http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[176 Issues]
[1745 Articles]
Home About US Temples Facebook
Issue No. 54

இதழ் 54
[ டிசம்பர் 18 - ஜனவரி 23, 2009 ]


இந்த இதழில்..
In this Issue..

வல்லறிதல் வேந்தன் தொழில்
பார்க்கவும் படிக்கவும் . . .
ஒரே ஒரு கேள்வி
திரும்பிப்பார்க்கிறோம் - 26
திரிபுவன வீரனே! பாண்டியாரியே! - மூன்றாம் பாகம்
Thirumeyyam - 1
தனித்தமிழ்க் கலைச்சொற்கள் - 1
அவர் - ஏழாம் பாகம்
என் துன்பம் நீயும் பெறுவாய்!
கௌடல்யரின் அர்த்தசாஸ்த்ரத்தில் ஒற்றாடல்
இதழ் எண். 54 > சுடச்சுட
பார்க்கவும் படிக்கவும் . . .
மு. நளினி


மதுரை மாவட்டத்தின் பெருமைக்குரிய கோயில்களுள் ஒன்று அழகர்கோயில். இயற்கை வளம் சூழ்ந்த இக்கோயிலில் நாளும் மக்கள் திரள்தான். தமிழ்நாட்டின் ஒரே தூய வேசர விமானத்தைக் கொண்டிலங்கும் இத்திருக்கோயிலில் பிற்பாண்டியர் கல்வெட்டுகளும் முற்பாண்டியர் காலத்தனவாகக் கருதத்தக்க துண்டாடப்பட்ட வட்டெழுத்துக் கல்வெட்டுகளும் உள்ளன. திருக்கோயில் வளாகத்தின் வலப்புறத்தே மக்கள் பார்வை படாத பகுதியில், நாயக்கர் கால வசந்த மண்டபம் ஒன்று ஒளிந்துள்ளது. இந்த மண்டபத்தைப் பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தபோது மகிழ்வாலும் அதிர்ச்சியாலும் உறைந்து போனோம்.



மண்டபத்தின் கூரை முழுவதும் மண்டபச் சுவர்களின் மேற்பகுதி உட்பட நாயக்கர் கால இராமாயண ஓவியங்கள் காட்சி விளக்கங்களுடன் திகழ்ந்தன. அண்மைக் காலத்தில் நிகழ்த்தப்பட்ட சுவர்ப்பூச்சினால் சில இடங்களில் ஓவியங்கள் அழிந்திருந்தபோதும், எஞ்சியுள்ளவை பெரும் புதையலாய் விளங்குவது உணர்ந்து அவற்றைக் காப்பாற்றுமாறு கோயில் இணை ஆணையரிடம் வேண்டுகோள் வைத்தோம். தவிர்க்க முடியாத காரணங்களால் அந்த வசந்த மண்டபம் தற்காலிகமாக வைக்கோல் க hப்பறையாகப் பயன்படுகிறது.

அந்த வசந்த மண்டபக் கூரையில் காணப்படும் ஓவியத்தொடரின் ஒரு சிதறல்தான் நீங்கள் பார்க்கும்இந்தக் காட்சி. ஓர் அரச ஊர்வலம் இடைப்பட்ட காட்சியாகக் காட்டப்பட்டுள்ளது. முன்னால் அணிவகுத்துச் செல்லும் ஐந்து ஆடவர்களும் நாமம் அணிந்துள்ளனர். இடையில் மரமேறிகள் போல் மடித்துச் சுருக்கிய ஆடையும் அதை இடுப்பில் இருத்த சரிகைக் கரையிட்ட இடைத்துண்டும் தலைப்பாகையும் அணிந்துள்ள அவர்களுக்கு மேற்சட்டை இல்லை. பின்னால் வரும் மூன்று தேர்களில் முதல் தேர் தசரதரைச் சுமந்துவர, இரண்டாம் தேரில் வசிஷ்டரும் கலைக்கோட்டு முனிவரும் உள்ளனர். மூன்றாம் தேரில் இருப்பவர்கள் அமைச்சர்கள். தேர்கள் விமானம் போல வடிவமைக்கப்பட்டிருப்பதைப் பார்க்கலாம். ஒவ்வொரு தேருக்கும் நான்கு சக்கரங்களும் இரண்டு குதிரைகளும் உள்ளன.

தேருக்குப் பின்னால் மூன்று மூடுபல்லக்குகள். ஒவ்வொரு பல்லக்கையும் நால்வர் சுமக்கின்றனர். மேற்சட்டை அணிந்துள்ள இவர்களின் இடைத்துண்டில் சரிகை இல்லை. பல்லக்குகள் திரையிடப்பட்டுள்ளன. முதல் பல்லக்கில் கெளசல்யாவும் இரண்டாம் பல்லக்கில் சுமித்ராவும் மூன்றாம் பல்லக்கில் கைகேயியும் பயணிப்பதாகப் படவிளக்கம் தெரிவிக்கிறது. குதிரைகளின் அலங்காரம், தேரின் அமைப்பு, அரச குடும்பத்தினரின் பயணக்காட்சி, அரசு அலுவலர்கள் தோற்றம், முனிவர்கள் பெற்றிருந்த வாழ்வு என அனைத்தும் அறிய இப்படத் தொகுப்பு உதவுகிறது.

கீழுள்ள விளக்கம், 'முப்பத்திரண்டு வகை மேள வாத்தியத்துடன் இவர்கள் அயோத்தியபுரிபட்டனம் போன' தாகக் குறிப்பிடுவது கொண்டு, நாயக்கர் காலத்திலிருந்த அரச ஊர்வல இசைக்கருவிக் கூட்டத்தின் எண்ணிக்கையையும் அறியமுடிகிறது. ஒரு படத் துண்டே இவ்வளவு வரலாறு தரக்கூடுமாயின், இங்குள்ள ஓவியத்தொடர் எவ்வளவு தரவுகளை முன்வைக்கும்? ஏன் மதுரை மாவட்ட வரலாற்று ஆய்வாளர்கள் இந்த நாயக்கர் கால இராமாயணத் தொடரை இதுநாள்வரையிலும் ஆய்வுக்கு உட்படுத்தவில்லை?

இந்த வசந்தமண்டபத்தை மக்கள் பார்வைக்குக் கொணர்ந்தால் கோயிலுக்கு வருவாய் கிடைப்பதுடன் மண்டபத்தைக் காப்பாற்ற நிதியும் உருவாகும். சுற்றுலாத்துறையும் தொல்லியல் துறையும் அறநிலையத்துறையும் கையிணைத்தால் இந்த நாயக்கர் கால இராமாயணத் தொடர் காப்பாற்றப்படும்.
this is txt file
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.