http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[177 Issues]
[1753 Articles]
Home About US Temples Facebook
Issue No. 137

இதழ் 137
[ செப்டம்பர் 2017 ]


இந்த இதழில்..
In this Issue..

கதவுகள் திறந்து கருணையோடு காத்திருந்தது வரலாறு
TEMPLES IN AND AROUND THIRUCHIRAPPALLI - 9
திருவலஞ்சுழி - ஸ்வேத விநாயகர் - அமைவிடம்
புள்ளமங்கையில் நெடியோன் சிற்பம்
பொழில்சூழ் திருப்புள்ளமங்கை வளாகம்
நம்மை மறந்தாரை நாம் மறக்க மாட்டேமால்! - 1
புள்ளமங்கை - திருவாலந்துறையார் கோயில் - 3
ஒரு கல் மண்டபம் எனும் திருக்கழுக்குன்றம் குடைவரை
கலியாப்பட்டி ஆய்வுப்பயணம்
வெகுமக்கள் இலக்கியத்தில் தமிழ் இலக்கணம் - 2
இதழ் எண். 137 > கலையும் ஆய்வும்
புள்ளமங்கையில் நெடியோன் சிற்பம்
சு.சீதாராமன்

 



அமைவிடம்:



புள்ளமங்கை வளாகத்தின் திருச்சுற்றில் வடகிழக்கில் தெற்குமுகமாக எழுப்பப்பெற்ற அம்மன் கோயிலின் நேர் பின்புறம் ஒரு சிறுமேடையும் கோட்டமும் அமைக்கப்பெற்றுத் தெற்கு நோக்கிக் காட்சியளிக்கும் இந்த அற்புதமான நெடியோனின் சிற்பம் வடக்கு மதில்சுவரில் பதிக்கப்பட்டுள்ளது.



 





 



 





 



நெடிதுயர்ந்த நிலையில் தாமரைப் பீடத்தில் சமபாதம் பெற்றுக் கிரீடமகுடத்துடன் தெற்குமுகமாகக் காட்சிதரும் திருமாலின் இடையில் புலிமுக அரைக்கச்சு இருத்தும் கச்சம் வைத்த பட்டாடையும் இடைக்கட்டும் உள்ளன. கணுக்கால்களைத் தழுவியுள்ள பட்டாடையின் மடிப்புகள் நன்கு காண்பிக்கப்பட்டுள்ளன. மகர குண்டலங்கள், முத்துமாலை, சரப்பளி, சவடி பெற்று, முப்புரிநூல், முத்துமணிகளால் தைக்கப்பட்ட உதரபந்தம், கைவளைகள், தாள்செறிகள் அணிந்துள்ள திருமாலின் பின்கைகளில் தீக்கங்குகளுடன் சங்கும், எறிநிலைச்சக்கரமும் உள்ளன. முன்கைகளில் வலக்கை அபயஹஸ்தம் காட்ட இடக்கை கடியவலம்பிதமாக உள்ளது.



 





 



சிற்ப அமைதியை நோக்குங்கால் முற்சோழர் காலமாகவே இதனைக்கருத வாய்ப்புண்டு! இவ்வாலயக் கோட்டங்கள் அதனதன் தெய்வங்களைக் கொண்டிருப்பதனைக் காண்கிறோம். இவ்வாலயத்திலேயே உள்ள மேற்குக்கோட்டம் இவருக்கானதோ என்ற ஐயத்தில் அதனைக்காண, அதில் அமைக்கப்பட்ட லிங்கோத்பவரே அங்கு இயல்பாக அமைக்கப்பட்ட மூர்த்தம் என்பது அதன் இருமருங்கிலும் அமைக்கப்பட்ட பிரம்மா மற்றும் விஷ்ணு மூர்த்தங்களைக் கொண்டு அறியலாம். இருப்பினும் இவர் எங்கிருந்து வந்தார்? இவ்வளாகத்தில் ஏன் இருத்தப்பட்டார்? வேறு ஆலயங்களின் கோட்டங்களை அலங்கரித்தவரா? இவ்வாலயத்தில் தனியாகக் கோட்டம் அமைத்து ஏன் ஈசான்ய பாகத்தில் இருத்தப்பட்டுள்ளார் என்பதையெல்லாம் தொடர் ஆய்வுகள் வெளிச்சத்திற்குக் கொண்டுவரும் என்று நம்புவோமாக!!!

 


இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.