http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[176 Issues]
[1745 Articles]
Home About US Temples Facebook
Issue No. 100

இதழ் 100
[ அக்டோபர் 2013] நூறாவது இதழ்


இந்த இதழில்..
In this Issue..

வரலாற்றுக்குத் தலைவணங்கி..
ஒரு மன்னரும் ஒரு கோயிலும் - 1
பட்டணம் அகழாய்வுகளும், சங்ககாலத் துறைமுகம் முசிறியும்
காஞ்சி வைகுந்தப்பெருமாள் திருக்கோயில் - கலைப்படத் தொகுப்பு
இராமனை அறிதல்
Thirumeyyam - 6
Chola Ramayana 09
தப்பிப் பிழைத்த தமிழ்க் கூத்து - 1
தேடலில் தெறித்தவை - 7
சுவர்ச் சிற்பம் தீட்டும் காவியம்
சேக்கிழாரும் அவர் காலமும் - 7
ஆலக்கோயில் அமைந்த திருக்கச்சூர்
மீண்டெழுந்த சோழர் பெருநாள்
வரலாற்றின் தூண்டலில்...
சீயமங்கலம் அவனிபாஜன பல்லவேஸ்வரம்
பாதையில் கால்கள் பதியுமுன்..
மங்கல இசை மன்னர்கள் - பி.எம்.சுந்தரம்
வாசிப்பில் வந்த வரலாறு - 4
வீரமிகு புன்னகையே! வெற்றிவாகையே!
இதழ் எண். 100 > இலக்கியச் சுவை
வீரமிகு புன்னகையே! வெற்றிவாகையே!
ரிஷியா
வீரச்சமரில் வெற்றி பெற்றோர் சூடி மகிழ்வது வாகை மரத்தின் மென்மலர்களையே. நீண்ட காம்புகளை உடைய வாகைப் பூக்கள் பெரும் புகழுக்குரியவை. ஏனெனில் இந்நறுமலர்கள் அழகிய கண்ணிகளாகவும் (தலை மாலை) எழிலார்ந்த தார்களாகவும் வெற்றி பெற்ற வீரத் திருமகன்களின் தலையையும் விழுப்புண்கள் சுமந்த மார்புகளையும் அலங்கரித்தன.

வெற்றிப் புகழுக்குரிய வாகைப் பூக்களின் அழகினை வண்ண எழில் மஞ்ஞையின் கொண்டைக்கு உவமையாய்ப் பாடுகிறான் குறுந்தொகைக் கவி. அப்பாடல் இதோ..

'குமரி வாகைக் கோல் உடை நறுவீ
மடமாத் தோகை குடுமியில் தோன்றும்..'
(குறுந்தொகை - 347:2-4)

மேலும் பதிப்புற் பத்து புலவன் மகரந்தக் கேசரங்கள் கொண்ட வாகை நன்மலர்களை 'துய்வீ வாகை' (ப.பத்து 53:23) எனப் பாடுகிறான்.

போர்க்களத்தில் வெற்றிப் புன்னகைகளையும் பெரும் புகழையும் கண்ட வாகைப் பூக்கள் சங்க காலத் தமிழர்களின் திருமண வைபவத்திலும் முக்கிய இடம் பெறுகின்றன.

காப்புக் கட்டுதல் என்பது சங்க காலத் திருமணச் சடங்குகளில் ஒன்று. மென்பூக்களான வாகையோடு புல்லிய புறத்தைக் கொண்ட அதன் இலையையும் அறுகம்புல்லின் கழுவிய நீலமணி போன்ற கரிய இதழும் குளிர்ச்சியான மணமும் கொண்ட அரும்புகளை வெண்மையான நூலில் காப்பாகக் கட்டினார்கள். அகத்திணை படம்பிடிக்கும் மருத த்தின் அந்த அழகிய நிகழ்வு இதோ விற்றூற்று மூதெயினனாரின் வரிகளில்..

'மென்பூ வாகைப் புன்புறக் கவட்டிலை
பழங்கன்று கறித்த பயம்பல் அறுகைத்
தழங்கு குரல் வானின் தலைப்பெயற்கு ஈன்ற
மண்ணுமணி அன்ன மாஇதழ்ப் பாவைத்
தண் நறு முகையொடு வெண்நூல் சூட்டித்..
- அகம் 136:10-14

இவ்வாறு வாகைப்பூக்கள் சங்க கால மக்களின் அகம் புறம் வாழ்வியலோடு இணைந்து மணம் வீசுவதைக் காண்கிறோம். வீரத்தின் வெற்றியை அணிந்த மென் வாகைப்பூக்கள் உயிர்க்காதலுக்கு வீரக் காப்பாக அமையும் அழகியலை சங்க கால மக்களின் வாழ்வியலில் கண்டு மகிழ்கிறோம்.

இயற்கையோடு இயைந்து வாழ்வியல் மறைந்துபோய் வெகுநாட்களாகிவிட்டன.

வீரத் தமிழன் வாகைப்பூக்களைச் சுடும் நாள் எந்நாளோ?

this is txt file
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.