http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[176 Issues]
[1745 Articles]
Home About US Temples Facebook
Issue No. 147

இதழ் 147
[ ஆகஸ்ட் 2019 ]


இந்த இதழில்..
In this Issue..

புள்ளமங்கைக் கல்வெட்டுகள் ‍-1
திருப்புள்ளமங்கை விமானம் - 1
கரை தழுவும் நினைவலைகள் - 4
கரை தழுவும் நினைவலைகள் - 3
சான்றோர் சினம்
இதழ் எண். 147 > இலக்கியச் சுவை
சான்றோர் சினம்
சு.சீதாராமன்
சினம் - மனிதனை ஆட்டுவிக்கும் அற்ப குணம் என்பதில் துளியும் சந்தேகமில்லை! ஏனென்றால் வள்ளுவனின் வெகுளாமை என்ற அதிகாரத்தால் அதனுடைய தீமையை வள்ளுவன் அளவிற்கு உலகில் எடுத்துரைத்த இன்னொரு அறிஞர் யாரும் இல்லை என்பது துணிபு!

பொதுவாக சினம் கொள்பவர்கள் தனக்கு பணிபவர்கள் மத்தியில் வீரம் காண்பிப்பதும் தான் பணியும் இடத்தில் அமைதி காப்பதும் உலக வழக்கம்! வள்ளுவர் தனக்குப் பணிவோரிடத்தும் காட்டும் சினம் மிகவும் தீவிளைவுகளை உண்டாக்கும் என்று எச்சரிக்கிறார்.

செல்லா இடத்துச் சினந்தீது செல்லிடத்தும்
இல்அதனின் தீய பிற


சினம் மகிழ்ச்சியையும் புன்னகையையும் கெடுத்து பகை வளர்ப்பதில் அதற்கிணை வேறில்லை என்றும் எச்சரிக்கிறார்.

நகையும் உவகையும் கொல்லும் சினத்தின்
பகையும் உளவோ பிற


ஒருவன் தன்னைக்காக்க வேண்டும் என்றால் சினத்தைக் காத்தாலே போதும் என்றும் அறிவுறுத்துகிறார்

தன்னைத்தான் காக்கின் சினங்காக்க காவாக்கால்
தன்னையே கொல்லும் சினம்


சினத்தை தன்னுடன் சேரும் எதனையும் அழிக்கும் வல்லமையுள்ள "தீ"யுடன் ஒப்பிடுகிறார்.

சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனமென்னும்
ஏமப் புணையைச் சுடும்.


சினமே பொருளாகக் கொண்டவன் அடையும் துன்பம் என்ன என்பதையும் கீழ்க்கண்ட குறளால் நிறுவுகிறார்

சினத்தைப் பொருளென்று கொண்டவன் கேடு
நிலத்தறைந்தான் கைபிழையா தற்று


சரி, சினம் தீதுதான், சினம் கொள்ளார் இவ்வுலகில் உண்டோ?

சுவைஒளி ஊறுஓசை நாற்றமென ஐந்தின்
வகைதெரிவான் கட்டே உலகு


என்று ஐயுணர்வு கொண்டோரே வாழத் தகுதியானவர்கள் என்றும் அவர்களுக்குத்தான் இவ்வுலகு என்றும் வள்ளுவரே குறிப்பிடுவதும் கவனிக்கத்தக்கது! எப்பொழுது ஐயுணர்வு பெறுகிறோமோ அப்பொழுதே சினமும் கொள்வது தவிர்க்க இயலாததாக ஆகிறது! இது தவிர்க்க இயலாத உணர்வு என்பதால் தான் வள்ளுவரும் நம்மை வலிந்து பல்வேறு விதமாக எச்சரிக்கிறார் ! நாம் எவ்வளவு நற்குணங்கள் கொண்டிருந்தாலும் இச்சினத்தை வள்ளுவர் கூறியது போல் தவிர்க்க இயலவில்லையே என்று நல்லோராக இருப்பவர் நிச்சயம் வருந்துவர்.

சினம் கொள்வோரில் எவர் நல்லோர்? என்று நம் நினைவில் நிழலாடும் சிந்தனைக்கு ஓளவைக் கிழவி கீழ்க்கண்டவாறு மூதுரையில் விவரிக்கிறார்

கற்பிளவோடு ஒப்பர் கயவர்; கடும் சினத்துப்
பொற் பிளவோடு ஒப்பாரும் போல்வாரே-வில்பிடித்து
நீர் கிழிய எய்த வீடுப் போல மாறுமே
சீர் ஒழுகு சான்றோர் சினம்


பிளந்த கல் மீண்டும் தானே ஒட்டிக்கொள்ளாது. அதுபோல, பிரிந்த கயவர்கள் மீண்டும் ஒன்றுசேர மாட்டார்கள். பெரும் சினத்தால் பிரிந்தாலும் பெரியோர், பிளந்த தங்கத்தைப் போல மீண்டும் சேர்ந்து விடுவர். அவர்கள் கோபம், ஒருவர் எய்த அம்பால் நீரில் உண்டான வடுவைப் போன்றதே என்று ஓளவை சினம் கொள்வோரின் வேறுபாட்டை அழகாக எளிமையான எடுத்துக்காட்டுடன் விளக்கியிருக்கிறார்.
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.