![]() |
![]() |
![]() |
http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [181 Issues] [1800 Articles] |
Issue No. 104
![]() இதழ் 104 [ பிப்ரவரி 2014] ![]() இந்த இதழில்.. In this Issue.. ![]() |
தொடர்:
ஆய்வுப்பாதையில் ஆங்காங்கே
ஒன்பது மற்றும் பத்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த முற்சோழர் கட்டுமானக் கோயில்களை ஆய்வு செய்ய முற்படும் போது அவர்களின் சமகாலக் குறுநில மன்னர்களான முத்தரையர், வேளிர் மற்றும் பழுவேட்டரையர்களின் கோயில்களையும் காண நேரிட்டது. இவ்வரச மரபுகளின் தலை சிறந்த படைப்புகளாகக் கீழ்க்கண்ட திருக்கோயில்களைக் குறிப்பிடலாம். 1. நார்த்தாமலை விஜயாலய சோழீஸ்வரம் (முத்தரையர் படைப்பு) 2. கொடும்பாளூர் மூவர் கோயில் (வேளிர் படைப்பு) 3. பழுவூர் அவனி கந்தர்ப்ப ஈசுவர வளாகத் திருக்கோயில்கள் (பழுவேட்டரையர்கள் படைப்பு) இம்மூன்று கோயில்களையும் ஒப்பு நோக்கும்போது ஒரு வியப்புக்குரிய உண்மை புலனாகியது. அது என்னவெனில் இவை மூன்றுமே மேற்கு நோக்கி அமைந்துள்ள திருக்கோயில்கள் என்பதாகும். முற்சோழர் திருக்கோயில்களுள் பெரும்பாலானவை கிழக்கு நோக்கி அமைந்திருக்க, அவர்களின் சமகாலக் குறுநில மன்னர்கள் அனைவரும் மேற்கு நோக்கிய திருக்கோயில்களை எழுப்பியதன் பின்னணியில் ஏதேனும் குறிப்பிட்ட காரணிகள் இருக்குமா? என்பது ஆய்விற்குரியது. ![]() நார்த்தாமலை விஜயாலய சோழீஸ்வரம் (Courtesy – Google earth) ![]() நார்த்தாமலை விஜயாலய சோழீஸ்வரம் ![]() கொடும்பாளூர் மூவர் கோயில் (Courtesy – Bing earth) ![]() கொடும்பாளூர் மூவர் கோயில் ![]() பழுவூர் அவனி கந்தர்ப்ப ஈசுவர வளாகத் திருக்கோயில்கள்(Courtesy – Google earth) ![]() தென்வாயில் ஸ்ரீகோயில் ![]() வடவாயில் ஸ்ரீகோயில் this is txt file� |
![]() சிறப்பிதழ்கள் Special Issues ![]() ![]() புகைப்படத் தொகுப்பு Photo Gallery ![]() |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |