http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[176 Issues]
[1745 Articles]
Home About US Temples Facebook
Issue No. 100

இதழ் 100
[ அக்டோபர் 2013] நூறாவது இதழ்


இந்த இதழில்..
In this Issue..

வரலாற்றுக்குத் தலைவணங்கி..
ஒரு மன்னரும் ஒரு கோயிலும் - 1
பட்டணம் அகழாய்வுகளும், சங்ககாலத் துறைமுகம் முசிறியும்
காஞ்சி வைகுந்தப்பெருமாள் திருக்கோயில் - கலைப்படத் தொகுப்பு
இராமனை அறிதல்
Thirumeyyam - 6
Chola Ramayana 09
தப்பிப் பிழைத்த தமிழ்க் கூத்து - 1
தேடலில் தெறித்தவை - 7
சுவர்ச் சிற்பம் தீட்டும் காவியம்
சேக்கிழாரும் அவர் காலமும் - 7
ஆலக்கோயில் அமைந்த திருக்கச்சூர்
மீண்டெழுந்த சோழர் பெருநாள்
வரலாற்றின் தூண்டலில்...
சீயமங்கலம் அவனிபாஜன பல்லவேஸ்வரம்
பாதையில் கால்கள் பதியுமுன்..
மங்கல இசை மன்னர்கள் - பி.எம்.சுந்தரம்
வாசிப்பில் வந்த வரலாறு - 4
வீரமிகு புன்னகையே! வெற்றிவாகையே!
இதழ் எண். 100 > கலையும் ஆய்வும்
தேடலில் தெறித்தவை - 7
மு.நளினி, அர.அகிலா
விலக்குவதும் ஒரு தண்டனைதான்


எறும்பியூர் பாடல் பெற்ற தலம். மலை மேல் கோயிலாய் இங்கு விளங்கும் எறும்பியூர் ஆழ்வார் விமானம் முற்சோழர் காலக் கட்டுமானம். கட்டியவர் இவர்தான் எனச் சுட்டும் கல்வெட்டோடு விளங்கும் மிகச் சில தமிழ்நாட்டுக் கோயில்களில் இதுவும் ஒன்று. கிளியூர் நாட்டுச் சிறுதவூரில் வாழ்ந்த வீரநாராயணன் எனும் செம்பியன் வேதிவேளார் எடுப்பித்த இக்கோயில், அப்பெருந்தகையின் திருப்பணிகளைக் கல்வெட்டுகள் வழி வெளிப்படுத்திக் கொண்டுள்ளது.

வேதிவேளார் எறும்பியூருக்கும் இக்கோயிலுக்கும் செய்த பணிகளுள் கோயில் அருகே மலை மேல் சத்திரம் ஒன்றை அமைத்தமை குறிப்பிடத்தக்கது. நாளும் பதினைந்து அந்தணர்கள் உணவருந்துமாறு தொடர்ந்து உணவு வழங்க வாய்ப்பாக இரண்டு வேலி ஏழு மா நிலத்தை பலரிடம் விலைக்குப் பெற்ற செம்பியன் வேளார், அந்நிலத்தையும் உணவு வழங்கும் பொறுப்பையும் ஸ்ரீகண்டசதுர்வேதிமங்கலத்து சபையிடம் ஒப்புவித்தார். இருநாழி அரிசியும் கறிகாய் ஒன்றும் புளிங்கறி ஒன்றும் புழுக்குக்கறி ஒன்றும் நெய் அரைப்பிடியும் தயிர் உரியும் இரண்டு பாக்கும் வெற்றிலையும் அந்தணர் ஒருவருக்கான உணவாக அமைந்தன.

முற்சோழர் காலத்தில் நிலத்தின் மீது கொள்ளப்பட்ட இறை, எச்சோறு, வெட்டி, வேதினை உட்பட்ட அனைத்து வரிகளையும் ஆண்டுதோறும் செலுத்த வாய்ப்பாக வரிக்கான வைப்புத் தொகையை வேதிவேளார் சபையிடம் செலுத்தினார். கல்வெட்டின் முதலும் இடையுமான பகுதிகள் சொல்லும் செய்தி இது. இது போன்ற கொடைச் செய்திகள் இயல்பாகக் கல்வெட்டுகளில் வெளிப்படும் தரவுகள்தான்.

கல்வெட்டின் கடைப்பகுதியே தேடலில் தெறித்த முத்து.

வரிக்காப்பாக வைப்புத் தொகை செலுத்தப்பட்ட நிலையில், அந்நிலத்துக்குரிய வரியினங்களைக் காட்டுமாறு சபை நடவடிக்கையின் போது உறுப்பினர்கள் யாரேனும் எழுந்து கேட்டால், பிற சபை உறுப்பினர்கள் அவருடனான நெருக்கத்தைத் (அந்யோந்ய சகாவாசம்) தவிர்ப்பதுடன், அவர் சார்ந்த வைதிகச் சடங்குகளையும் (சுப ஸ்பரிச புண்யஹாங்கள்) தவிர்ப்பர். வரியினங்களைக் காட்டுமாறு கேட்டவரையும் அப்படிக் கேட்டபோது சபையில் உடனிருந்தவரையும் தண்டிக்கும் விதமாகச் சிவனடியார்கள் தாங்கள் விரும்பும் களத்தில் தாங்கள் வேண்டும் அளவிற்கான பொன்னை அவர்கள் தண்டமாகச் செலுத்துமாறு செய்யலாம்.

ஸ்ரீகண்டசதுர்வேதிமங்கலத்துப் பெருங்குறி சபை தெரிவித்திருக்கும் இவ்விரு நிலைப்பாடுகளும் அறக்கட்டளை தொடர்பான தரவுகளுடன் இணைந்த நிலையில் கோயிலில் கல்வெட்டாக இடம்பெற்றன. இந்த ஒப்பந்தத்தையும் அறிவிப்பையும் ஊர் மத்யஸ்தரான தர்ம பிரியன் கலிவிசையன் தருணேந்து சேகரன் எழுத்து வடிவமாக்கினார்.this is txt file
       
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.