http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[176 Issues]
[1745 Articles]
Home About US Temples Facebook
Issue No. 75

இதழ் 75
[ செப்டம்பர் 16 - அக்டோபர் 15, 2010 ]


இந்த இதழில்..
In this Issue..

ஏழாவது ஆண்டில்
ஒரு மனிதன், ஒரு கோயில், ஒரு புத்தகம் - ஒரே குழப்பம்!
ஆவூர்க் குடைவரை
திரைக்கோயில் குடைவரை
இராஜராஜேசுவரத்து ஆடலரசிகள் நானூற்றுவர் - 1
இராஜராஜரின் ஆற்றல்கள்
தஞ்சைப் பெரியகோயில் - அதிட்டானம் - ஆய்வு
இராசராசனும் சோழமகாதேவியும் - 3
தமிழுடன் 5 நாட்கள் - 3
தொறுத்த வயலும் பூத்த நெய்தலும்
இதழ் எண். 75 > இலக்கியச் சுவை
தொறுத்த வயலும் பூத்த நெய்தலும்
ரிஷியா


விற்கொடி செம்மாந்து பறக்கும் சேரநன்னாடு. இயற்கையோடு ஒன்றிவாழும் நன்மக்களைக் கொண்ட நல்பூமி. குமட்டூர் கண்ணனார் மருதவழியில் வருகிறார். வயல்களில் நடவு நடைபெறும் காட்சி நிகழ்கின்றது. தன்னைக் காக்கும் புரவலனான சேரமன்னனின் வெற்றிச் சிறப்பைப் பாடுகின்றார். அப்பதிற்றுப்பத்துப் பாட்டில் அந்நாளைய இயற்கை உழவு முறைகள் அவரால் இலக்கியம் பதிவு பெறுகின்றது. காண்போம் என்னவென்று அதை.

பதிற்றுப்பத்து : 13 : 1-4

ஆசிரியர் : குமட்டூர் கண்ணனார்

வண்ணம் : ஒழுகு வண்ணம்

தூக்கு : செந்தூக்கும் வஞ்சித்தூக்கும்

பெயர் : பூத்த நெய்தல்


"தொறுத்த வயல் ஆரல் பிறழ்நவும்,
ஏறுபொருத செறு உழாது வித்துநவும்
கரும்பின் பாத்திப் பூத்த நெய்தல்"


விளக்கம் : ஆட்டுக்கிடைகள் கட்டப்பட்ட வயல்கள் நீர் நிரம்பியமையால் ஆரல் மீன்கள் துள்ளித்திரியும் இடங்களாயின.

ஏறுகள் தம்முள் போரிட்டதால் வயல்கள் உழ வேண்டாதபடி சேறாகி விதை விதைப்பதற்கு உரியவாயின. கரும்பு நடப்பட்டுள்ள பாத்திகளில் நெய்தற்பூக்கள் மலர்ந்துள்ளன.

தொறுத்தல் என்பது கிடைகட்டுதலைக் குறிக்கும். இது பண்டைய தமிழர்களின் இயற்கை உழவு முறைகளில் ஒன்றாகும். வேனில் பருவத்தே நிலத்திற்கு உரம் சேர்க்கும் வகையில் ஆடுகளை இரவுப் பொழுதுகளில் வயல்களில் உறங்கச் செய்வர்.

ஆடுகளின் எச்சங்கள் வயலுக்கு நல்ல இயற்கை உரமாகும். ஆட்டினத்தைத் தங்கவைக்கும் செயல் கிடைகட்டுதல் என்பதாம். தொறு என்றால் ஆட்டுநிரையைக் குறிக்கும். "ஏறு பொருத செறு" என்பதும் இயற்கை உழவுமுறை உத்திகளில் ஒன்றாகும்.

இயற்கை உணவுகளை உண்டு, இயற்கையோடு இயைந்த வாழ்க்கை வாழ்ந்து வீரம் வளர்த்தார்கள் பண்டைய தமிழர்கள். இன்றைய தமிழர்களோ பன்னாட்டு நிறுவனங்களின் உணவுகளை, பானங்களைப் பெருமையுடன் உண்டு, உடல்நிலை கெட்டு, வீரம் (அப்படின்னா?) மறந்து வாழ்கிறார்கள், மீசை இல்லாமல்.
this is txt file
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.