http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[176 Issues]
[1745 Articles]
Home About US Temples Facebook
Issue No. 104

இதழ் 104
[ பிப்ரவரி 2014]


இந்த இதழில்..
In this Issue..

தமிழ் அமுதம்
தேடலில் தெறித்தவை - 10
Chola Ramayana 11
பாலசுப்பிரமணியசுவாமி திருக்கோயில் - கண்ணனூர்
Gokarneswara - 2
ஆய்வுப் பாதையில் ஆங்காங்கே - 2
அம்பர் பெருந்திருக்கோயில்
அறுவர்க்கு இளையநங்கை - 2
ஆய்வுப்பாதையில் ஆங்காங்கே - 1
வட்டணை ஆடல் கண்ட திருவாய்மூர் திருக்கோயில்
Book Street Bonanza-2
இதழ் எண். 104 > கலையும் ஆய்வும்
தேடலில் தெறித்தவை - 10
மு.நளினி, அர.அகிலா
புராண கணபதி-வாழைப்பழம்-சேனையார்

இறைவன் விமானத்தைச் சுற்றிய இறைக்கோயில் வளாகத்தில் சுற்றாலைத் திருமுன்கள் அமையத் தொடங்கிய காலத்தில் தென்மேற்கு மூலை, கணபதியான பிள்ளையாருக்கு ஒதுக்கப்பட்டது. சுற்றாலையில் மட்டுமல்லாது இறைவன் விமானத்தின் முன் அமைந்த முகமண்டபத் தென்கோட்டத்திலும் அவர் இடம் பெற்றார். தமிழ்நாட்டுக் கோயில் கல்வெட்டுகள் முதன்மை இறையைச் சுட்டுமாறு போல சுற்றாலைத் திருமுன்களில் குடிகொண்ட உடன்கூட்டத் தெய்வங்களைக் குறிப்பிடுவதில்லை. என்றாலும், சில முதன்மைக் கோயில்களிலேனும் இத்தெய்வங்கள் அறக்கட்டளைகள் பெற்று கல்வெட்டுகளுக்குள் அடைக்கலமாகியுள்ளன. அத்தகு வாய்ப்பு, பிற தெய்வங்களினும் கணபதிக்கே மிகுதியாகக் கிடைத்துள்ளது.

குடந்தை வட்டம் திருவிடைமருதூர் மகாலிங்கசாமி திருக்கோயிலில் காணப்படும் இராஜகேசரிவர்மரின் இரண்டாம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு (தெ. இ. க. தொ. 13: 7), இடைமருது அக்காலத்தே திரைமூர் நாட்டின் கீழ் இருந்ததைத் தெரிவிக்கிறது. காவிரியின் தென்கரைத் தலமான இடைமருதின் வளாகத்தில் இறை விமானத்தின் தெற்கே எழுந்தருளியிருந்த கணபதி ‘புராண கணபதி’ என்றழைக்கப்பட்டார். அவருக்கு நாளும் பத்து வாழைப்பழம் படையல் அளிக்க விரும்பினார் வடகரை மண்ணிநாட்டு அந்தண ஊரான (பிரமதேயமான) ஏமநல்லூரில் வாழ்ந்த குராலை துக்கைய கிரமவித்தன். இவர் கிழா நாட்டுக் கோனாரின் மேலாளர் (கன்மி). இடைமருதில் வாழ்ந்த பல்வேறு சமூகக் குழுக்களுள் சேனையார் குறிப்பிடத்தக்கவர். படைக்கு வீரர்களை வழங்கிய மறக்குழுவாக இவர்களைக் காண்கிறது கல்வெட்டுத் தொகுதி. இவர்களை வணிகக் குழுவாகவும் கருத இடமுண்டு.

துக்கையன் வாழைப்பழப் படையலுக்கு எட்டு ஈழக்காசுகளை முதலாகத் தந்து, தம் அறக்கட்டளையை நிறைவேற்றும் பொறுப்பினை இம்மறக்குழுவிடம் ஒப்படைத்தார். பொறுப்பினை ஏற்ற சேனையார் எட்டு ஈழக்காசு வழங்கிய வட்டியில் (பொலியூட்டு) பிள்ளையாருக்கு நாளும் பத்து வாழைப்பழம் படையலிட உறுதியளித்தனர். மேலோட்டப் பார்வைக்கு எளிய கொடைக் கல்வெட்டாகக் காட்சிதரும் கிரமவித்தனின் இந்த அறக்கட்டளைக் கல்வெட்டு, மூன்று சுவையான தகவல்களை முன் வைக்கிறது.

துர்க்கை என்ற பெண் தெய்வத்தின் பெயரை முற்சோழர் காலத்தில் அந்தண ஆடவர்களும் கொண்டிருந்தனர் என்பதற்கு துக்கைய கிரமவித்தனே சான்று. கல்வெட்டுகளில் அதிகம் அறியப்படாத சமூகக் குழுவான சேனையார் இங்கு அறக்கட்டளைப் பொறுப்பேற்கும் ஆளுமை நிறைந்த குழுவாக வெளிப்படுவது கருதத்தக்கது. சிறப்புப் பெயர்களுடன் சுற்றாலைத் தெய்வங்களைக் கல்வெட்டுகளில் சந்திப்பது அரிதினும் அரிது. பிள்ளையாருக்கே அந்த வாய்ப்புப் பிற தெய்வங்களினும் கூடுதலாக வாய்த்துள்ளது.

இடைமருதில் புராண கணபதி என்று பெயரேற்கும் அவருக்கே வாழைப்பழப் படையல். பொதுவாக, வாழைப்பழப் படையல் பெறுபவராய்க் கல்வெட்டுகளில் கண்சிமிட்டுபவரும் பிள்ளையாரே. தஞ்சாவூர் இராஜராஜீசுவரம் பிள்ளையாரும் வாழைப்பழப் படையல் பெற்றவர்தான். எண்ணிக்கைதான் மிகுதி. முகமண்டபத் தென்கோட்டப் பிள்ளையாரைச் சுற்றிச் சூழும் உடன்கூட்டத்தில் வாழைப்பழத்துடன் காட்சிதரும் அடியவர் கண்களை நிறைப்பவர். காணவேண்டுமா? புள்ளமங்கைக்கு வாருங்கள்.this is txt file
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.