![]() |
![]() |
![]() |
http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [181 Issues] [1796 Articles] |
Issue No. 115
![]() இதழ் 115 [ ஜனவரி 2015 ] ![]() இந்த இதழில்.. In this Issue.. ![]() |
தொடர்:
சங்கச்சாரல்
வேந்தன் மேய தீம்புனல் உலகம் எனத் தொல்காப்பியம் சிறப்பித்துப் பேசும் மருத த்தின் தெய்வம் அவன். தேவர்களின் தலைவனும் அவனே. வான்மழையின் கடவுளும் அவனே.
அவன் இந்திரன். கார்காலத்தில் பெருமழைக்குப்பின் வானில் தோன்றும் வானவில்லை அவன் பெயரால் இந்திர வில் என்று அழைப்பர். நிலவளமும் நீர்வளமும் மிகுதியாக க் கொண்டு விளங்கியது அந்நாளைய மருத நிலம். ஆகவே தீம்புனல் உலகம் என்று பெயர் பெற்றது. சங்க காலத்தில் மருத நில மக்கள் இந்திரனுக்கு ஆண்டு தோறும் விழா எடுத்து அவனைப் போற்றினர். அதனை இந்திரவிழா என்று அழைத்தனர். ஐங்குறுநூறில் மருத த் திணையைப் பாடும் ஓரம்போகியார் சங்க காலத்தில் இந்திரவிழா தமிழர்களால் சிறப்பாக க் கொண்டாடப்பட்ட செய்தியைப் பதிவுசெய்கிறார். தலைவி கூற்றாக இடம்பெறும் அப்பாடல் இதோ! தலைவி கூற்று இந்திர விழவில் பூவின் அன்ன ……… இவ்வூர் மங்கையர்த் தொகுத்து இனி எவ்வூர் நின்றன்று மகிழ்ந நின் தேரே? அதாவது, இந்திரவிழா நடத்துவதற்கு மங்கையரைத் தொகுத்தனை, நின் தேர் இனி எவ்வூரில் நிற்கும்? என்று வினவுகிறாள் தலைவி. சங்க கால மக்களின் விழாவாக இந்திர விழா எடுக்கப்பட்டது என்கிற முதல் குறிப்பு இடம்பெறும் பாடலாக இதனைச் சுட்டலாம்.பின்னாளில் சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகளால் புகாரில் நடந்த இந்திர விழா பெரிதும் சிறப்பித்துப் பாடப்பெற்றது. மருத நிலத் தெய்வமான இந்திரனுக்கு விழா எடுத்துத் தமிழர்கள் வழிபட்டார்கள் என்பது மேற்கண்ட பாடல் வழி தேற்றம். |
![]() சிறப்பிதழ்கள் Special Issues ![]() ![]() புகைப்படத் தொகுப்பு Photo Gallery ![]() |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |