http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[176 Issues]
[1745 Articles]
Home About US Temples Facebook
Issue No. 122

இதழ் 122
[ ஆகஸ்ட் 2015 ] பதினொன்றாம் ஆண்டு நிறைவு மலர்


இந்த இதழில்..
In this Issue..

வள்ளுவத்தில் மதலை
தெரிவதும் தொடர்வதும் வரலாறுதான் வாருணி
சப்தரிஷீஸ்வரர் திருக்கோயில், இலால்குடி
To Sacred Shrines.. with Sacred Hymns..- 3
புகைப்படத் தொகுப்பு - திருச்சிராப்பள்ளி இலளிதாங்குரம்
இலளிதாங்குர பல்லவேஸ்வர கிருகம்
Rituals, Special occasions and Festivals at the Temples of Thiruchirappalli District - Part II
சிராப்பள்ளி தொட்டியம் சாலையில் சில கண்டுபிடிப்புகள்-5
காஞ்சிபுரம் தெற்கிருந்த நக்கர் திருக்கோயில்
முசிறியின் பண்டமாற்று வணிகம்
இதழ் எண். 122 > இலக்கியச் சுவை
முசிறியின் பண்டமாற்று வணிகம்
ரிஷியா
தெய்வங்களின் சொந்த சுவர்க்க பூமியாக வர்ணிக்கப்படும் சேரநாடான கேரளம் பல மலைபடு பொருட்களின் விளைநிலம். சங்க காலத்தில் இந்நிலம் பண்டமாற்று வாணிபத்தில் சிறந்து விளங்கியது. இங்கே விளைந்த மிளகு இதர வாசனைப் பொருட்களும் கிரேக்க யவனர்களை ஈர்த்தன. நாளும் செழித்த வாணிபத்தால் சேரநாட்டின் துறைமுகங்கள் உலக வரைபடத்தில் தமக்கெனத் தனியிடம் தேடிக்கொண்டன. அத்தகைய துறைமுகங்களுள் ஒன்றுதான் மேற்கு கடற்கரைத் துறைமுகப்பட்டினமான முசிறி.



சங்க காலத் துறைமுகமாக அறியப்படும் பட்டணம் (முசிறி) பகுதியில் அகழ்வாராய்ச்சி. பட உதவி - நன்றி - தி இந்து நாளிதழ்


சங்கப் புலவர் எருக்காட்டூர் தாயங்கண்ணனார் சங்கத் தமிழர்களின் வர்த்தக மாண்பினை, தொல்பெரும் சிறப்பை அகப்பாடல் வரிகளில் படம்பிடிக்கிறார்.


“......................................... சேரலர்
சுள்ளியம் பேரியாற்று வெண்நுரை கலங்க
யவனர் தந்த விளைமாண் நன்கலம்
பொன்னோடு வந்து கறியொடு பெயரும்
வளங்கெழு முசிறி.......................................”
(அகம்.149:7-8)


விளக்கம்

சேர மன்னரது சுள்ளி மற்றும் பேரியாற்றினது வெள்ளிய நுரை சிதற யவனர்கள் கொண்டு வந்து தொழில் மாட்சியமைப்பட்ட நல்ல மரக்கலம் பொன்னுடன் வந்து மிளகோடு மீளும் வளம் பொருந்திய முசிறி என்னும் பட்டினம் என்பதாம்.

சுள்ளி பேரியாறு என்பன சேர நாட்டு முசிறி மருங்கில் கடலில் சங்கமிக்கும் நதிகளின் பெயர்கள் பொன்னைக் கொண்டு வந்து விலையாக கொடுத்து மிளகை ஏற்றிக் சென்றன கிரேக்கத்தின் பெரும் மரக்கலங்கள். சோழ, பாண்டிய துறைமுகங்களுக்கு இணையாக பெரும் சிறப்பு பெற்று விளங்கியது அன்றைய முசிறி துறைமுகம் என்பது இப்பாடல் அறிவிக்கும் அறியும் வரலாற்றுச் செய்தியாகும்.

குறிப்பு - சங்க காலத்து முசிறிப்பட்டினம் பேரா. ஷாஜன் மற்றும் பேரா. செல்வகுமார் முதலியோரின் முயற்சியால் அண்மைய தொல்லியல் அகழ்வாய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.