http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[179 Issues]
[1772 Articles]
Home About US Temples Facebook
Issue No. 178

இதழ் 178
[ ஜூன் 2024 ]


இந்த இதழில்..
In this Issue..

சங்கப் பாடல்களில் பெண் தொழில்முனைவோர் - 3
Nitheeswarar temple of Srimushnam
கூரம் கோயில்களின் கல்வெட்டுகள்
திருவிளையாட்டம் மாடக்கோயில் - 2
வலஞ்சுழி வாணர் கோயில் கல்வெட்டுகள் - 5
ஜப்பானியப் பழங்குறுநூறு - 74 (கேட்டதும் கிடைத்ததும்)
ஜப்பானியப் பழங்குறுநூறு - 73 (முகிலில் மறையும் மலர்)
ஜப்பானியப் பழங்குறுநூறு - 72 (காதல்மொழிகள் கடலலை போலே!)
ஜப்பானியப் பழங்குறுநூறு - 71 (நெல்வழிசெல் இசை!)
இதழ் எண். 178 > இலக்கியச் சுவை
ஜப்பானியப் பழங்குறுநூறு - 73 (முகிலில் மறையும் மலர்)
ச. கமலக்கண்ணன்

மூலப்பாடம்:

கான்ஜி எழுத்துருக்களில்
高砂の
をのへの桜
咲きにけり
外山のかすみ
立たずもあらなむ

கனா எழுத்துருக்களில்
たかさごの
をのへのさくら
さきにけり
とやまのかすみ
たたずもあらなむ

ஆசிரியர் குறிப்பு:

பெயர்: ஆளுநர் மசாஃபுசா

காலம்: கி.பி 1041-1111.

இத்தொடரின் 59வது பாடலை இயற்றிய எமோனின் கொள்ளுப்பேரன். சிறுவயது முதலே அறிவிற் சிறந்தவராக அறியப்பட்டவர். சீனமொழியிலும் மிகுந்த புலமை பெற்றவர். இவரது குடும்பமே பல தலைமுறைகளாக அறிஞர்களாக விளங்கியது. இவருக்கு ஒரு நூற்றாண்டு முன்னர் வாழ்ந்த அறிஞர் மிச்சிஜானேவுக்கு (இத்தொடரின் 24வது பாடலை இயற்றியவர்) இணையாகப் புகழ்பெற்றிருந்தவர். பேரரசர் ஹொரிகவாவின் நம்பிக்கைக்குப் பாத்திரமாக இருந்து பல்வேறு பொறுப்புகளை அரண்மனையிலும் வெளியிலும் வகித்துவந்தார். ஜப்பானிய இலக்கியத்துக்கு இவரது பங்களிப்பாக 119 பாடல்கள் இடம்பெற்றுள்ளன.

பாடுபொருள்: மலரின் அழகை இரசித்தல்

பாடலின் பொருள்: எதிரிலுள்ள தகாசாகோ மலையில் சக்குரா மலர்கள் அழகாகப் பூத்துக் குலுங்குகின்றன. ஆனால் இடையிலிருக்கும் குன்றின் மீது தவழும் மேகக்கூட்டமே, இடையில் வராதே!

இயற்கையை வியக்கும் நேரடிப் பொருள்தரும் இன்னோர் எளிய பாடல். இத்தொடரின் 34ம் பாடலின் (நீண்ட வாழ்வே சாபமோ?) நிகழிடமும் இதே தகாசாகோ மலைதான். கவிஞர் நின்றுகொண்டு பார்க்கும் இடத்துக்கும் சக்குரா மலர்கள் பூத்துக்குலுங்கும் தகாசாகோ மலைக்கும் இடையே தொயாமா என்றொரு குன்று இருக்கிறது. அப்போது தொயாமாவின் மீது மேகக்கூட்டம் ஒன்று பயணிக்கிறது. அது இன்னும் சற்று நகர்ந்து வந்தால் சக்குராவின் அழகிய காட்சி பாதிக்கப்படும். எனவே கவிஞர் அம்மேகக்கூட்டத்தை அருகில் வரவேண்டாம் என வேண்டுகோள் விடுக்கிறார். மிகவும் புலமை பெற்ற கவிஞர் எனப் புகழப்படுபவர் இதுபோன்ற எளிய பாடல்களையும் எழுதியிருக்கிறார். அது சிறந்த 100 பாடல்கள் என்ற தொகுப்பிலும் இடம்பெறுகிறது. ஒருவேளை, புலவருக்கான பொதுவான அங்கீகாரமோ?

வெண்பா:

சக்குரா பூத்தது கண்ணில் நிறைந்திட
அக்குணி மாசில் கவினுறச் - செக்கர்
நிறைவானின் பின்னணி மூடாது சற்றே
முகிலெனும் பஞ்சே விலகு

அக்குணி - சிறிதளவு
செக்கர் நிறைவானம் - செக்கச் சிவந்த வானம்

(மீண்டும் அடுத்த தான்காவில் சந்திப்போம்)

இக்கட்டுரை சொல்வனம் இதழில் வெளியானது.
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.