http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[176 Issues]
[1745 Articles]
Home About US Temples Facebook
Issue No. 108

இதழ் 108
[ ஜூன் 2014 ]


இந்த இதழில்..
In this Issue..

வணிகர்கள்
Kudumiyanmalai - 2
பண்டைய கட்டுமானங்களைப் பாதுகாத்த மேலப்பாதி திருக்கோயில்
வரலாற்றின் பார்வையில்.. நியமம் ஐராவதேஸ்வரர் திருக்கோயில்
தேடலில் தெறித்தவை - 14
குடவாயில் மாடக்கோயில்
ஆய்வுப்பாதையில் ஆங்காங்கே - 5
ஆய்வுப் பாதையில் ஆங்காங்கே - 4
செழியனின் நற்கொற்கை
இதழ் எண். 108 > இலக்கியச் சுவை
செழியனின் நற்கொற்கை
ரிஷியா
கொற்கை. சங்க காலத்தில் உலகப் புகழ்பெற்ற துறைமுகப்பட்டினம். முந்தைய நாளில் ரோமானியர் யவனர் எனப் பலரும் போற்றும் தோற்றப்பொலிவும் சிறந்த வணிக வளமும் பெற்றுச் சீரும் சிறப்புமாய் விளங்கிய நகர். தமிழன் புகழை பாரெங்கிலும் பறைசாற்றியவை அங்கு கிடைத்த உயர் தர நன்முத்துக்கள். தமிழ் வளர்த்த தென்னவன் புகழை எங்கும் பீடுடன் பறைசாற்றியது பெரும்புகழ் வாய்த்த கொற்கையம்பதி. நம் சங்கப்புலவர்கள் அத்துறையின் புகழையும் ஆங்கே கிடைத்த நல்முத்துக்களின் புகழையும் பரவிக் கிடந்த நெய்தல் நறுமலர்களையும் பலவாறு உவமைப்படுத்தியுள்ளமையை நாம் பல பாடல்களில் காணலாம். அவற்றில் சிலவற்றை இங்கு காண்போம்.

முதலில் அகப்பாடல் படம்பிடிக்கும் ஒரு எழில் காட்சி.


'கொற்கையம் பெருந்துறை முத்தின் அன்ன
நகைப் பொலிந்து இலங்கும் எயிறுகெழுதூ்வாய்..'

(அகம் 400; 27;7-8)

அழகிய கொற்கை நகரத்துப் பெருந்துறையில் மூழ்கி முத்துக்குளித்து எடுக்கப்படும் முத்துக்களைப் போன்றவை தலைவியின் பற்களாம். என்னே புலவனின் கற்பனை!

இரண்டாவதும் ஒரு அகப்பாடல்தான். கொற்கையம்பதி எங்கிலும் மிக்கிருந்தன நெய்தல் நறுமலர்கள். வைகறையில் மலரும் அந்நெய்தல் சுடர்பூக்கள் தலைவியின் மை எழுதிய விழிகளோடு ஒப்புநோக்கப்படுகின்றன.


'நற்றேர் வழுதி கொற்கை முன்துறை
வண்டுவாய் திறந்த வாங்கழி நெய்தல்
போது புறங்கொடுத்த உண்கண்..'

(அகம் 400;130;11-12)

மேற்சொன்ன அதே கருத்தை வலியுறுத்துகிறது மற்றுமொரு சங்கப் பாடல்.


'கொற்கைப் பெருந்துறை
வைகறை மலரும் நெய்தல் போலத்
தகைபெரி துடைய காதலி கண்ணே'

(ஐங்குறுநூறு 188;3-4)

காதலியின் கண்கள் சிறந்த கொற்கைத்துறையில் வைகறை பூக்கும் நெய்தலோடு உவமிக்கப்படுகிறது. இங்கே கொற்கைப் பெருந்துறை, நெய்தல் நறுமலர், பெண்ணின் விழிகள், பற்கள் என அழகியல் பேசும் அனைத்துச் சொற்றொடர்களும் இடம்பெறுகின்றன. சங்கக்கவி கொற்கையின் சிறப்பை எடுத்துக்காட்டும் அழகே, அழகு.

அந்நாளில் இத்தகைய வரலாற்றுச் சிறப்புமிக்க நகராய் விளங்கிய கொற்கை இன்று முகவரியற்று இருக்கிறது.this is txt file
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.