http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[176 Issues]
[1745 Articles]
Home About US Temples Facebook
Issue No. 46

இதழ் 46 [ ஏப்ரல் 21, 2008 ]
இரா.கலைக்கோவன் மணிவிழா சிறப்பிதழ்


இந்த இதழில்..
In this Issue..

மணிவிழா நாயகர்
தவறுக்கு தண்டனை
திரும்பிப் பார்க்கிறோம் - 18
சிதையும் சிங்காரக் கோயில்கள் - 1
The Chola Temple at Pullamangai(Series)
வேண்டும் நல்வரம் கொள் விசயமங்கை
முதல் நாள் உலா
"கலை" வளர்த்த பயணங்கள்
குறள்வழி வாழும் குணாளர்
கலையே என் வாழ்க்கையின் திசைமாற்றினாய்!!
வணக்கத்துக்குரிய காதல் - சில குறிப்புகள்
Down the memory lane
கம்பன் ஏமாந்தான்
நெஞ்சில் உரமும் நேர்மைத் திறமும்
வரலாறே வாழ்வாக - வாழ்வே வரலாறாக... (கலைப்படத் தொகுப்பு)
"கலை" உணர்வு இனிது!!
வாட்டும் வாடையும் ஓடிய ஒன்பதும்
இதழ் எண். 46 > சுடச்சுட
தவறுக்கு தண்டனை
மு. நளினி
கழுதை மேல் ஆடவர் ஒருவர் அமர்ந்திருக்க, அவரைச் சுற்றி மூன்று பெண்களும் ஒரு சிறுவனும் நிற்கும் காட்சி தேர் ஒன்றிலிருந்து கண்டறியப்பட்டது. சிறிய குடுமியும் தொங்கு மீசையும் சுருக்கிய சிற்றாடையுமாய், 'என்னை மன்னித்து விட்டுவிடுங்கள்' என்பது போல் கைகளைக் கூப்பிய நிலையில் கழுதை மேல் அமர்ந்திருக்கிறார் அந்த ஆடவர். என்ன தவறு செய்தார் என்பது தெரியவில்லை! சுற்றியுள்ள மூன்று பெண்களுள் ஒருவர் கழுதைக்கு முன்னாலும் மற்றவர்கள் பின்னாலும் நிற்கின்றனர். பின்னால் நிற்கும் பெண்களில் ஒருவர் உயர்த்திப் பிடித்த சட்டியிலிருந்து எதையோ (சாணக்கரைசல்?) அந்த ஆடவரின் தலையில் ஊற்றுகிறார். இரண்டாவது பெண் காலியான சட்டி ஒன்றை இடக்கையில் பிடித்தபடி, துடைப்பம் பிடித்திருக்கும் வலக்கையை உயர்த்தி அந்த ஆடவரை அடிக்கும் மெய்ப்பாட்டில் உள்ளார். கழுத்தில் கண்டிகை அணிந்த வலப்புறப் பெண் கையில் கொண்டுள்ள செருப்புப் போன்ற பொருளை ஆடவரின் தலையில் அடிக்குமாறு போலப் பிடித்திருக்கிறார். மேலே நடக்கும் இந்தக் காட்சியைப் பார்த்தவாறு வலப்புறம் வயதில் சிறிய பையன் ஒருவன் நிற்பதைக் காணமுடிகிறது.



பெண்கள் மூவரும் சேலை அணிந்திருக்கிறார்கள். இத்தேர் செய்யப்பட்ட காலத்தில் சேலை அணியும் பழக்கம் வழக்கிற்கு வந்துவிட்டதை இதனால் அறியமுடிகிறது. செவியணிகள், தோள், கைவளைகள், கழுத்தணிகள் பெற்றுள்ள இப்பெண்களின் இதழ்க்கடையில் எள்ளல் புன்னகை பளிச்சிடுகிறது.

தவறு செய்தவர்களைக் கழுவேற்றும் காட்சி பல இடங்களில் ஓவியமாகவும் சிற்பமாகவும் இருப்பதைக் கண்டிருக்கிறோம். அது போல இங்கும் தவறு செய்தவர் தலையில் சாணியைக் கரைத்து ஊற்றி, செருப்பாலும் துடைப்பத்தாலும் அடித்துத் தண்டிக்கும் பழக்கம் பதினேழு, பதினெட்டாம் நூற்றாண்டுகளில் ஊரக வழக்கில் இருந்ததாகக் கொள்ளுமாறு இந்தத் தேர்ச் சிற்பம் அமைந்துள்ளது. ஒரு மரத்தச்சரின் வரலாற்றுப் பார்வையை மதுரை மீனாட்சியம்மன் கோயிலின் இந்தச் சிற்பம் வெளிப்படுத்துவதாகக் கொள்ளலாம்.
this is txt file
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.