http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[176 Issues]
[1745 Articles]
Home About US Temples Facebook
Issue No. 77

இதழ் 77
[ நவம்பர் 16 - டிசம்பர் 15, 2010 ]


இந்த இதழில்..
In this Issue..

நம்பள்க்கி நிம்பள்க்கி
செப்பேடுகள் பேசும் வரிகள்
மேற்றளியாரும் நலக்குன்றத்தாரும் - 2
புத்தூர்ப் பாறைக் குடைவு
சென்னை அருங்காட்சியகச் செப்பேடுகள் - 2
தீஞ்சுவைக் கரும்பு
இதழ் எண். 77 > கலையும் ஆய்வும்
புத்தூர்ப் பாறைக் குடைவு
மு. நளினி


வேலூர் மாவட்டம் குடியாத்தம் வட்டத்தில் காட்பாடிக்கு அருகிலுள்ள 66 புத்தூரில் உள்ள அசரிரி மலையில், மேலே முருகன் கோயிலும் மலைப்பாதையின் அடிவாரத்தில் பாறைக் குடைவும் உள்ளன.

பாறையை அதன் உட்புறத்தில் மேலிருந்து கீழாக நாற்புறத்தும் குடைந்து 2.21 மீ. பக்கமுடைய சதுரத் தொட்டிபோல் அமைத்துள்ளனர்.1 இக்குடைவின் தென்சுவரில் 1.47 மீ. நீளப்பகுதியில் 92 செ.மீ. உயரத்திற்கு வடபார்வையாக இரண்டு தலைகள் செதுக்கப்பட்டுள்ளன. வலப்புறத்தலை ஆண் தலையாகவும் இடப்புறத்தலை பெண் தலையாகவும் அமைந்துள்ளன. இரண்டுமே மகுடம் பெற்றிருந்தபோதும் பெண் தலையின் மகுடம் சற்று நீளமாக அமைந்துள்ளது.2 இவ்விரு மகுடத் தலைகளுக்கும் இடையே கொடித்தண்டு போன்ற அமைப்பும் அதிலிருந்து வளருமாறு இடப்புறத்தே கொடிச்சுருள்கள் இரண்டும் காட்டப்பட்டுள்ளன. வலப்புறத்தில் இவ்வமைப்பு இல்லை. தலைகளுக்கு முன்னாலுள்ள வட்டமான தளம் பலித்தளம் ஆகலாம்.



தென்சுவர் தவிர்த்த பிற பாறைச்சுவர்கள் வெறுமையாக உள்ளன. தென்சுவரிலும் தலை வடிப்புகளை அடுத்துக் காணப்படும் பாறை எச்சங்களைத் தவிர்த்த சுவர்ப்பகுதிகள் வெறுமையாக உள்ளன. கிழக்கு, மேற்கு, வடக்குச் சுவர்கள் நன்கு கீழிறங்கி அமைய, தெற்குச் சுவரின் கீழ்ப்பகுதி மட்டும் ஒரு மேடையென உயர்ந்துள்ளது.3 கூரையற்ற குடைவாக அமைந்திருப்பதால் தரைத்தளத்தில் தண்ணீர் தேங்கியுள்ளது. தற்போது இத்தளத்தில் அகிலாண்டேசுவரி அம்மன் என்ற பெயருடன் பெண் தெய்வச் சிற்பமொன்று இடம்பெற்றுள்ளது. கரண்டமகுடம், பட்டாடை, முப்புரிநூல், சரப்பளி அணிந்துள்ள அம்மையின் பின்கைகள் மலர்மொட்டுகள் கொள்ள, வல முன்கை காக்கும் குறிப்பிலும் இட முன்கை அருட்குறிப்பிலும் உள்ளன.



வடக்குச் சுவரின் நடுப்பகுதியில் 63 செ.மீ உயரம், 76 செ.மீ அகலம் கொண்டு காணப்படும் திறப்பு, வாயில் உருவாக்கத்தின் நிறைவடையாத தோற்றம் எனலாம். மேல்நிலை, பக்கநிலைகளின் உருவாக்கத்தை வாயிலின் உட்புறம் காணமுடிகிறது. வாயிலை அடுத்துச் சற்றுத் தள்ளிய நிலையில் இரண்டு நான்முக அரைத்தூண்களை உருவாக்கும் முயற்சி தொடக்க நிலையில் கைவிடப்பட்டுள்ளது. தூண்களை அடுத்து உத்திரமும் வாஜனமும் முழுநிலையில் உருவாகியுள்ளன.

இவ்வாயிலுக்கு முன் கிழக்கிலும் மேற்கிலும் தடுப்புச் சுவர்கள் கட்டி வாயிலுக்கு முன்னிருக்குமாறு நீளமான படி ஒன்றை அமைத்துள்ளனர். கிழக்கு, மேற்குச் சுவர்கள் வெளிப் புறத்தே செம்மையுறாவிடினும் அவற்றின் வடகிழக்கு மூலைகளில் போதிகை அமைப்பைக் காணமுடிகிறது. கூரையற்ற நிலையில், 'தொட்டி' போன்ற நிலையில் உருவாக்கப்பட்டுள்ள இப்பாறைக் குடைவைக் குடைவரையாகவும் கொள்ள முடியாது; ஒருகல் தளி வகையிலும் சேர்க்க முடியாது.

குறிப்புகள்

1. ஆய்வுநாள் : 3-10-2010. சு.இராசவேல், அ.கி.சேஷாத்திரி ஆகியோரின் தமிழ்நாட்டுக் குடைவரைக் கோயில்கள் நூல் இக்குடைவு முயற்சியை அறிய உதவியது. ப.92. துணை நின்ற மருத்துவர் திரு. எஸ். சுந்தரேசன், திரு. மு. பழனி இவர்கட்கு உளமார்ந்த நன்றி.

2. சு. இராசவேலும் அ.கி.சேஷாத்திரியும் குறிப்பிட்டிருப்பது போல மகுட அமைப்புகள் கொண்டு இத்தலைகளைச் சிவபெருமான் உமை இணையாகக் கருத வாய்ப்புண்டு. ப.93

3. கருவறையை இரண்டாகப் பிரித்து முன்மண்டபம் அமைக்கும் முயற்சி நடந்துள்ளதாகச் சு.இராசவேலுவும் அ.கி.சேஷாத்திரியும் எழுதியுள்ளமை சரியன்று. ப.93.
this is txt file
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.