்படவில்லை. அதேபோல அக்காலப் பெண்களும் சிறப்பான பண்புநலன்கள் பெற்றவராகவே திகழ்ந்தனர். வீரம், அன்பு, அறம், தியாகம், கற்பு, விருந்தோம்பல் எனப் பற்பல மாண்புகளின் இருப்பிடமாக, பிறப்பிடமாகத் திகழ்ந்தனர், வாழ்ந்து காட்டினர். ஆதலால்தான் சங்ககாலத் தமிழ்ச் சமுதாயம் உலகிற்கே வழிகாட்டியாகச் சீர்பெற்று, பெயர் பெற்று விளங்கியது. தொல்பெருமை வாய்ந்த இந்தச் சங்கத்தமிழ்ச் சமூகத்தில்தான் அறத்திற்கும், வீரத்திற்கும் முகவரியாய்த் திகழும் சோழ குலத்து மன்னன் ஒருவன் தன் மகளின் பெருமிதமான நற்பெயரின் வழியே அறிமுகம் ஆகிறான்.

வானுயரப் பெருமிதத்துடன் புலிக்கொடி பறக்கும் உறையூரின் தலைவன் அவன். "மாவண் தித்தன்" அவன் பெயர். பெரும் வள்ளல் அவன். இந்தச் சோழமன்னன் தித்தன் தான் மகளின் நற்பெயர் வாயிலாக அறியப்படுகிறான். இன்னார் மகள் என்ற அறிமுகம் இல்லாமல் "இவள் தந்தை தித்தன்" என்று பரணர் பாடும் பேறுபெற்ற அந்தச் சோழகுல அரசி, "ஐயை" ஆவாள். வரையாது வழங்கும் வள்ளல் என்ற நற்பெயர் இருந்தும், வீரமிகு சோழக்குடி என்ற குலப்பெருமை இருந்தும் "ஐயை தந்தை" எனப் பாடப்பெறுகிறான் இச்சோழ மன்னன்.

மருதம்

"அரிபெய் சிலம்பி னாம்பலந் தொடலை
அரம்போ ழவ்வளைப் பொலிந்த முன்கை
இழையணி பணைத்தோள் ஐயை தந்தை
மழைவளம் தரூஉம் மாவண் தித்தன்"

- அக 400 : 6 : 1-4


விளக்கம் : மாணிக்க மணிகள் கொண்ட சிலம்பினையும், ஆம்பல் மலர்மாலையும் அணிந்தவள். வளையணிந்த அவள் மூங்கிலைப் போன்ற தோளையுடையவள். "அவள் தந்தை தித்தன்" மழைமேகம் போல் வரையாது வழங்கும் வள்ளலான சோழன்.

தித்தனது பெருமையைக் கூறுமிடத்து அவன் ஐயையின் தந்தையாய் இருத்தல் அவன் சிறப்பிற்கு ஒரு காரணமாய் விளங்குகிறது. தான் பெற்ற புதல்வி நற்புகழ் வாயிலாக அறிமுகமாய்ப் பாடப்பெறும் சோழமன்னன் இவன் ஒருவனே. அந்தச் சோழகுல அரசி ஐயை தான் எத்தனை சிறப்பியல்புகள் கொண்டவளோ! சோழகுல, குடிப்பெருமை தாண்டி அவள் பெருமை சிறப்புற்று விளங்கியுள்ளது என்பது பாடல்வழித் தேற்றம். தன் பாடலில், ஏனைய புலவர்கள் செய்திடாத காரியத்தை, அதாவது பெண்ணின் நற்பெயரை முன்னிறுத்திய பரணர் எத்தனை முற்போக்கு சிந்தனை உடையவர் என்பதும் இப்பாடல்வழி அறியப்படுகிறது. சான்றோர் பேசும் எல்லாச் சிறப்புகளும், புலவர் பாடும் சீர்மிகு பெருமைகள் அனைத்தையும் புலிக்கொடிக்குக் காவலர்களான சோழமன்னர்களே பெற்று விடுகின்றனர். சோழர்களின் பெருமையே பெருமை!
this is txt file
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.