http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[176 Issues]
[1745 Articles]
Home About US Temples Facebook
Issue No. 2

இதழ் 2
[ செப்டம்பர் 15 - அக்டோபர் 14, 2004 ]


இந்த இதழில்..
In this Issue..

கல்வெட்டுகளைக் காப்பாற்றுவோம்
எஸ்.ஜே சூர்யாவுக்கு ஒரு கண்டனம்
கதை 1 - சேந்தன்
புதிரான புதுமை
கந்தன் குடைவரை
கட்டடக்கலை ஆய்வு - 2
கருங்கல்லில் ஒரு காவியம் - 2
இது கதையல்ல கலை - 2
'MS - a life in music' - ஒரு விமர்சனம்
இராகமாலிகை - 2
சங்கச்சாரல் - 2
கோச்செங்கணான் காலம்
இதழ் எண். 2 > இலக்கியச் சுவை
சங்கச்சாரல் - 2
தேர் பாகனே விரைந்து செல்

மாற்றூர் கிழார் மகனார் கொற்றங்கொற்றனார், தனது முல்லைத் திணைப் பாடலொன்றின் மூலமாக தலைவனின் மன நிலையை விளக்குகிறார். தலைவன் போர் செய்ய செல்கிறான். பகை மன்னன் பணிந்து திறையாக பல செல்வங்களைக் குவிக்க, அதனால் தலைவனின் மன்னரும் பகை மறந்தான். போர் நின்றது. தன் கடமை முடிந்ததால் தலைவனும் தலைவியை விரைந்து சென்று காண வேண்டும் என்று எண்ணி, தன் தேர் பாகனிடம் இவ்வாறு கூறுகிறான். "பாகனே 'முதல் மழையை (அதாவது கார்ப்பருவத் தொடக்கத்தில் பெய்த மழை) மேகம் ஆரவாரத்துடன் பொழிந்தது, வண்ணம் தீட்டினார்போலிருக்கும் இந்திரக் கோபப் பூச்சிகள் செந்நிலத்தில் ஊர்ந்து செல்கின்றன. ஆகவே வலிமையுடைய தேரின் சக்கரங்கள் நிலத்தில் அழுந்துமெனினும் நீ விரைந்து தேரை செலுத்துவாயாக".

செந்நிலம் - இந்திரக்கோபப்பூச்சிகள் என்பவை மரவட்டை போல் சிவந்த நிறம் கொண்டவை. அவை ஓவியம் போல் ஊர்ந்து செல்வதால் நிலம் செந்நிலமாகக் காட்சியளிக்கிறது. (அகம் 54)




கொடைவள்ளல்

மேலே குறிப்பிட்ட அதே பாடலில் இன்னொரு இடத்தில் அக்காலத்தில் இருந்த ஒரு வள்ளலைப் பற்றிய குறிப்பு காணப்படுகிறது. தலைவன் தன் தலைவியின் சொல் எவ்வளவு இனிமை என்பதற்கு உவமையாக இவ்வாறு கூறுகிறான். "தனக்கு என்று வாழாது பிறர்க்கென வாழும் திறனுடைய "பண்ணன்" என்பவனின் சிறுகுடியிலிருக்கும் படப்பையில் (அதாவது தோட்டத்தில்) உள்ள நுண்ணிய இலையையும், சிறிய விதைகளையும் உடைய நெல்லிக்காயை உண்டபின், நீரை அருந்தும் பொழுது எத்தனை சுவையாக இருக்குமோ அவ்வளவு சுவையானது என் தலைவி பேசும் மொழி". (அகம் 54)




இயற்கை வர்ணனை

தலைவனைப்பிரிந்து வாடும் தலைவியிடம் பலவற்றையும் நினைத்து துன்பப்படாதே என்று அறிவுரை கூறுகிறாள் தோழி. அதற்கு தலைவியின் மறுமொழியாக இப்பாடலை, மாமூலனார் பாலைத் திணையில் இயற்றியுள்ளார். "முன் பனிக்காலம் நீங்கி இளவேனிற் காலம் வந்துவிட்டது. குரவ மலர் மலர்ந்து காணப்படுகிறது. நீரினூடே மணலைக்கொண்ட அகன்ற ஆற்றின் கரையை மருத மரங்கள் அழகு செய்கின்றன. சோலைகளில் அழகான தளிர்களைத் தாங்கும் கிளைகளையுடைய மாமரத்தில் புதிய மலர்கள் பூத்திருக்கின்றன. புகையைப் போன்ற வெண்மேகங்கள் தவழ்கின்றன. அச்சோலையில் மாந்தளிரை உண்ணும் குயில்கள் குரலெழுப்ப, அதைக் கேட்கும் துணைவரைப் பிரிந்தவர்கள் கண்ணிலிருந்து வழியும் நீரை நிறுத்துவது இயலுமா" துன்பத்திலும் இயற்கையை எத்தனை அழகாய் வர்ணித்திருக்கிறாள் தலைவி! (அகம் 97)

this is txt file
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.