http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[176 Issues]
[1745 Articles]
Home About US Temples Facebook
Issue No. 54

இதழ் 54
[ டிசம்பர் 18 - ஜனவரி 23, 2009 ]


இந்த இதழில்..
In this Issue..

வல்லறிதல் வேந்தன் தொழில்
பார்க்கவும் படிக்கவும் . . .
ஒரே ஒரு கேள்வி
திரும்பிப்பார்க்கிறோம் - 26
திரிபுவன வீரனே! பாண்டியாரியே! - மூன்றாம் பாகம்
Thirumeyyam - 1
தனித்தமிழ்க் கலைச்சொற்கள் - 1
அவர் - ஏழாம் பாகம்
என் துன்பம் நீயும் பெறுவாய்!
கௌடல்யரின் அர்த்தசாஸ்த்ரத்தில் ஒற்றாடல்
இதழ் எண். 54 > இலக்கியச் சுவை
என் துன்பம் நீயும் பெறுவாய்!
இரா. கலைக்கோவன்

பல்வகையான விழாக்களை அவ்வப்போது கொண்டாடி மகிழும் பழைமையும் பெருமையும் கொண்டது இந்த ஊர். இங்குள்ள பரந்து விரிந்த மன்றத்தில் நின்றவாறு, மணிகளைச் சேர்த்துக் கட்டியது போல் நொச்சிப்பூக்களை மாலையாகத் தொடுத்து அணிந்திருக்கும் முதிய குயவர், பலிகளை இடுவதற்கென்றே அமைந்த தம் கைகளில் கொண்டுள்ள பலியுணவை மன்றத்தில் இட்டு அதை உண்ணுமாறு பலிகொள்ளும் உயிரினங்களை (அணங்குகள், காகங்கள்) உரத்த குரலெடுத்து அழைக்கிறார்.

இந்த மன்றத்தில்தான் பூப்போலும் கண்களையுடைய தன் தோழிகள் சூழ என் மகள் விளையாடி மகிழ்வாள். இன்று அவள் இங்கில்லை. என் இல்லத்திருந்த பொலிவு பெற்ற கூந்தலையுடைய என் மகளைப் பலவாய பொய்மொழிகள் கூறிக் காளையொருவன் தன்னுடன் அழைத்துச் சென்றுவிட்டான். அவள் இல்லாத மன்றம் வெறிச்சோடிக் கிடக்கிறது. அவள் தோழிகளைப் பார்க்கும்போதெல்லாம் அவள் நினைவு என்னைப் பெருந்துன்பத்தில் ஆழ்த்துகிறது. அவளை என்னிடமிருந்து பிரித்து அழைத்துச் சென்றானே ஒருவன், அவனுக்கு ஒரு தாய் இருப்பாள் அல்லவா! மகளைப் பரிந்து நான் உறும் இந்தக் கொடிய துன்பத்தை அவள் அனுபவிக்க வேண்டும்.

மகள் பிரிவைத் தாங்கமுடியாத தாயின் சாபமொழி காட்டும் இந்தப் பாடல் கயமனாருடையது. (அகம் 293) சாபத்தை விடுங்கள், அது உளவியல் தரவு. மன்றத்தில் பலி தரும் சங்கப் பழக்கம் பண்பாட்டு வரலாறாக வடிவெடுத்துள்ளதே, அதைப் பாருங்கள். ஊருக்காக அளிக்கும் பலி! தருபவர் குயவர்!

அகம் : 293

<தலைப்பு>

<குறிப்பு>

திணை : <>
ஆசிரியர் : கயமனார்

இலைஒழித்து உலறிய புன்தலை உலவை
வலைவலந் தனைய ஆகப், பலஉடன்
சிலம்பி சூழ்ந்த புலம்கெடு வைப்பின்,
துகில்ஆய் செய்கைப் பாவிரிந் தன்ன
வெயில்அவிர்பு நுடங்கும் வெவ்வெங் களரி,
குயிற்கண் அன்ன குரூஉக்காய் முற்றி
மணிக்காசு அன்ன மால்நிற இருங்கனி
உகாஅ மென்சினை உதிர்வன கழியும்
வேனில் வெஞ்சுரம் தமியர் தாமே
செல்ப என்ப தோழி! யாமே,
பண்பில் கோவலர் தாய்பிரித்து யாத்த
நெஞ்சமர் குழவிபோல, நொந்து நொந்து,
இன்னா மொழிதும் என்ப;
என்மயங் கினர்கொல், நம் காத லோரே?

this is txt file
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.