http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[176 Issues]
[1745 Articles]
Home About US Temples Facebook
Issue No. 49

இதழ் 49
[ ஜூலை 16 - ஆகஸ்ட் 17, 2008 ]


இந்த இதழில்..
In this Issue..

ஐந்தாம் ஆண்டை நோக்கி...
வாள் நிறுத்தி வணங்கும் இணையர்
திரும்பிப் பார்க்கிறோம் - 21
சிதையும் சிங்காரக் கோயில்கள் - 3
காதல் எதிரிகள் - சில நிகழ்வுகள்
Virtual Tour On Kundrandar Koil - 1
Airavati - Preview of Mahadevan Section
Airavati - Preview of Tamil Section
Airavati - Preview of English Section
அவர் - மூன்றாம் பாகம்
Silpis Corner (Series)
Silpi's Corner-05
திருமணம் = இராமன்?!
இதழ் எண். 49 > இலக்கியச் சுவை
திருமணம் = இராமன்?!
இரா. கலைக்கோவன்


தலைவன் நெய்தல் நிலத்தவன். படகுகளுடன் பரதவர் சூழ மீன் வேட்டைக்குச் செல்பவன். கடல் வாரி வழங்கும் மீன்வளத்தை அள்ளித்தரும் வலைகளின் பெருமையைப் பேசி மகிழும் அவனுடைய ஊர் சிறிய குடியமைப்புகளைக் கொண்ட, "பாக்கம்". படகுகள் கரைத் திரும்பியதும் நிறைத்துக் கொணர்ந்த அயிலை மீன்களை ஊர் முழுவதும் பங்கிட்டுத் தந்து மகிழும் அந்தத் தலைவன், தலைவியைக் காதலித்து அவளைச் சந்தித்து மகிழ்ந்த நாட்களில், அந்தக் காதல் சந்திப்புகளைக் கண்டவரும் கேட்டவருமான தலைவியின் ஊர் வாழும் பெண்கள் கூடிப்பேசி வம்பு மொழிந்தனர். காதல் இரகசியம் ஊரறிந்த செய்தியானது. தகவலறிந்த தலைவியின் பெற்றோர் திருமணத்திற்கு ஏற்பாடு செய்தனர். நாள் நிச்சயிக்கப்பட்டமை அறிந்த நொடியிலேயே ஊர் வம்பு ஒடுங்கிப்போனது. முறைப்படித் திருமணம் நடக்கப்போவதால் உரைவீச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்தனர் ஊர்ப் பெண்கள்.

தலைவி வியந்து சொன்னாள், "தோழி, திருமணம் என்ற ஒரு சொல் ஊர் வாயை எப்படி அடைத்துவிட்டது பார்த்தாயா?"

தோழி சொன்னாள், "ஆம் தலைவி. பாண்டியரின் தொல்முது கோடியான கடற்கரை ஊரில் (திருவணைக்கரை?) பல விழுதுகளை உடைய ஆலமரம் ஒன்று இருந்தது. காலம் காலமாய் அதில் வாழ்ந்து வந்த பறவைகளின் அடங்காத கீச்சொலியால் அந்த ஊரே அமைதியின்றி இருந்தது. சீதையைத் தேடி அந்த ஊருக்கு வந்த போரில் வெற்றி கொள்ளும் பண்பினரான இராமன், தம் நண்பர்களுடன் கூடிச் சீதையைத் தேடும் வழிமுறைகளை ஆராய முயன்ற போது பறவைகளின் அடங்காத ஒலி இடையூறாய் விளைந்தது. பார்வையாலோ, இதழ் விரித்து எழுப்பிய ஓசையாலோ இராமர் அந்தப் பேரொலியை ஒரு நொடியில் அடங்கச் செய்தாராம். அதைப் போலத்தான் நம் பெற்றோர் உனக்கும் அவருக்கும் திருமணம் என்றதும் ஓயாது ஒலித்துக் கொண்டிருந்த ஊர் வாயும் அடக்கிவிட்டது".

இப்போது சொல்லுங்கள் திருமணம் என்ற சொல்லுக்கு இராமர் பார்வையோ, எழுப்பிய ஒலியோ இணைதானே? அப்படியானால் திருமணம் = இராமர் என்பதும் சரிதானே!

இராமாயணத்தில் காணப்படாத இந்தச் செய்தியை அகநானூற்றில் (70) பதிவு செய்திருப்பவர் மதுரைத் தமிழ்க் கூத்தனார் கடுவன் மள்ளனார். மள்ளன் என்ற பெயரே அவருடைய கலைத் தொடர்புகளைச் சுட்ட, "தமிழ்க் கூத்தனார்" என்ற முன்னொட்டு, தமிழ்க் கூத்தில் வல்லவர் அப்பெருந்தகை என்பதைக் கூறாமல் கூறுகிறது. கூத்தில் வல்லவராய் இருந்தமையால்தானோ என்னவோ தம்முடைய இந்தப் பாட்டிலும் விழா மகளிர் ஒப்பனை பற்றிய நுட்பமான செய்தி ஒன்றை நுழைத்துப் போயுள்ளார் கடுவன் மள்ளனார்.

"புலிநகக் கொன்றையின் புதிய பொன்னிறப் பூக்களுடன் புன்னைப் பூக்களும் உதிர்ந்து ஓவியம் வரைந்தது போல் அழகுபடுத்தியிருக்கும் கடற்கரைச் சோலைகளையுடைய அழகிய பெருந்துறைகளில் உள்ள வயல்களின் கரிய நீரில் பசிய இலைகளுடன் தழைத்துத் திரண்டிருக்கும் தண்டுகளையுடைய நெய்தல் பூக்கள் கண்கவரும் அழகின. விழாவிற்கு ஒப்பனை செய்து கொள்ளும் பெண்கள் தங்கள் தழையாடைகளை அழகுபடுத்த இந்நெய்தல் பூக்களைப் பலவாகப் பறித்து அணிந்துகொள்வர்."

மள்ளனார் சுட்டும் கடற்கரைச் சோலைகளையும் தழைத்துத் திரண்டிருக்கும் தண்டுகளையும் கூடுதலாக நண்டுவரை கோலங்களையும் காண அந்தமானுக்கு வாருங்கள்.
this is txt file
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.