http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[176 Issues]
[1745 Articles]
Home About US Temples Facebook
Issue No. 128



இந்த இதழில்..
In this Issue..

அருள்மிகு நாகநாதசாமி திருக்கோயில்
SOMESWARA SHRINE OF SOMUR-Continued
திருக்கழுக்குன்றம் குடைவரை
கண்ணாரக் கண்டும் கையாரக் கூப்பியும்....
பரமேசுவரமங்கலம் திருக்கோயில்கள்
சிராப்பள்ளி தொட்டியம் சாலையில் சில கண்டுபிடிப்புகள் - 9
இன்குதல் விறலியர் இசை மரபு
இதழ் எண். 128 > இலக்கியச் சுவை
இன்குதல் விறலியர் இசை மரபு
ரிஷியா

தமிழரின் இசை மரபுகள் பற்றிய பல தரவுகள் சங்க இலக்கியச் சோலையில் காணக்கிடைக்கின்றன. முழவு, பெருவங்கியம், யாழ் போன்ற இசைக்கருவிகளை மீட்டும் முன்பு இறைவாழ்த்து பாடிய பின்பே தம் இசைக் கச்சேரியைத் தொடங்கும் மரபு விறலியரின் வழக்கில் இருந்துள்ள செய்தியை மலைபடுகடாம் பாடல் வரிகள் பதிவு செய்கின்றன.



கடவ தறிந்த இன்குரல் விறலியர் தொன்றொழுகு மரபிற் றம்மியல்பு வழாஅது அருந்திறற் கடவுட் பழிச்சிய பின்றை


-536-538



விளக்கம்:- பழமையின் மரபுமுறை பிறழாமல், பெரும் வலியுடைய கடவுளை முதலில் வாழ்த்திப் பாடிய பின்னர், தம் இசைக்கருவிகளை இசைக்கத் தொடங்குவர் என்பதாம். "கடவது அறிந்த விறலியர் எனவும்" தொன்று ஒழுகு மரபின் இயல்பு வழா அது எனவும் விறலியர் போற்றும் வழக்காறுகளும், தொன்மையான இசை மரபும் இப்பாடலில் சுட்டப்பட்டுள்ளது. எல்லா நிகழ்வுகளுக்கும் முன்னே இறைவழிபாடு செய்யும் மரபு நம் தமிழரின் வாழ்வியலினொரு சிறந்த அங்கமாய்ப் பண்டுதொட்டு இருந்துள்ளது. இயற்கை வழிபாடு, நடுகல் வழிபாடு, வானுறை தெய்வபாடு மட்டுமல்லாது இசைக்கருவிகளுக்குரிய தெய்வ வழிபாடும் வழக்கில் இருந்துள்ளது. மேலும் கடவுள் வாழ்த்து என்பது தமிழ் இலக்கியத்தின் தொல்மரபாகவும் உள்ளது சங்க இலக்கியங்கள் வழித்தேற்றமாகும்.


இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.