http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[176 Issues]
[1745 Articles]
Home About US Temples Facebook
Issue No. 108

இதழ் 108
[ ஜூன் 2014 ]


இந்த இதழில்..
In this Issue..

வணிகர்கள்
Kudumiyanmalai - 2
பண்டைய கட்டுமானங்களைப் பாதுகாத்த மேலப்பாதி திருக்கோயில்
வரலாற்றின் பார்வையில்.. நியமம் ஐராவதேஸ்வரர் திருக்கோயில்
தேடலில் தெறித்தவை - 14
குடவாயில் மாடக்கோயில்
ஆய்வுப்பாதையில் ஆங்காங்கே - 5
ஆய்வுப் பாதையில் ஆங்காங்கே - 4
செழியனின் நற்கொற்கை
இதழ் எண். 108 > கலையும் ஆய்வும்
தேடலில் தெறித்தவை - 14
மு.நளினி, அர.அகிலா
கல்வெட்டும் கட்டட உறுப்புகளும்


தஞ்சாவூர் மாவட்டம் நெய்த்தானம் நெய்யாடியப்பர் கோயில் முற்சோழர் கட்டுமானமாகும். இக்கோயில் கல்வெட்டுகள் அனைத்துமே பயனுள்ள தரவுகளை முன்வைப்பன. அவற்றுள், மதுரை கொண்ட கோப்பரகேசரிவர்மரான முதலாம் பராந்தகரின் 25ஆம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு, (5:588) பரவலாகக் கட்டடக்கலை சார்ந்த பல கலைச்சொற்களைத் தருவதால் முதன்மை பெறுகிறது.

பல வகையில் வரவான இரண்டேமுக்கால் கழஞ்சுப் பொன் கொண்டு திருவிசாகத் திருவிழாவை ஏழு நாள் நடத்தத் திட்டமிட்ட கோயிலார், அது குறித்த கல்வெட்டைக் கோயிலின் எப்பகுதியில் பதிவு செய்தனர் என்பதைக் கூறுமிடத்து, பல கட்டடக் கலைச்சொற்களைப் பயன்படுத்தியுள்ளனர்.

‘பெரிய கோயிலில் அர்த்தமண்டபத்தில் தென்மாட்டில் வாசலில் மேற்கடைய உத்திரத்திலும் போதிகையிலும் வீரகண்டத்திலும்’

‘வாசலில் கிழக்கில் நமன மண்டபத்துள் தென்மாட்டில் ஜகதியிலும் பட்டிகையின் மேலும் பட்டிகையிலும் கண்டத்திலும் இதன் கீழைக் குமுதத்திலும் ஆக இவ்வைகாசித் திருவிழாப்புறம் வெட்டினபடி’

இந்த வைகாசித் திருவிழாவை ஏற்பாடு செய்தவர் கவராமொழி மாதேவன். கோயில்களில் விமானத்தின் முன்னுள்ள மண்டபம் அர்த்தமண்டபமாகவும் அதற்கு முன்னுள்ள மண்டபம் இறைத்திருமேனிகளுக்கு நீராட்டு நடத்தும் நமன மண்டபமாகவும் பெயரேற்றிருந்தமை இக்கல்வெட்டால் அறியப்படும் உண்மையாகும்.

ஜகதி, குமுதம், கண்டம், பட்டிகை எனும் நான்கும் தாங்குதள உறுப்புகளாகும். இந்நான்கு உறுப்புகள் கொண்டமையும் தாங்குதளம் பாதபந்தத் தாங்குதளமாக அழைக்கப்படும். போதிகை என்பது தூணுக்கும் உத்திரத்துக்கும் இடைப்பட்டு அமையும் தாங்கு உறுப்பாகும். தூணின் மீதமர்ந்து இருபுறத்தும் கைவிரித்து உத்திரம் தாங்கும் இவ்வுறுப்பு கட்டடக்கலை ஆய்வில் பெரும் பங்கு வகிக்கிறது. இதன் அமைப்பு முறை கொண்டே, கல்வெட்டுகள் இல்லாத கோயில் கட்டுமானங்களின் தோற்றக் காலத்தை அறியமுடிகிறது. வீரகண்டம் தூணின் இறுதி உறுப்பாகும்.

பல்லாயிரக் கணக்கான தமிழ்நாட்டுக் கல்வெட்டுகளில் மிகச் சிலவே இது போல் தாம் இடம் பெற்றுள்ள கட்டட உறுப்புகளின் பெயர்களை வெளிப்படுத்திக் கலைச்சொற்களின் காலநிரலான வழக்கை அறிய உதவுகின்றன.this is txt file
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.