![]() |
![]() |
![]() |
http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [181 Issues] [1796 Articles] |
Issue No. 128
![]() ![]() இந்த இதழில்.. In this Issue.. ![]() |
தமிழரின் இசை மரபுகள் பற்றிய பல தரவுகள் சங்க இலக்கியச் சோலையில் காணக்கிடைக்கின்றன. முழவு, பெருவங்கியம், யாழ் போன்ற இசைக்கருவிகளை மீட்டும் முன்பு இறைவாழ்த்து பாடிய பின்பே தம் இசைக் கச்சேரியைத் தொடங்கும் மரபு விறலியரின் வழக்கில் இருந்துள்ள செய்தியை மலைபடுகடாம் பாடல் வரிகள் பதிவு செய்கின்றன. கடவ தறிந்த இன்குரல் விறலியர் தொன்றொழுகு மரபிற் றம்மியல்பு வழாஅது அருந்திறற் கடவுட் பழிச்சிய பின்றை -536-538 விளக்கம்:- பழமையின் மரபுமுறை பிறழாமல், பெரும் வலியுடைய கடவுளை முதலில் வாழ்த்திப் பாடிய பின்னர், தம் இசைக்கருவிகளை இசைக்கத் தொடங்குவர் என்பதாம். "கடவது அறிந்த விறலியர் எனவும்" தொன்று ஒழுகு மரபின் இயல்பு வழா அது எனவும் விறலியர் போற்றும் வழக்காறுகளும், தொன்மையான இசை மரபும் இப்பாடலில் சுட்டப்பட்டுள்ளது. எல்லா நிகழ்வுகளுக்கும் முன்னே இறைவழிபாடு செய்யும் மரபு நம் தமிழரின் வாழ்வியலினொரு சிறந்த அங்கமாய்ப் பண்டுதொட்டு இருந்துள்ளது. இயற்கை வழிபாடு, நடுகல் வழிபாடு, வானுறை தெய்வபாடு மட்டுமல்லாது இசைக்கருவிகளுக்குரிய தெய்வ வழிபாடும் வழக்கில் இருந்துள்ளது. மேலும் கடவுள் வாழ்த்து என்பது தமிழ் இலக்கியத்தின் தொல்மரபாகவும் உள்ளது சங்க இலக்கியங்கள் வழித்தேற்றமாகும். |
![]() சிறப்பிதழ்கள் Special Issues ![]() ![]() புகைப்படத் தொகுப்பு Photo Gallery ![]() |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |