![]() |
![]() |
![]() |
http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [181 Issues] [1796 Articles] |
Issue No. 113
![]() இதழ் 113 [ நவம்பர் 2014 ] ![]() இந்த இதழில்.. In this Issue.. ![]() |
வீரத்தின் விளைநிலம் அன்றைய தமிழகம். சங்ககால வீரப்போர்க்கள மரபுகள் பல. அவற்றில் ஒன்று பூந்தொடைவிழா எனப்படும் வீரர்களின் விழா. அந்த வீரயுகச் சமுதாயத்தில் அனைத்து இளம்பிள்ளைகளும் படைக்கலப் பயிற்சியைப் பெற்று வீரமறவர்களாய்ச் சிறந்து விளங்கினர். அவ்வீரயுகத்தில் மழவர் தொல்குடி மிகவும் பெயர் பெற்று விளங்கியது விரதீரத்தில். அஞ்சாமை மிக்க அவர்கள் படைக்கலப் பயிற்சி பெற்றபின் சிலநாட்கள் அரங்கேற்றுவிழா நடத்தினார்கள். அது "பூந்தொடைவிழா" எனப் பெயரிடப்பட்டு, வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. தலைநாள் எனப்படும் முதல்நாளில் அரங்கேற்றம் நிகழும் இடம் வெகுசிறப்பாக அலங்கரிக்கப்பட்டுப் பொலிவுற்றுத் திகழ்ந்தது. அவ்வெழிலை மாமூலனார் தனது பாடலில் தலைவி கூற்றில் உவமையாகச் சிறப்பித்துப் பாடியுள்ளார். அக்காட்சி மலரும் அகநானூற்றுப் பாடல் இதோ, திணை: பாலை தெம்முனை சிதைத்த கடும்பரிப் புரவி வார்கழற் பொலிந்த வண்கண் மழவர் பூந்தொடை விழவின் தலைநாள் அன்ன தருமணல் நெமிலிய திருநகர் முற்றம். அகநானூறு : 187:6-9 விளக்கம்: சினந்து எழுந்தோரது வெம்மையான போர்முனையை அழித்த கடுஞ்செலவை உடைய குதிரைகளையும் நீண்ட கழலால் பொலிவுற்ற கால்களையும், தறுகண்மையையும் உடைய மழவர்கள் கொண்டாடும் பூந்தொடைத் திருவிழாவின் தலைநாளைப் போன்றுள்ளது மணலிட்ட நம் மனைமுற்றம் என்பதாம். இப்பாடல்வழித் தமிழர் தொல்குடியின் போர்க்கள மரபு ஒன்று சிறப்பித்துப் பாடப்பட்டுள்ளது. வீர மறக்குடியில் பிறந்தோர் மகிழ்ந்து பெருமையுடன் வீரவிழா எடுக்கும் வழக்கம் இங்கே குறிக்கப்படுகிறது. இப்பாடல்வழி, நம் பண்டைய தமிழர் கொண்டாடிய மிக முக்கிய வீரவிழா பற்றி அறிந்து பெருமைகொள் தமிழா! this is txt file |
![]() சிறப்பிதழ்கள் Special Issues ![]() ![]() புகைப்படத் தொகுப்பு Photo Gallery ![]() |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |