http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[176 Issues]
[1745 Articles]
Home About US Temples Facebook
Issue No. 60

இதழ் 60
[ ஜுன் 15 - ஜுலை 15, 2009 ]


இந்த இதழில்..
In this Issue..

பேராசிரியர் மா.ரா.அரசு
பேராசிரியர் மா.ரா.அரசு புகைப்படத்தொகுப்பு
அரசு என்னும் அறிஞர் பெருந்தகை
இதழியல் இமயம்
ஓய்வு ஏது ஐயா உங்களுக்கு
இங்கிவரை யாம்பெறவே...
அரசு என்னும் அரிய மனிதர்
பேராசிரியருக்கு, அன்புடன்...
இதழா...? இயக்கமா...?
நிலா நிலா போ! போ!
இதழ் எண். 60 > இலக்கியச் சுவை
நிலா நிலா போ! போ!
ரிஷியா


இரவின் நெடும்பொழுது. எங்கும் அமைதி பரவிநின்றது. இடையறாது காவல் புரியும் தாய் உறங்கிவிட்டாள். நற்றாய் உறங்க இந்தச் செவிலித்தாயும் உறங்கிவிட்டாள். வீதிதோறும் நள்ளிரவில் உலா வரும் அந்தப் புளியமரத்துப் பேயும் உறங்கிவிட்டது. நட்டநடு வீதியில் படுத்துக்கொண்டு அவ்வப்போது தலைதூக்கிக் குரைக்கும் நாயும் உறங்கிவிட்டது. இவ்வாறு இரவில் களவிற்கு இடையூறு செய்வன எல்லாம் துயில் கொண்டு நன்மை செய்கின்றன.

ஆனால், நீயோ வெண்ணிலாவே, நீ மட்டும் துயிலாது களவில் வருவோரைக் காட்டிக் கொடுத்தல் நன்றன்று. நெடும்பொழுது கழிந்து மறையும் நிலவே, நீ உடனே மறைந்தால் நன்று என்று குறுந்தொகைத் தோழி உரைக்கின்றாள்.

காதல் வெண்ணிலா! கனகப் பூநிலா! காதல் நெஞ்சம் நிலவினைப் புகழ்வது இயற்கை. நிலாக்காலங்கள் நலம் பயப்பவை, இதமானவை, பின்னிரவின் சுகமான நிசப்தத்தில் இனிமை கூட்டுபவை. "காதலை வாழி மதி" என வள்ளுவரும் வாழ்த்துகிறார்.

ஆனால், இந்தக் குறுந்தொகைத் தோழி தலைவனுக்கு இரவுக்குறி மறுக்கிறாள். தலைவியை வரைந்து கொள்ளவேண்டும் என்று உரைக்கிறாள். நிலவினைக் கடிந்து கொள்கிறாள் நன்மை செய்யவில்லை என்று. இதோ, குறிஞ்சித் திணைப் பாடல் -

கருங்கால் வேங்கை வீஉகு துறுகல்
இரும்புலிக் குருளையின் தோன்றும் காட்டிடை
எல்லி வருநர் களவிற்கு
நல்லை அல்லை - நெடுவெண் நிலவே!

- குறுந்தொகை : 47 : நெடுவெண் நிலவினார்.


விளக்கம் :

கரிய அடிப்பகுதியையுடைய வேங்கை மரத்தின் மலர்கள் உதிர்ந்து காணப்படும் பாறையானது, பெரிய புலியின் குட்டி போலக் காட்சியளிக்கும் காட்டின்கண், பல இடையூறுகளுக்கு அஞ்சாது இரவில் வரும் தலைவனது களவிற்கு, நீ நன்மை செய்யவில்லை. நெடும்பொழுது ஒளிவழங்கும் வெண்ணிலாவே!

(இரவு வந்து ஒழுகுங்காலை, முன்னிலை புறமொழியாக நிலவிற்கு உரைப்பாளாகத் தோழி உரைத்தது).

காட்டில் தலைவன் வரும்பொழுது, வேங்கை மலர்கள் உதிர்ந்து கிடக்கும் பாறைகளைக் கண்டு, தலைவன் புலிக்குட்டி என அஞ்சுதலும் கூடும். தலைவனின் அச்சத்திற்கும், ஊரார் அலர் உரைப்பதற்கும், தலைவியின் ஆற்றாத் துயரத்திற்கும், தலைவன் இன்பம் நுகராமைக்கும் காரணமாக நிலவு விளங்குவதால், தோழி நிலவினைக் கண்டு நல்லை அல்லை என்கிறாள்.

களவுக் காலங்களில், வெறுக்கத் தக்கதாய், துன்பம் தருவதாய் விளங்கும் நிலவினை, 'நெடுவெண் நிலவு' எனச் சிறப்பித்துப் பாடினமையால், இப்பாடலைப் பாடிய கவிஞர் பெருந்தகைக்கு 'நெடுவெண் நிலவினார்' என்ற சிறப்புப் பெயர் பாடுபடுபொருள் காரணமாக நிலைபெற்றுவிட்டது சங்ககால இலக்கியச் சோலையில்.

இரவில், களவில் தொல்லை தருவதால் அந்தப் பொல்லாத நிலா வரவே வேண்டாம். எனவே, நிலா நிலா போ போ என்கிறாள் தோழி.

சக மனிதர்கள்தான் காதலுக்கு ஊறு செய்வார்கள், வரிந்து கட்டிக்கொண்டு எதிர்ப்பு வேலை பார்ப்பார்கள்.

ஓ நிலவே! நீயுமா?
this is txt file
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.