http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[176 Issues]
[1745 Articles]
Home About US Temples Facebook
Issue No. 61

இதழ் 61
[ ஜுலை 15 - ஆகஸ்ட் 15, 2009 ]


இந்த இதழில்..
In this Issue..

கல்லுடைப்பில் ஒரு வரலாற்று அழிப்பு
இராமாயணக் கதவுகள்
புதுப்பட்டிக் குடைவரை
பழந்தமிழ்க் கல்வெட்டுகள் - 3
கழுகுமலை பயணக் கடிதம் - 3
பொன்னியின் செல்வன் வரலாற்றுப் பெருவிழா 2009
பாடு பட்ட அம்மாள்
ராமநாதபுரம் கிருஷ்ணன் - ஆவணப்படம்
மௌனப் போர்க்களமே!
இதழ் எண். 61 > சுடச்சுட
இராமாயணக் கதவுகள்
மு. நளினி
சேலம் மாவட்டம் நாமக்கல்லில் உள்ள குன்றில் அதியமான்களின் ஆட்சிக் காலமான கி. பி. எட்டாம் நூற்றாண்டளவில் இரண்டு குடைவரைகள் குடையப்பட்டுள்ளன. குன்றின் இடைப்பகுதியில் உள்ள குடைவரை அதியரின் கல்வெட்டுகளைப் பெற்றுள்ளது. அதியேந்திர விண்ணகரமாக அறியப்படும் அதில், விஷ்ணு பாம்பணை மேல் படுத்த பரந்தாமனாகக் காட்சிதருகிறார். குன்றின் அடிவாரக் குடைவரையில் நரசிம்மர் வீற்றிருக்கிறார்.


கோசலை, சுமித்திரை, கைகேயி மூவரும் அவரவர் பிள்ளைகளுக்குப் பாலூட்டல்



கோசலை, சுமித்திரை, கைகேயி மூவரும் அவரவர் பிள்ளைகளைத் தொட்டியில் இட்டுத் தாலாட்டல்



மாரீசனை அம்பு தைக்கும் காட்சிகள்



மாரீசனை அம்பு தைக்கும் காட்சிகள்



தாரையின் மடியில் வாலி



கதவு


நரசிம்மர் குடைவரை வளாகத்திற்குள் நுழைய மூன்று வாயில்கள் உள்ளன. அவற்றுள் வடக்கு, மேற்கு வாயில்களின் நெடுங்கதவுகளில் இராமாயணச் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. மேற்கு வாயிலினும் வடக்கு வாயில் சிற்பங்கள் சிறப்பாக உள்ளன. ஏறத்தாழ இருநூறு அல்லது முன்னூறு ஆண்டுக் காலப் பழைமை உள்ள இம்மரச் சிற்பங்களில் கூறப்பட்டிருக்கும் இராமாயணக் கதையை மீட்டுருவாக்கம் செய்வது அக்காலத்தே மக்கள் வழக்கில் இருந்த இராமாயணத்தை அறிய உதவும். தமிழ்நாட்டுக் கோயில்கள் சிலவற்றில் இது போல் சிற்பக் கதவுகள் காணப்படினும் முழுமையும் இராமாயணம் சார்ந்த சிற்பங்களாலான கதவுகள் நாமக்கல் போல் வேறெங்கேனும் உளவா என்பது தெரியவில்லை.

3. 80 மீ. உயரம் 1. 16 மீ. அகலமுடைய வடக்கு வாயிலின் இரண்டு கதவுகளிலும் கதவொன்றிற்கு நான்கு நெடுக்குப் பட்டைகளும் பதினொரு குறுக்குப் பட்டைகளும் அமைக்கப்பட்டுள்ளன. குறுக்குப் பட்டைகள் ஒவ்வொன்றிலும் மூன்று சதுரங்களும் நெடுக்குப் பட்டைகள் ஒவ்வொன்றிலும் பத்து சதுரங்களும் சிற்பங்களுடன் உள்ளன. பட்டைகள் இணையும் இடம் ஈட்டி முனை போன்ற இரும்பு ஆணிகளால் பொருந்தச் சேர்க்கப்பட்டுள்ளது. ஒரு கதவில் மட்டும் நெடுக்குச் சட்டம் ஒன்று சிற்பங்களை இழந்துள்ளது. இருப்பனவற்றுள், பல சிற்பங்கள் நன்னிலையில் உள்ளமையால் இலக்கிய நோக்கிலும் வரலாற்று நோக்கிலும் ஊரகப் பார்வையிலும் இவற்றை ஆராய்வது பெரும் பயன் நல்கும்.
this is txt file
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.