http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[176 Issues]
[1745 Articles]
Home About US Temples Facebook
Issue No. 103

இதழ் 103
[ ஜனவரி 2013]


இந்த இதழில்..
In this Issue..

தெரிதலில் தொடங்கிப் புரிதல் வரை ...
தேடலில் தெறித்தவை - 9
மலையீசுவரம்
கோனார் கோயில் - திருமால்பூர்
Gokarneswara - 1
இடையார்பாக்கம் மகாதேவர் திருக்கோயில்
அவன்! ஐயையின் தந்தை!
இதழ் எண். 103 > கலையும் ஆய்வும்
தேடலில் தெறித்தவை - 9
மு.நளினி, அர.அகிலா
இரண்டில் திரண்டன!


செம்பியன் மாதேவியின் கொடைகளைச் சுட்டும் பல கல்வெட்டுகள் தமிழ்நாட்டுக் கோயில்களில் காணக்கிடைக்கின்றன. அவற்றுள் இரண்டு (தெ. க. தொ. 13:1, 10) மெய்க்காவல் பணி செய்த நீலன்மாதேவனின் கண்காணிப்பில் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாட்டிலுள்ள பல்லாயிரக்கணக்கான கல்வெட்டுகளில், மெய்க்காவல் கண்காணியாக அமையுமாறு வழங்கப்பட்ட கொடைப்பதிவுகள் மிகக் குறைவு. அதனால், செம்பியன்மாதேவியின் இவ்விரண்டு கொடைகளும் முக்கியத்துவம் பெறுகின்றன. கல்வெட்டுச் சொல்லாட்சி நீலன்மாதேவனை அம்மையின் மெய்க்காவலாகக் காட்டுகிறது. அரசியர் மெய்க்காவல் கொண்டிருந்தமை இவ்விரு கல்வெட்டுகளில் திரளும் முதல் தரவு. திருவாரூர் அரநெறியீசுவரத்தில் அம்மை வழங்கிய கொடை முதலாம் இராஜராஜரின் இரண்டாம் ஆட்சியாண்டில் உத்தமசோழருக்காக வழங்கப்பட்டது. கொடையளித்த காலை சோழமாயிலட்டியார் மேனாயகமாக இருந்தார். இறைவனுக்குப் படையலிட வெள்ளித்தட்டும் முழுக்காட்ட வெள்ளிக் கலசப் பானையும் இங்குத் தரப்பட்டன.

திருநறையூர் சித்தேசுவரத்திலும் வெள்ளித்தளிகை(தட்டு), வெள்ளிக் கலசப்பானை இவையே தரப்பட்டன. ஆனால், கூடுதலாக இறைவனுக்கு வீசப் பொன்னாலான கைப்பிடி கொண்ட கவரியும் வழங்கப்பட்டது. இவ்வூர்க் கல்வெட்டில் கொடை வழங்கப்பட்டமைக்கான காரணம் சுட்டப்படவில்லை. கல்வெட்டு முதலாம் இராஜராஜரின் மூன்றாம் ஆட்சியாண்டில் பதிவாகியுள்ளது. இரண்டு கல்வெட்டுகளிலுமே அம்மை உடையபிராட்டியார் என்றே விளிக்கப்பட்டுள்ளார். செம்பியன்மாதேவியான பராந்தகன் மாதேவடிகள் என்பது அம்மையின் பெயராகப் பதிவாகியுள்ளது.

இவ்விரண்டு கல்வெட்டுகளும் முதலாம் இராஜராஜர் காலத்தில் செம்பியன்மாதேவி சீர்மையுடன் விளங்கியமையை வெளிக்கொணர்வதுடன், கி. பி. 987இல் உத்தமசோழர் வாழ்ந்திருந்தமையையும் புலப்படுத்துகின்றன. சில வரலாற்றாசிரியர்களும் புதின எழுத்தாளர்களும் எழுதியுள்ளாற் போல ஆதித்த கரிகாலரின் மரணத்திற்கு உத்தமசோழரோ, செம்பியன்மாதேவியோ காரணர்களாக இருக்க முடியாதென்பதையும் இவ்விரு கல்வெட்டுகளும் இனிதே உணர்த்துகின்றன. இராஜராஜரின் அரநெறிக் கல்வெட்டு உத்தமசோழரை, ‘ஸ்ரீஉத்தமசோழதேவர்’ எனச் சுட்டுவது சிறப்பானது. கவனத்தில் கொள்ளத்தக்கது.

கொடைக் கல்வெட்டுகளே எனினும், சில வரிப் பதிவுகளே ஆயினும், இவ்விரண்டும் வெளிப்படுத்தும் வரலாற்றுத் தரவுகள் அரசு, சமூகம் என இரண்டுஞ் சார்ந்த செய்திகளாக உள்ளமை உளங்கொளத் தக்கது. கலசம், பானை எனும் ஒரே பொருள் தரும் இருமொழிச் சொற்களின் இணைவும் நோக்கலாம். இவற்றுள் கலம், கலயமாகிக் கலசமானதென்பார் சொல்லாய்வாளர் முனைவர் பி. தமிழகன். தட்டு, சோழர் காலத்தில் தளிகை என அழைக்கப்பட்டுள்ளமையும் காலநிரலான சொல்லாய்வுக்குப் பயன்படும். தொடக்கத்தில் தட்டைக் குறித்த தளிகை, பின்னாளில் தட்டில் இடப்பட்ட உணவுக்கானமை திருவரங்கம் கல்வெட்டுகளில் காணப்படும் மாற்றமாகும். இன்றைக்கும் ஊரகக் கோயில்களில் இறைவனுக்கு அளிக்கப்படும் படையல் தளியல் என்றே அழைக்கப்படுகிறதாம்.this is txt file
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.