http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[176 Issues]
[1745 Articles]
Home About US Temples Facebook
Issue No. 104

இதழ் 104
[ பிப்ரவரி 2014]


இந்த இதழில்..
In this Issue..

தமிழ் அமுதம்
தேடலில் தெறித்தவை - 10
Chola Ramayana 11
பாலசுப்பிரமணியசுவாமி திருக்கோயில் - கண்ணனூர்
Gokarneswara - 2
ஆய்வுப் பாதையில் ஆங்காங்கே - 2
அம்பர் பெருந்திருக்கோயில்
அறுவர்க்கு இளையநங்கை - 2
ஆய்வுப்பாதையில் ஆங்காங்கே - 1
வட்டணை ஆடல் கண்ட திருவாய்மூர் திருக்கோயில்
Book Street Bonanza-2
இதழ் எண். 104 > கலையும் ஆய்வும்
பாலசுப்பிரமணியசுவாமி திருக்கோயில் - கண்ணனூர்
சு.சீதாராமன்
அமைவிடம்

புதுக்கோட்டையிலிருந்து தென்மேற்கில் 26 வது கி.மீ தொலைவில் திருமயம் தாலுக்கவில் அமைந்துள்ளது. இத்திருக்கோயில் இந்திய தொல்பொருள் ஆய்வு (ASI) நிறுவனத்தின் பராமரிப்பில் இருப்பதால் நல்ல நிலையில் உள்ளது.


கண்ணனூர் அமைவிடம். Courtesy:GoogleMaps



கண்ணனூர் அமைவிடம். Courtesy:GoogleMaps



கண்ணனூர் அமைவிடம். Courtesy :Google Earth


திருக்கோயில் அமைப்பு

பாலசுப்பிரமணியசுவாமி திருக்கோயில், விமானம், முகமண்டபம், அந்தராளம், மகாமண்டபம் என்ற அமைப்பில் அமைந்துள்ளது உபானம் (இருந்திருக்கவேண்டும்-மண்ணில் புதைந்திருப்பதால் காண இயலவில்லை), ஜகதி (பாதி மண்ணில் புதைந்துள்ளது,) எண்பட்டைக் குமுதம், பாதங்களுடன் கூடிய கண்டப்பகுதி மற்றும் பட்டிகையுடன் கூடிய பாதபந்த தாங்குதளம் கொண்ட ஒரு தள வேசர விமானம்.


கண்ணனூர் திருக்கோயில் - தென்புறம்


சுவர் நான்முக அரைத்தூண்களுடன் அமைய தூண்களின் எளிய விரிகோணப் போதிகைகள் உத்திரம் தாங்குகின்றன அரைத்தூண்கள் கலசம்,கும்பம் பாலிகை பெற்று உரிய உறுப்புகளோடு அமைந்துள்ளன விமானத்தின் சுவர்பகுதியில் மூன்று பக்கங்களிலும் மத்தியில் கோட்டங்கள் காட்டப்பட்டாலும் தென்பகுதியில் மட்டுமே தட்சிணாமூர்த்தி இடம்பெற்றுள்ளார்.

கருவறைப்பகுதியில் கோட்டங்கள் காட்டப்பட்டாலும் கருவறை மற்றும் முகமண்டபம் பத்திப்பிரிப்பின்மை பெற்றே அமைந்துள்ளது. போதிகைகள் தாங்கும் உத்தரத்திற்கு மேல் வாஜனமும் அதற்குமேல் வலபியும் கூரையும் அமைந்துள்ளன. வலபிப்பகுதியில் பூதவரி காட்டப்பட்டுள்ளது. கூரைப்பகுதியின் முன்னிழுப்பு கபோதமாக செதுக்கப்பட்டு இடையிடையே கூடுகள் கொண்டு அமைந்துள்ளது.

கபோதத்திற்கும் பூதவரிக்குமான இடைவெளி மிகவும் குறைவாக உள்ளது. இதன் ஓரப்பகுதியில் கொடிக்கருக்குகள் காட்டப்படுகின்றன கொடிக்கருக்குகளுக்கு கீழும் கபோதக்கூடுகளுக்கு இடதும் வலதும் தொடர்ந்து சந்திரமண்டலம் காட்டப்பட்டுள்ளது.


கண்ணனூர் திருக்கோயில் - வடபுறம்


கருவறைக் கோட்ட அணைவுத்தூண்கள் துணைக்கம்பிலிருந்து நான்முக அரைத்தூண்களாக எழுகின்றன.. இவை அளவில் சுவர் தூண்களை விட சற்று சிறியனவாக உள்ளன. இக்கோட்டங்களில் தெற்கு கோட்டம் தவிர்த்து ஏனைய கோட்டங்களில் சிற்பங்கள் இல்லை. கோட்டங்களின் மேலே மகரதோரணங்கள் மூன்றுபுறமும் உருவாக்க முயற்சி செய்யப்பட்டு சிற்பங்கள் பெறாமல் காட்டப்பட்டுள்ளன.

கருவறைக் கட்டுமானத்தின் கபோதத்தில் மூன்று பக்கத்திலும் பக்கத்திற்கு நான்கு கபோதக்கூடுகள் உள்ளன.,

கூரைக்கு மேலே பூமிதேசமும் அதற்கு சற்று உள்ளடங்கிய நிலையில் கூரையின் மேற்பரப்பில் நான்கு மூலைகளிலும் நின்ற நிலையில் யானைச்சிற்பங்களும் காட்டப்பட்டுள்ளன. இவ்வானைச்சிற்பங்களை இவ்விமானத்தில் உறையும் சுப்பிரமணியரின் வாகனமாகக் கொள்ளலாம் என்பதற்கு சான்றாக பாண்டியர் ஒரு கல் தளியான கழுகுமலை மற்றும், பல்லவர் கட்டுமான கோயிலான காஞ்சி கயிலாசநாதர் ஆகிய கோயில்களின் மேல்தள மூலைகளில் அமர்த்தப்பட்ட நந்திகளைச் சுட்டலாம் (நன்றி- பழுவூர் பக்கம் -69 –டாக்டர் இரா.கலைக்கோவன்)

பூமிதேசத்தின் நான்கு மூலைகளிலும் இவ்வானைச்சிற்பங்கள் வசதியாக நிற்க வேதிகை பீடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால் இன்றைய நிலையில் இவ்வானைகள் பீடங்களிலிருந்து சற்று விலகி உள்ளடங்கி நிற்கின்றன. இப்பீடங்களடங்கிய பகுதியில் பூமிதேசத்தின் யாளி வரித்தொடர்ச்சி காணப்படாமையால் இவ்வேதிகை உறுப்புகளை இவ்வானைகள் நிற்பதற்குறிய பீடங்களாக நாம் கருதலாம். இப்பீடங்கள் தவிர்த்த யாளிவரி சீறிப்பாயும் சிம்மயாளிகளாக காட்டப்பட்டுள்ளன.


கண்ணனூர் திருக்கோயில் - மேற்குப்புறம்


தளக்கூரையின் நடுப்பகுதியில் பூமிதேசப்பரப்பின் மேல் , வட்ட வடிவில் வேதிகையும் அதன் மீது கிரீவ சுவரும் எழுப்பப்பட்டுள்ளன. கலசம்,கும்பம் பாலிகை,போதிகை போன்ற உரிய உறுப்புகள் பெறாமல் உள்ள அரைத் தூண்களுக்கிடையில் கிரீவ கோட்டங்கள் அமைந்துள்ளன. இக்கோட்டங்கள் அமைந்துள்ள பகுதிகளில் மட்டும் வேதிகை உள்ளிழுக்கப்பட்டு துண்டிக்கப் பட்டுள்ளது. அதே சமயம் இக்கோட்டங்கள் அமைந்துள்ள பகுதிகளின் அரைத்தூண்களின் மேல் எழும் உத்திரம்,வாஜனம்,வலபி முன்னிழுக்கப்பட்டு வலபியில் பூதவரி காட்டப்பட்டுள்ளது. இக்கோட்டங்கள் தவிர்த்த ஏனைய இடங்களில் தூண்கள் ஏதும் காணப்படவில்லை.

கிரீவச்சுவர் மற்றும் அரைத்தூண்களுக்கு மேற்பகுதியில் உத்திரமும் அதனைத்தொடர்ந்து வாஜனமும் உள்ளன. வாஜனத்தின் மீதமர்ந்த வலபிப்பகுதியில் பூதவரி காட்டப்பட்டுள்ளது. கிரீவக்கோட்டத்தின் மேலே சிகரத்தில் காட்டப்பட்டிருக்கும் தோரண வளைவுடன் கூடிய கூடுகள் நாசிகைகளின் மேலுள்ள கூரை உறுப்புகளின் மேல் அமைந்துள்ளன. இந்நாசிகைக்கோட்டங்களில் தூண்களுக்கு இடைப்பட்ட பகுதியில் கிரீவச்சுவரில் நின்ற நிலையில் திருமேனிகள் காட்டப்பட்டுள்ளன. இவற்றுள் கிழக்கு,வடக்கு,தெற்கு நீங்கலாக மேற்கில் மட்டும் இத்திருமேனி பாதியாக உடைந்து இடுப்பிற்கு மேலுள்ள பகுதியே காணக் கிடைக்கிறது. கிரீவத்தையடுத்து வட்டமான வேசர சிகரம் மேலே தூபியுடன் அமைந்துள்ளது. பல கற்களடுக்கிய கட்டுமானமாய் அமைந்த சிகரத்தில் கிரீவ கோட்டங்களுக்கு நேர் மேலாக நான்கு முதன்மைத்திசைகளிலும் தோரண வளைவுகள் காட்டப்பட்டுள்ளன. இத்தோரண வளைவுகளின் நடுவிலுள்ள குழிந்த பகுதிகள் அரைத்தூண்களின் மேல் எழும் முன்னிழுக்கப்பட்ட உத்திரம்,வாஜனம்,வலபி மற்றும் பூதவரிக்கு மேலாகக் காட்டப்பட்டுள்ளன. வடக்கிலும் கிழக்கிலும் அமைந்த தோரண வளைவுகளின் இருபுறமும் கொடிக்கருக்குகள் காணப்படுகின்றன.

மேற்கிலும் தெற்கிலும் அமைந்த தோரண வளைவுகளின் இருபுறமும் கொடிக்கருக்குகள் காணப்படவில்லை. இவ்வளைவுகளின் மேற்பகுதி சற்று வளைந்து மேலிழுக்கப்பட்டு,குழிந்த பகுதிகளில் ஏதும் இல்லாமலும் காட்டப்பட்டுள்ளன. தூபிக்குடத்திற்கு கீழே சிகரத்தின் மேற்பகுதியில் பெரிதும் சிறிதுமாக இரண்டு தாமரை வரிகளும் , குடத்தின் கீழ்பகுதிமற்றும் மேல்பகுதியிலும், குடத்தின் நுனிப்பகுதியின் கீழும் மேலும் தாமரை வரிகள் செதுக்கப்பட்டுள்ளன.

முகமண்டபம்

கருவறையை அடுத்து கருவறையை விட சற்றே அகலம் குறைவாகவும், பத்திப்பிரிப்பின்மை பெற்றும் தோன்றும் முகமண்டபம் அமைந்துள்ளது முகமண்டப சுவர்ப்பகுதில் கோட்டங்கள் காட்டப்படவில்லை பாதபந்த தாங்கு தளத்தின் பட்டிகைக்குக்கு மேலுள்ள கம்பின் மேலெழும் சுவர் உரிய உறுப்புகளுடன் கூடிய நான்முக அரைத்தூண்களுடன் அமைய தூண்களின் எளிய விரிகோணப்போதிகைகள் உத்திரம் தாங்குகின்றன. போதிகைகள் தாங்கும் உத்தரத்திற்கு மேல் வாஜனமும் அதற்குமேல் வலபியும் கூரையும் அமைந்துள்ளன. வலபிப்பகுதியில் பூதவரி காட்டப்பட்டுள்ளது.முகமண்டப கட்டுமானத்தின் கபோதத்தில் தெற்குப்பக்கம் மூன்று கபோதக்கூடுகளும் வடக்குப்பக்கம் இரண்டு கபோதக்கூடுகளும் பெற்றுள்ளன. வடக்கு பக்க முக மண்டப கபோதத்தின் இரண்டாவதாக உள்ள கபோதக்கூட்டிற்கு கிழக்கே உள்ள கபோதத் தொடர்ச்சியின் அமைவானது மேற்கே உள்ள கபோதத்தொடர்ச்சியின் அமைவிலிருந்து அளவில் சுருங்கி மாறுபட்டிருப்பதைக் காணலாம்.. முகமண்டப வடக்கு கபோதமூலைப்பகுதியில் கொடிக்கருக்குகள் காட்டப்படவில்லை. கபோதக்கூடுகளுக்கு இடதும் வலதும் தொடர்ந்து சந்திரமண்டலம் காட்டப்பட்டுள்ளது முகமண்டப தெற்கு கபோதமூலைப்பகுதியில் கொடிக்கருக்குகள் காட்டப்படுகின்றன கொடிக்கருக்குகளுக்கு கீழும் கபோதக்கூடுகளுக்கு இடதும் வலதும் தொடர்ந்து சந்திரமண்டலம் காட்டப்பட்டுள்ளது.

அந்தராளம்

முகமண்டபத்திற்கும் மகாமண்டபத்திற்கும் இடையில் முகமண்டபத்தை விட சற்று உள்ளடங்கிய நிலையில் தென்புறம் நுழைவாயில் பெற்றும் வடக்குப்பகுதியில் பாதபந்தத்தாங்குதளம், சுவர் மற்றும் கூரை உறுப்புகள் பெற்றும் அடைக்கப்பட்டுள்ளது.

(தொடரும்)this is txt file
       
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.