http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[176 Issues]
[1745 Articles]
Home About US Temples Facebook
Issue No. 66

இதழ் 66
[ டிசம்பர் 15 - ஜனவரி 15, 2009 ]


இந்த இதழில்..
In this Issue..

செம்மொழி மாநாடு சிறப்புற...
மரபு வரிசையில் நாயக்க அரசர்களின் உருவச் சிற்பங்கள்
வாசிப்பில் வந்த வரலாறு - 1
சோழர் கால ஆடலாசான்கள்
விளங்குளம் அட்சயபுரீசுவரர் கோயில்
அதிசய ராஜம்! அபூர்வ ராஜம்!
இரண்டு சந்தோஷங்கள்
மீன்கொத்தியும் பரணரும் (தமிழரின் அறுவை சிகிச்சைப் பதிவு)
இதழ் எண். 66 > சுடச்சுட
மரபு வரிசையில் நாயக்க அரசர்களின் உருவச் சிற்பங்கள்
மு. நளினி

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ஆய்வு மேற்கொண்டபோது புதுமண்டபத்தையும் விரிவான அளவில் ஆராயும் வாய்ப்பமைந்தது. மண்டபத்தின் நடுக்கூடம் சிற்பக் களஞ்சியமாக விளங்குவதால், நாற்புறமும் அடைப்புக்காளாகிய நிலையில் கோயிலாரின் பாதுகாப்பில் உள்ளது. திருமலைநாயக்கரின் பெருமைக்குரிய கட்டுமானங்களுள் ஒன்றாக விளங்கும் இப்புதுமண்டபத்தின் நடுக்கூடம், நாயக்க அரசர்களின் திருவுருவங்களைக் கொண்டுள்ளமை அனைவரும் அறிந்த செய்தியாகும். இத்திருவுருவங்கள் எந்தெந்த நாயக்க அரசர்களைக் குறிக்கின்றன என்பது பற்றிய தெளிவான எழுத்துப் பதிவுகளை எங்கள் களஆய்வின்போது கண்டறியமுடிந்தது.

மீனாட்சி அம்மன் கோயில் இணைஆணையர் திரு. ப. இராஜாவின் முன்னிலையில் அரசர்களின் திருவுருவங்களை ஆராய்வதற்கான முயற்சிகள் நாங்கள் மேற்கொண்டபோது, இவ்வெழுத்துப் பதிவுகள் வெளிச்சத்திற்கு வந்தன. மண்டப நடுக்கூடத்தின் தெற்கிலும் வடக்கிலுமாய் நிற்கும் பெருந்தூண்கள் அனைத்துமே நாயக்கர் காலக் கலை, பண்பாட்டு வரலாற்றைக் காட்டும் சிற்பங்களைப் பலவாகக் கொண்டுள்ளன. அவற்றுள் மண்டபத்தின் வடக்கில் ஐந்து தூண்களிலும் தெற்கில் ஐந்து தூண்களிலுமாக எதிரெதிர் நோக்கியவர்களாக நாயக்க அரசர்களின் பேருருவச் சிற்பங்கள் காட்டப்பட்டுள்ளன.



வடக்குத் தூண்களில் கிழக்கிலிருந்து மேற்காக உள்ள ஐந்து பெருந்தூண்களில் முறையே பத்தாவது பட்டம் திருமலைநாயக்கர், ஒன்பதாவது பட்டம் முத்துவீரப்ப நாயக்கர், எட்டாவது பட்டம் முத்து கிருஷ்ண ரங்கப்ப நாக்கர், ஏழாவது பட்டம் கஸ்தூரி ரங்கப்ப நாயக்கர், ஆறாவது பட்டம் கிருஷ்ணப்ப நாயக்கர் இவர்தம் திருவுருவங்கள் உள்ளன. ஒவ்வோர் அரசரின் பெயருக்கு முன்னும் 'மகாராஜ மானிய ராஜ' என்ற அடைமொழி இடம்பெற்றுள்ளது. அரசர்கள் பட்டத்திற்கு வந்த வரிசைமுறை '10வது பட்டம், 9வது பட்டம்' என எண்களில் தரப்பட்டுள்ளது.

தெற்குத் தூண்களில் மேற்கிலிருந்து கிழக்காக ஐந்தாவது பட்டம் இலிங்கம நாயக்கர், நான்காவது பட்டம் கிருஷ்ணப்ப நாயக்கர், மூன்றாவது பட்டம் பெரிய வீரப்ப நாயக்கர், இரண்டாவது பட்டம் குமார கிருஷ்ணப்ப நாயக்கர், முதற் பட்டம் விசுவநாத நாயக்கர் திருமேனிகள் காட்டப்பட்டுள்ளன.

திருமலைநாயக்கர் சிற்பம் உள்ள தூண் மட்டும் அனைத்துப் பக்கங்களிலும் சிற்ப வேலைப்பாடு பெற்றுள்ளது. இருபுறத்தும் சற்றுக் கீழான நிலையில் தேவியர்கள் இடம்பெறத் தூண்களின் கீழ்ப்புறத்தே அமைச்சர்கள், படைத்தலைவர்கள், இன்னபிற அலுவலர்கள், கலைஞர்கள் காட்டப்பட்டுள்ளனர். பத்துப் பட்டங்களுள் திருமலை நாயக்கரும் அவருடைய தந்தையாரும் மட்டுமே வண்ணப்பூச்சுப் பெற்றுள்ளனர்.

தமிழ்நாட்டைக் காலங்காலமாக எத்தனையோ அரசமரபுகள் ஆண்டிருந்தபோதும் ஓர் அரச மரபைத் தொடங்கித் தொடர்ந்த பத்துப் பட்டத்துப் பேரரசர்களின் கருங்கல்லாலான திருவுருவங்களை அவரவர் தம் பெயர்களைத் தரும் எழுத்துப் பதிவுகளுடன் காணமுடிவது மதுரைப் புதுமண்டபத்தில் மட்டும்தான்.

இவ்வாய்விற்குப் பேருதவியாக இருந்த கோயிற் புலவர் திரு. த. விஜயரகுநாதன், உதவியாளர் திரு. இரா. இராஜேஷ் இவர்களும் பிற கோயில் அலுவலர்களும் நன்றிக்குரியவர்கள்.

1942 மார்ச்சு மாதம் ஆறாம் நாள் 'பாரிஸ்டர் அட் லா' திரு. ஆர். எஸ். நாயுடு கோயில் நிருவாக அலுவலராக இருந்தபோது சென்னை ஆளுநரின் அறிவுரையாளராக விளங்கிய டி. ஆஸ்டின் என்பவர் புதுமண்டபத்தில் அருங்காட்சியகத்தையும் நூலகத்தையும் திறந்து வைத்தமை குறித்த கல்வெட்டு இரண்டு துண்டுகளாகப் புதுமண்டபத்தில் இன்றும் பார்வைக்குக் கிடைக்கின்றது. புதுமண்டபம் பற்றிய விரிவான சிற்ப ஆய்வுகள் நாயக்கர் காலச் சமுதாயம் குறித்த புதிய தரவுகளை வரலாற்றுக்கு வழங்கக் காத்திருக்கின்றன.
this is txt file
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.